Friday, January 26, 2018

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்

//பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் - பிஜேபி RSS அடிவருடிகள் //
ஆமாம், அந்த காலகட்டத்தில் பழைமையான மொழி, நவீன காலத்துக்கு ஏற்ப்ப மாற்றமடையாத மொழி என்ற அர்த்தத்தில் பெரியார் சொன்னார்..
அவர் சொன்னது, வெறும் தமிழ் மொழி பற்று, மொழியில் புலமை மட்டும்மே, தமிழினத்தை உயர்த்திவிடாது.. ஆங்கில அறிவு & கல்வி அவசியம், அப்போது தான், தமிழர் வாழ்வு ஏற்றமடையும்.. இன்றைய நிலையை பார்த்தால், பெரியாரின் தொலைநோக்கு புரிகிறது.. தமிழ்நாட்டினர் பிற மாநிலத்தவர்களைவிட கூடுதலாக பெற்றுள்ள ஆங்கில மொழி அறிவால்தான், கணிணி & தொழில்நுட்ப வேலைகளி்ல் கோலோச்சுகிறார்கள்..
சரி, அந்த பொரியார், திருக்குறள் மாநாடெல்லாம் நடத்தியிருக்கிறார்..
பொங்கல் பண்டிகையை தமிழரின் கலாசார பண்பாட்டு விழாவாக அனைவரும் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தியவர் பெரியார்...
திருக்குறள் மாநாட்டை முதன்முதலில் நடத்தி, பார்ப்பனர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த குறளை, அனைவரும் அறியசெய்தவர் பெரியார்...
தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்து, இன்றைய காலத்துக்கு ஏற்றமுறையில் நவீனப்படுதியவர் பெரியார்... நமஸ்காரம் போய் வணக்கம் வந்த்து பொரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கத்தால்.. இதுபோன்று தமிழில் கலந்து, கெடுத்திருந்த பல சமஸ்கிருத சொற்களுக்கு பதிலாக, தமிழ் சொற்களை பழக்கத்திற்கு கொண்டுவந்தது, பெரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கம்..
அனைத்துக்கும் மேலாக தமிழர்களுக்கு சுயமரியாதையை ஊட்டியவர், தமிழ் மொழியை அழிக்கவந்த ஹிந்தி & சம்ஸ்கிருத ஆதிக்கங்களை எதிர்த்து போர்முழக்கம் செய்தவர், மூடபழக்கவழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கொடுக்கும் இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக்க காரணமானவர் தந்தை பெரியார்.....
ஆனால், உங்க பெரியவா காஞ்சி சங்கராச்சாரி தீய குறளை ஓதக் கூடாது என்ற பொருளில் தீக்குறளை ஓத மாட்டோம் என்கிறார்... நீச பாஷை என தமிழை இழிவுபடுத்துகிறார்.. தமிழ் கடவுள் முருகனுக்கு கூட தமிழில் அர்ச்சனை செய்தால் புரியாது, சமஸ்கிருத அர்ச்சனைதான் தேவை என்கிறார்..

No comments: