Monday, January 08, 2018

நமது பாரம்பரிய அரிசி பற்றிய Whatsup பதிவு

நமது பாரம்பரிய அரிசி பற்றிய Whatsup பதிவு ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நல்ல விசயம்தான். பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்ததில் என்னுடைய கேள்விகள் மற்றும் அனுபவங்கள்.

  • கருப்பு கவுணி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி
  • புற்றுநோள் வராது இன்சுலின் சுரக்கும்
  • மாப்பிள்ளை சம்பா : நரம்பு, உடல் வலுவாக்கும், ஆண்மை
  • பெருகும்.
  • பசுங்கார் அரிசி  : சுகப் பிரசவம், தாய்ப்பால் பெருகும்
  • காட்டுயானம் : நீரழிவு, மலச்சிக்கல் புற்று நோய் சரியாகும்.
  • கருத்தக்கார்ர் : மூலம், மலச்சிக்கல் சரியாகும்.
  • புத்தர் சாப்பிட்டது.
  • காலா நாமக் : மூளை, நரம்பு, இரத்தம் சரியாகும்
  • மூங்கில் : மூட்டு வலி, முழங்கால் வலி சரியாகும்
  • அறுபதால் குறுவை : எலும்பு குணமாகும்
  • தங்கச்சம்பா : பல், இதயம் வலுவாகும்
  • கருங்குறுவை : இழந்த சக்தியை மீட்டுத் தரும்
  • குடை வாழை : குடல் நோய் சரியாகும்
  • கிச்சிலி சம்பா : இருடி, சுண்ணாம்பு சத்து அதிகம்
  • கார் அரிசி : தோல் நோய் சரியாகும்
  • நீலம் சம்பா : இரத்த சோகை நீங்கும்
  • சீரகச் சம்பா : அழகு தரும்
  • துய மல்லி : உள் உறுப்புகள் சரியாகும்
  • சேலம் சன்னா : தசை, நரம்பு வலுவாகும்
  • பிசினி அரிசி : மாதாவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
  • வாடான் சம்பா  : அமைதியான துக்கம்


1. மொத்தமாக அறுவடை முடிந்தவுடன் விற்று பணம் ஈட்ட முடியுமா?
என்னால் முடியவில்லை. ஆனால் 4/5 மூட்டைனு ஒரு 4 மாதத்தில் உண்மை தமிழர்களிடம் சில்லரையாக விற்கப்பட்டது.
பாடம்: பணம் மொத்தமாக தேவை என நினைக்கும் விவசாயிகள் இந்த பரிட்சையில் இறங்கி கதறவேண்டாம்.
2. உங்க பக்கத்து வயல் விவசாயி ஆந்திரா பொண்ணி போட்டு உங்கள் பாரம்பரிய ரகத்தினை விட இரு மடங்கு விளைச்சல் எடுத்து உடனே மொத்தமாக விற்று உங்களை ஏளனமாக பார்ப்பார்.
நீங்கள் தற்சார்பு வாழ்வியலை பின்பற்றாத விவசாயி இல்லை எனில் இந்த ஏளன பார்வையை கடந்து செல்வது கடினம்.
3. கருப்புகவுணி போட்டு விற்கமுடியாமல் கதறிய பல பசுமை/பச்சைபொய் விகடன் விவசாயிகளை நான் அறிவேன்.
பாடம்: Modern உண்மை தமிழன் பாரம்பரிய அரிசியை சாப்பிடுவதில்லை. Whatsup share செய்யும் உண்மை தமிழரில் 0.00000001% மட்டுமே பாரம்பரிய அரிசி சாப்பிடுகிறார்கள்.
4. நெல்லை ஒரு 6 மாதத்திற்க்கு பாதுகாக்க இடமும் அனுபவமும் இல்லை எனில் பாரம்பரிய நெல் சாகுபடியை கடந்து செல்லவும்.
மேலும் தொடரும்.....
இந்த பயணத்தில் எங்களுக்கு உதவிய உண்மை தமிழனில் ஒருவனான நண்பன் Sriram Ramani மற்றும் Surya farms and hotels owner திரு.மோகன்தாஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
உண்மை தமிழன் எனில் இந்த பதிவினை கடந்து செல்லவும்.

No comments: