Sunday, January 07, 2018

பன்றி,& பிராய்லர் கோழி கறியும் முஹம்மதும்! (ஓர் ஆய்வு😀😁)

பன்றி,& பிராய்லர் கோழி கறியும் முஹம்மதும்! (ஓர் ஆய்வு😀😁)
பதிவின் தலைப்பை பார்த்தவுடன் மூமின்களுக்கு ஒவ்வாமையாக இருக்கக்கூடும் ...வருத்தபடாதீர்கள் மூமின்களே பன்றியை படைத்த அதே அல்லாஹ்த்தான் முஹம்மதையும் படைத்தான் என்று உங்கள் கஃல்பை/இதயத்தை ஆசுவாசபடுத்திக்கொள்ளுங்கள்
முஸ்லிம்கள் ஆடு,மாடு கோழியெல்லாம் சூப்பரா மசாலா போட்டு குருமா,கபாப்,சாப்பீஸ் வருவல் ,சுக்கா, தாளிச்சா தனிகறி அது...இது ..என்று ஏக ரகளையா இருக்கும் ...சரி பன்றி கறியை சமைப்பிர்களா என்று கேட்டால் உங்களை கொலை வெறியுடன் துரத்துவார்கள் ...ஏன் பன்றியை தின்னக்கூடாது என்பதற்கு குரானிலோ ,ஹதீஸ்களிலோ எந்தவொரு அறிவார்ந்த விளக்கமும் இல்லவே இல்லை குரானுக்கு விளக்கம் சொல்லவந்த முஹம்மதுக்கே விளக்கம் தெரியாத காரணத்தால் ..அந்த மேட்டரை முஹம்மது அம்போன்னு விட்டுட்டார் இருந்தாலும் பிஜை , ஜாகீர் போன்ற கார்பெட் புரோகிதர்கள் நிறைய கதைகள் கூறி வழக்கம் போல் முஸ்லிம்களை முட்டாளாக்கி சீடி வியாபாரம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்..ஓகே...நாம் பதிவுக்கு செல்வோம்
பன்றிக்கறி சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி முஹம்மதின் குர்ஆனில் குறைந்தது நான்குஅத்தியாயங்கள் வரை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
//தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். ஸூரத்துல் பகரா 2:173
😀😀தானாக செத்தது ??? மனுசனுக்கு மட்டும்தான் அல்லாஹ் மலக்குகளை அனுப்பி "உயிரை" புடுங்குவான் போலே விலங்கெல்லாம் தானாக செத்துடுமாம் அப்புறம் யாரவது நிர்பந்தித்தால் பன்றி குருமாவை முஸ்லிம்கள்.சுவைத்துக்கொள்ளலாம் என்ற அனுமதியையும் தருகிறான் 😀😀😀
// செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; ஸூரத்துல் மாயிதா 5:3
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹியில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.)" ஸூரத்துல் அன்ஆம் (6:145
நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும், (தடைசெய்யப்பட்டதாகும்)
ஸூரத்துந் நஹ்ல் ( 16:115
செத்த மீன் ,இரால் ,நண்டு கருவாடு இவைகள் மட்டும் முஸ்லிம்களுக்கு கூடும் என்பது தனி கதை😁 செத்துப்போனது ஹராம் என்றால் அது கடலாய் இருந்தால் என்ன கரையாய் இருந்தால் என்ன?
மேற்கூதிய இவைகள் தான் முஸ்லிம்களை பன்றி கறியை உண்ணக்கூடாது என்று தடுக்கும் முஹம்மதின் குரான் வசனங்கள் இதுதான் ...ஆனால் இன்று பன்றி மனிதர்களுக்கான உணவு என்பதையும் தாண்டி மருத்துவ பயனீடு அதன் கொழுப்புகள் அழகு சாதன பயன்பாடு என்று வந்த பிறகுதான் முஸ்லிம்கள் தங்களை அறியாமலே பன்றிக்குள் தங்களின் ஈமான் சென்றுவிட்டதை தாமதமாக கண்டு சுதாரித்து வேறு வழி யின்றி பயான் செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள். இங்கு இன்னோரு கதையும் சுற்றுகிறது
இந்த பன்றியானது, நோவாவின் காலத்தில் அவர் உருவாக்கிய கப்பலில் இருந்த மிருகங்களின் கழிவுகலை அகற்றுவதற்காக படைக்கப்பட்டதாக ஒரு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு மௌலவி கூற கேட்டிருக்கிறேன்!லாஜிக்கிக்கா பேசுறானுங்களாம்😁😁
இப்படி இன்னோரு கதை!
//பன்றியின் இறைச்சி' என்று தான் வருகிறதே யொழிய பன்றியே ஹராம் என்று வரவில்லை. பன்றியைப் பற்றி படிப்பது, பன்றியைப் பற்றி ஆராய்ச்சி செய்வது இவை எல்லாம் இஸ்லாத்தில் தடை இல்லை. காரணம் இல்லாமல் ஒரு படைப்பை இறைவன் ஏன் படைக்க வேண்டும்?' என்று புலம்பும் அளவிற்கு முல்லாக்களும் முல்லாக்களில் அடிமைகளும் வந்து விட்டார்கள் ...இப்படியே போனால்..பன்றியை படைத்த அல்லாஹ்தான் " கஞ்சா" வையும் படைத்தான் என்ற வாதத்ற்கு நாளைய முல்லாக்கள் வரக்கூடும்! சரி குரான்வழி முஹம்மது மதுவை தடை செய்தார் காரணம் குரைஷியர்கள் மது பிரியர்களாக இருந்தார்கள் என்ற லாஜிக் இருந்தது ...குரான் வழி முஹம்மது வட்டியை தடை செய்தார் இதுவும் முஹம்மது வாழ்ந்த காலத்தில் அந்த பகுதியில் அந்த சமூகத்தில் இருந்தது அதை தடை செய்ததிலும் ஒரு லாஜிக் இருந்தது (வட்டி/லாபம்/ வரி இல்லாத வணிகமோ பொருதாரமோ கிடையாது என்பது வேறு கதை) ஆனால் எந்த குரைஷியர்கள் பன்றியை தன் தின,சிறப்பு உணவாக்கி வைத்திருந்தார்கள் ? குரைஷியர்களிடம் ஆடு மாடு ,கழுதை குதிரை ஒட்டக கறி உணவு முறை கள் இருந்ததாக ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கிறதே தவிர குரைஷியர்கள் ஆரம்பத்தில் பன்றிக்கறியை உணவாக பயன் படுத்தியதாக ஒரு ஆதாரமும் இல்லை பிறகு ஏன் முஹம்மது பன்றிகறியை தடை செய்தார்?
யாராவது குதிரை முட்டையை இனி உண்ணாதீர்கள் என்று தடை செய்தால் நாம் அவரை என்னக்கூறுவோம் ? அதையேத்தான் முஹம்மது செய்திருக்கிறார் அதாவது ஒரு சமூகம் தின்று அறியாத உணவையே .தின்னக்கூடாது என்று தடைசெய்கிறார் அதுவும் அல்லாஹ்வின் பெயரால் அப்படியென்றால் பன்றி தின்னாத குரைஷியர்களை பன்றியை உண்ணாதீர்கள் என்று தடுத்த ரகசியம்தான் என்ன?
இதுதான் அந்த ரகசியம்
7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது, அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். லேவியராகமம் 11:7
//8 இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம், இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. லேவியராகமம் 11:8 // 3 அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, ஏசாயா 65:3//
4 பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: ஏசாயா 65:4///
5 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில்வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள், இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள். ஏசாயா 65:5/
பைபிளில் ஐந்து இடத்தில் தடை செய்த பன்றியைத்தான் முஹம்மது தன் குரானில் நான்கு இடங்களில் தடுக்கிறார் அவ்வளவுதான் !/ குரானில் உள்ள பல செய்திகள் பைபிள் குப்பையிலிருந்து வந்ததுதான் ....இதை தவிர வேறு எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் முஹம்மது பன்றியை ஹராமாக்க வில்லை ! இதில் பெரும் காமெடி என்னன்னா பைபிள் தடுத்த பன்றிகறியை கிருத்துவர்களில் பலர் உண்டு மகிழ்கிறார்கள் ஆனால் முஹம்மதின் சமூகம் பன்றி ஹராம் என்று க்கூறிக்கொண்டே பன்றியை பயன் படுத்தி கொள்கிறது இன்றைய முஸ்லிம்கள் பன்றிகறிக்கு சொல்லும் லாஜிக் அக்கறி நம் குடலுக்கு ஏற்றதல்ல என்பதுதான் சரி பன்றி கறி உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்பதை ஒரு வாதத்திற்கா ஏற்றுக்கொள்வோம் இப்பொழுது பிராய்லர் கோழிக்கு வருவோம் முஸ்லிம்களின் வணிகத்திலும் உணவிலும் பிராய்லர் கோழி இரண்டர கலந்து விட்டது முஸ்லிம்கள் உண்ணாத பன்றிகறியில் இருக்கும் பிரச்சனையை விட பிராய்லர் கோழியில் எக்கசக்க பிரச்சனைகள் நோய்கள் இருக்கிறது இதை எதிர்த்து ஜாகிர் நாய்க் ,பிஜை ப்போன்ற எந்த மௌலவி"பயலுகளும்" பேசுவது இல்லையே ஏன்? பன்றிக்கறியில் பேசிய ஆரோக்கியம்,அறிவியல் எல்லாம் பிராய்லர் கோழியில் வரவில்லை?
பிராய்லர் கோழிக்கறியை உண்ணுவதால் ஏற்ப்படும் பிரச்சனைகளை கொஞ்சம் பார்ப்போம்
இக்கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள்.அதன் பாதிப்பு அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப் படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.
பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
சுற்று சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவக்குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி இப்படிக்கூறுகிறார்
“ பிராய்லர் கோழிகளை பொறுத்தவரை இப்போது மிகப் பெரிய வியாபாரமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதனால் அது சத்தான பொருள் என்பதிலிருந்து வேறு வடிவத்திற்கு மாறி வருகிறது. பிராய்லர் கோழிகளை வளர்ப்பில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கும், கால் மற்றும் வயிற்று பகுதிகள் அபரிதமான வளர்ச்சியடைவதற்கும், ஹார்மோன் ஊசிகள் என்று பல்வேறு வகையான ஊசிகளை போடுகிறார்கள், அதற்கு கொடுக்கப்படும் உணவுகளிலும் ரசாயணம் கலக்கிறார்கள். இது ஒவ்வொரு கோழிப்பண்ணைக்கும் வேறுபடும்.
அப்படியான ஊசிகளும், உணவுகளின் மூலமும் வளரும் கோழி மனிதர்களுக்கு பல பிரச்னைகளை தோற் றுவிக்கிறது. முக்கியமாக இதுமாதிரியான ஹார்மோன் ஊசிகளை போடும்போது. ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும் பெண்களுக்கு சிறு வயதில் பூப்படைதல் என்று பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை கொடுப்பதால் அதை சாப் பிடும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல்வேறு வகையான உடல் உபாதைகளை தோற் றுவிக்கிறது. இன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம்.
அமெரிக்க கம்பெனிகளும் லெக் பீஸைதான் நம்மிடம் முன்னிறுத்துகிறது. அதிலிருக்கும் அரசியல் மிக முக்கியமானது. கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் கன்ட்டன்ட் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அமெரிக்கர்கள் கோழிக்கால்களை சாப்பி டமாட்டார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கோழிக்கால்களை அவர்கள் வெறும் கழிவு பொருளாகத் தான் கருதுகிறார்கள்.
பெரிய பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் நம்மை நம்மை கோழி கால்களுக்கு அடிமைப்படுத் திவிட்டார்கள். கோழிக்கறி என்றாலே லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும். பிராய்லர் கோழிகளால் ஏற்படும் தீமைகளை super size என்கிற ஆவணப்படத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிக மாகவும் வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும், பிராய்லர் கோழிகளில் வெள்ளைக் கரு அதிகமாக இருக்கிறது. இப்போதைக்கு பிராய்லர் என்பது மக் களின் ஊட்டச்சத்து சார்ந்ததாக இல்லை. வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. பிராய்லர் கோழிகளால் இது மாதிரியான பிரச்னைகள் கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது” என்கிறார் இப்பொழுது ஜாகிர் நாய்க் பிஜை போன்ற புரோகித அரபி அடிமைகள் என்ன செய்யப்போகிறார்கள்? பிராய்லர் கோழிக்கு " ஹராம் " ஃபத்வா கொடுப்பார்களா? கொடுக்கமாட்டார்கள் ஏனென்றால் இங்கு ஒரு நபி வழி அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது அதாவது பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைவது இது அவர்களின் முன்மாதிரி முஹம்மதுவின் வழி முறையை செயல்படுத்த உதவுகிறது அல்லவா?
முஸ்லிம்கள் பன்றியை உண்ணாத பன்றியை வணக்க வழிபாட்டில் உண்ணாதே...உண்ணாதே என்று கூறுவதை விட்டு விட்டு உண்ணும் பிராய்லர் கோழியை தடுத்து க்கொள்ளட்டும் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் அவர்களின் பெண் குழந்தைகளின் வாழ்விற்கும் நல்லதாக அமையும் !

No comments: