Monday, January 08, 2018

விரக்தியான விவசாயியும்/ வெறுக்க தக்க வியாபாரமும்

# விரக்தியான விவசாயியும்/ வெறுக்க தக்க வியாபாரமும் #
இன்று நம் "வள்ளுவம் பண்ணையில்" இயற்கை வழி விவசாயத்தின் வழி விளைந்த அவரைகாய் 14.5கிலோ'வை உள்ளூர் ஏலக்கடையில் விற்க போனேன்
சந்தை ஏலத்தில் 1கிலோ 10ரூபாய் வீதம் 14கிலோ 140 ரூபாயாகவும் கமிசன் 10 ரூபாய் போக 130 ரூபாய் கொடுத்தனர். இதே போலதான் வெண்டைக்காயை , கொத்தவரையை , பரங்கியை மிக மலிவாககேட்டதால் திருப்பி எடுத்து வந்துவிட்டேன்.. உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் மனம்மகிழ கொடுத்து மகிழ்ந்தேன்.. அப்படியும் மீதமிருந்த காய்களை வற்றல் போட்டு வைத்து கொண்டோம்... (10கிலோ காயை காய வைத்து 1கிலோ வற்றலாக மாற்றிக் கொண்டோம்.) ஆனால் அவரைக்காயை அப்படி செய்ய இயலாது.. வந்த விலைக்கு கொடுத்துவிட்டு வந்தேன். நான் பாடுபட்டு விவசாயத்தில் விளைந்த காய்க்கு என்னால் விலை நிர்ணயம் செய்யமுடியவில்லை. ( நானாவது பரவாயில்லை, மற்றொரு விவசாயி கைகாசுபோட்டு நாலுமுறை உயிர்கொல்லி விசமடித்து பலபலவென 25கிலோ அவரைக்காய் கொண்டுவந்து ஏலக் கடையில் வேதனையுடன் கமிசன் போக 310 ரூபாயை விரக்தியிடன் பெற்றுச்சென்றார் 1கிலோவிற்கு 13ரூபாய் போட்டுகொடுத்தனர் )
நான் : ஏன் அந்த காய்க்கு மட்டும் 13 ரூபாய் ஏலம் போகிறதென கேட்டேன்...
🥒 : அது பலபலன்னு காய் ஒரே சைஸ்ல இருக்கே தம்பி என்றார் .
( பாவம் நாலு விச கொல்லி வேற செலவழிச்சுஇருக்காரு... போகட்டும்... நுகர்வோர் அறியாமையும்.. வியாபாரியின் விருப்பமும் அப்படியானதாக இருந்தால் ... பாவம் கெட்டதறியாத அந்த விவசாயி என்ன செய்வார்.. ஆனாலும் விடிய பனி'ல கிடந்து காய் பறிச்சு வந்து விலை கிடைக்காத அவஸ்தை... விவசாயிக்கு கஷ்டம் தான்... ) . இது இன்றல்ல காலம்காலமாக இருப்பது தான்.. ஆனாலும் நாம விழிக்க வேண்டிய நேரமிது...
முன்னதாகவே நண்பர்களிடம் முயற்சித்தேன் ... இயற்கை அங்காடி வைத்திருக்கும் நண்பர்களிடம் தந்துவிடலாம் என்றென்னி மதுரையிலிருக்கும் இயற்கை நேய நண்பர்களிடம் கேட்டேன் அவர்கள் இன்று வரை பதிலளிக்கவில்லை , பின்னர் திண்டுக்கலில் மகாத்மா அங்காடி நண்பர்கள் என் மீதான அன்பால் நல்ல விலைக்கே இருமுறை பெற்றுக் கொண்டனர் அவர்களுக்குள்ளே பகிர்ந்தும் கொண்டனர் ஆனாலும் அவர்களுக்கான நுகர்வோர் வட்டம் துவக்கமென்பதாலும் அதனால் நுகர்வோர் குறைவென்பதால் அதிகமாக விற்பனை செய்ய இயலவில்லை அதனால் அவர்களை சிரம்மபடுத்த நான் விரும்பவில்லை . ஆகவே அதற்கான சரியான கட்டமைப்பையும்.. நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன் . நண்பர்களின் ஆலோசனையை நாடுகிறேன்...
# இயற்கை வழி விவசாயம் செய்றத விட... செய்யுங்கனு சொல்றத விட அதற்கான நியாயமான சந்தைய அமைக்கிறதும் ... நுக்வோருக்கு விழிப்புணர்வ கொண்டுசேக்குறதும் தான் முக்கியம்னு நெனைக்கிறேன் . இதில் மாத சந்தைகளும் வார சந்தைகளும் காய்கறிகளை சந்தைபடுத்த ஒத்துவராது.. ஆக இயற்கை காய்கறிகளுக்கான சந்தையமைப்பை உருவாக்க மக்களை நோக்கி இன்னும் நிறைய பயணிக்கனும்... #

No comments: