Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (28)

#திராவிடம்அறிவோம் (28)

தலித்துகளுக்கு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத  பல முன்னோடியான திட்டங்களை நடைமுறைப்படுத்தியது திமுக அரசு.

சான்றாக ஒரு நிகழ்வு.

2006 - ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாரால் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சரான மு.க. ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

"2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தலித் மக்களுக்கான தனித்தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும்" என்பதே அது.

முதல்வர் கலைஞரால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அந்தத் தேர்தலில் 1,300 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடங்கள் தலித்துகளுக்குக் கூடுதலாகக் கிடைத்தன.

No comments: