Wednesday, January 09, 2019

போலீஸ் கேஸ் உங்களவாக்கு அமெரிக்க விசா எங்களவாக்கு

//அடிதடி கலவரம் போலீஸ் கேஸ் உங்களவாக்கு.. ஐஐடி, ஐஐஎம், நீட் மெடிக்கல், மத்திய அரசு வேலை, அமெரிக்க விசா எங்களவாக்கு.. //
ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் முன்வைக்கும் அரசியல் என்பது பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிரானது.. அதாவது இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மக்களுக்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்துவ அரசியல் என்பது ஒரு சில கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பார்ப்பனர் போன்ற சில மேல் சாதிகளுக்கு மட்டுமே பலனளிப்பது..
இந்துக்களிலேயே பெரும்பான்மையாக உள்ள, அதாவது இந்துக்களில் 85% சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, அவர்களின் வேலைவாய்ப்புகளுக்காக ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன??
பிசி எம்பிசி எஸ்சி பிரிவு மக்களின் கல்வி வேலைவாய்ப்புகளுக்காக போராடுவது திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற முற்போக்கு இயக்கங்கள் தான்.. இவர்களின் போராட்டத்தில்தான் நாட்டில் இந்த பிரிவு மக்களுக்கு அதாவது இந்துக்களில் பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன..
ஆனால், ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் கல்வி வேலைவாய்ப்புகளுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்?? இவர்கள் இந்து இந்து என போதையேற்றி, பிசி எம்பிசி sc மக்களை மத கலவரத்தில் அடியாட்களாக பயன்படுத்திவிட்டு, கல்வி வேலைவாய்ப்பில் பார்ப்பனர் போன்ற முன்னேறிய சாதியினர் ஆக்கிரமிக்க வழி வகுப்பார்கள்.. எனவே இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவு மக்கள் இது போன்ற இந்துத்துவ கும்பல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
அதாவது பார்ப்பன உயர்சாதியினர் எல்லாம், நல்லா படிச்சி அமெரிக்காவுல செட்டில் ஆகனும், எங்க பிசி எம்பிசி எஸ்சி இளைஞர்கள் எல்லாம் மத கலவரங்களுல வெட்டிட்டும், உருட்டிட்டும் போலீஸ் கேஸ், கோர்ட்டு, ஜெயில்ன்னு எதிர்காலத்த சீரழிச்சிகனும்... அந்தப் பக்கம் பார்த்தா, பார்ப்பனர் போன்ற உயர் சாதியினர் எல்லோரும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ்ல படிச்சி மேல் படிக்கவும், வேலைக்கும் அமெரிக்கா விசா வாங்க கியூவுல நிப்பாங்க..
இதுதான் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா பிளான்.. ஏன்னா, இங்க தூண்டிவிட்ட மத கலவரங்கள்ல போலீஸ் கேஸ்ல சிக்கணுவுங்க பூர SC/BC/MBC பசங்கத்தான்.. கலவரங்கள தூண்டிவிடுற பார்ப்பன சாதி பசங்க யாரும் கிடையாது..
சரி, அப்படியே உண்மையா "இந்துக்கள்" மீது அக்கறைன்னா, வெறும் 3% இருக்குற பார்ப்பன வகுப்பினர் 90% ஆக்கிரமிச்சி இருக்குற ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் படிப்புகளில் & மத்திய அரசு பணிகளில் எங்க SC/BC/MBC இந்துக்களுக்கு ஒழுங்கான இடஒதுக்கீடு கிடைக்க குரல்குடு பாக்கலாம்..
இங்கே உள்ள எந்த ஹிந்து அமைப்புகள் & ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துத்துவா இயக்கத்தினரோ அல்லது அவர்களது தலைவர்களோ இதுவரை இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட பட்டியல் பிரிவு மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விகாக குரல் கொடுத்தார்களா??? கிடையாது...
இங்க தமிழ் நாட்டுலேயும் திராவிட & நீதி கட்சி ஆட்சிகளுக்கு முன்பு 90% அரசு வேலைகள், படிப்புகளை பார்ப்பனர்கள்தான் ஆக்கிரமிச்சி வைத்திருந்தார்கள்... திராவிட இயக்கத்தின் போராட்டங்களால், பெரியார் & நீதி கட்சி முன்னோடிகளின் செயல்பாடுகளால் தானே அந்த சூழல் மாறி, பார்ப்பனரல்லாத மக்கள் படிப்புலேயும், வேலையிலேயும் இடம் பிடிச்சாங்க..

No comments: