Sunday, January 21, 2018

இன்னும் பெண்கள் தனியே செய்ய இயலாத மனத்தடையில்தான் இருக்கிறார்கள்

”எங்க ஸ்கூல்ல வேலை பாக்குற மேக்சிமம் லேடி டீச்சர்ஸ் அவுங்க ஏடிம் கார்ட ஹஸ்பண்ட் கிட்டதான் கொடுத்திருக்காங்க “என்றார் ஒரு சிறுநகரத்து ஆசிரியர்.
“அவுங்க அவுங்க ஏடிம் கார்ட அவுங்க அவுங்க வெச்சிக்கிறதான முறை”
“கேட்டா ‘எதுக்கு அவரு எல்லா செலவையும் பாத்துகிறாரு. போக வர பஸ்ஸுக்கு காசு கொடுக்குறாரு. அல்லது பைக்ல டிராப் பண்றாரு. ஈவினிங் வீட்டுக்கு போகப் போறேன்” அவ்வளவுதான” என்பார்களாம்.
வேலை முடிந்த பிறகான ஒரு மாலைப் பொழுதை ஒரு சிறுநகரத்து பெண் அவள் இஷ்டப்படி போக்குவதற்கான தைரியத்தை இன்னும் அடையவில்லை.
- சும்மா ஒரு கடையில் போய் எதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டு போகலாம்.
- சும்மா தெருக்கடையில் நின்று டீ குடிக்கலாம்.
- சும்மா பிளாட்பாரக்கடையில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் வேடிக்கை பார்த்து ஏதாவது ஒரு புக் வாங்கி செல்லலாம்.
- மதியத்துக்கு மேல் திடீர் என்று சொல்லிவிட்டு ஒரு சினிமா பார்க்கலாம்.
இது மாதிரி நிறைய விஷயங்களை இன்னும் பெண்கள் தனியே செய்ய இயலாத மனத்தடையில்தான் இருக்கிறார்கள்.
அந்த மனத்தடையில் விளைவதுதான் ஏடிம் கார்டை கேள்வியே இல்லாமல் கணவனிடம் ஒப்படைப்பது.
இன்னொரு ஆசிரியை ஒரு சம்பவம் சொன்னார். ஒரு பயிற்சியின் போது மதியம் அவர் கூட வந்தவர்கள் அனைவரும் மீல்ஸ் சாப்பிடப் போய்க் கொண்டிருக்க “அட என்னப்பா டெய்லி மீல்ஸா” என்று இவர் மட்டும் தனியே சென்று சிக்கன் பிரியாணி சாப்பிட்டிருக்கிறார்.
இதைக் கண்டு சக நட்புகள் வியந்திருக்கிறார்கள். மெலிதாக கடிந்திருக்கிறார்கள்.
“நீங்க தனியா போய் பிரியாணி சாப்பிட்டீங்களா”
“எப்படித்தான் தனியா போனீங்களோ”
“பரவால்ல நீங்க நல்ல வேகம்தான்”
ஒரு பெண் தன் கூட்டத்தை விட்டு தனியே சிக்கன் பிரியாணி சாப்பிட்டது இன்னமும் பெரிய வியப்பான அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இப்படி வியப்பவர்கள்தான் பட்டிமன்றத்தில் சுகிசிவம், வக்கீல் சுமதி, பாரதி பாஸ்கர் போன்றவர்கள் சொல்லும் ஜோக்குகளை ரசித்து விழுந்து விழுந்து சிரிப்பவர்கள்.
இவர்களுக்கு அப்துல் கலாமும், இறையன்பும் பிடிக்கும்.

No comments: