Monday, January 08, 2018

விவசாயி எந்தப்பொருளையும் உற்பத்தி செய்ய தயார்தான். வணிகம்தாங்க சிக்கல்.

விவசாயி எந்தப்பொருளையும் உற்பத்தி செய்ய தயார்தான்.
வணிகம்தாங்க சிக்கல்.
அழுகக்கூடிய பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்தால் விற்கவே முடியாது.
தக்காளி நட்டால் அன்றே விற்க வேண்டும்.
கீரை மணிக்கணக்குதான்.
கத்தரி இரண்டு நாளுக்குள்.
இந்த ஆர்கானிக் வணிகர்கள் நடச்சொல்லி நச்சரிக்கிறார்கள்.
விளைந்தபிறகு எடுக்கச்சொன்னால் எனக்கு நாலு பாக்ஸ் போதுமென்பார்கள்.
நாற்பது பாக்ஸ் வந்திருக்கும்.
அடுத்து மார்க்கெட்டுக்கு தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.
பூச்சிக்கொல்லியின்றி, ரசாயனமின்றி விளைந்தவற்றின் உருவம், அளவு, நிறம் ஆகியவை கவர்ச்சியாக இருப்பதில்லை.
நீங்கள் ரசாயனமல்லாத முறையில் விளைவித்ததற்கு தண்டனையாக10%விலைகுறைப்பு கிடைக்கும்.
விளைச்சலும் சற்று குறைந்திருக்கும்.
உழைப்பு கூடுதல். ஆள்கூலியெனில் கூடுதல் செலவு.
உள்ளூர் கட்டில்கடை வணிகத்துக்கு மட்டும்தான் சரிவரும்.
பழைய கட்டில்கடை வியாபாரம்.
பெண்களுக்கான சிறுவாடு.
பெரிய அளவு உற்பத்தி இந்த இயற்கை வணிகர்களை நம்பி செய்வது முட்டாள்தனம்.
திருப்திக்காக என்கிறார்கள்.
திருப்திக்காக வேறு வருவாய் உள்ளவர்கள் செய்யலாம்.
விவசாயத்தையே நம்பியிருப்பவர்கள் என்ன செய்ய?

No comments: