Thursday, January 04, 2018

அன்னை மீனாம்பாள் சிவராஜ்



பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்களின் விடுதலைக்காக போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் பிறந்ததினம்  26/12/1904.
பெரியாருக்கு சரித்திர புகழ்வாய்ந்த பெயரான 'பெரியார்' என்ற பெயரை சூடியவரும் அன்னைதான்.
என் அன்புச் சகோதரி என்று அண்ணல் அம்பேத்கர் உள்ளன்போடு அழைத்ததும் அன்னை மீனாம்பாள் அவர்களைத்தான்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவி
சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயர்...
இன்னும் எண்ணற்ற பெரும் பதவிகளை அலங்கரித்தவர்.
30 நவம்பர் 1992 இல் நம்மை விட்டு மறைந்தார்.

No comments: