Friday, January 12, 2018

பொங்கல் திருவிழா

எந்தவொரு சாதி , மத குறியீடுகள் இல்லாமல் இன்று தமிழர்களுக்கு என்றிருக்கும் ஒரே பெருவிழா அது பொங்கல் திருவிழா. மற்ற பண்டிகைகளைப்போல் தீட்டு என்பது பொங்கலுக்கு கிடையாது. பொங்கலன்று வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் உடலை எடுத்தவுடனே பொங்கல் வைத்து படையல் போடலாம். இதுவே பொங்கல் மத அடையாளமில்லாத பண்டிகை என்பதற்கான மிகச் சிறந்த சான்று.
மற்ற பண்டிகைகளை போல் ஹிந்துத்வம் பொங்கல் பண்டிகையையும் உண்டு செரித்து வருகிறது. மத குறியீடுகளுடன் கூடிய பொங்கல் கொண்டாட்டங்கள் அதிகரித்துவருவதே இதன் அறிகுறிகள். இதைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால் கார்த்திகை தீபம்போல் நாம் பொங்கலையும் இழந்துவிடுவோம் என்பதே உண்மை.
இதற்கு ஒரே தீர்வு அணைத்து மதத்தினரும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடுவது. இதன்மூலம் பொங்கல் பண்டிகையின் மீது பரவும் மத குறியீடுகள் தடுத்து நிறுத்தப்படும்.
மதங்களைத் துறந்து, சாதியைக் கடந்து எந்தவொரு குறியீடுகளும் இல்லாமல் தமிழர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

No comments: