Tuesday, February 05, 2019

நான்கு வேதங்கள் என்ன சொல்கிறது ?

Dear சூத்திராஸ் !!😍😘
"நான்கு வேதங்கள் என்ன சொல்கிறது ? "
ஒன்றைப்பற்றி ஒன்றும் தெரியாமலே , பலரும் சொல்கிறார்கள் என்பதற்காக , அதை தானும் உயர்ந்ததாக எண்ணுவதும் கூறுவதும் மக்களிடையே காணப்படுகிறது . இதற்க்கு சரியான எடுத்துக் காட்டு இந்த "வேதங்கள் உயர்ந்தது " என்ற எண்ணம் .
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபின் அவர்கள் வாழ்வியல் வழிபாட்டை
○ கூற புனையப்பட்டவையே வேதங்கள் ஆகும் . ரிக் , யசூர் , சாமம் , அதர்வணம் , இவை நான்குமே வேதங்கள் எனப்படுகிறது .
ரிக் வேதம்: ஆரியர்கள் தாங்கள் வணங்கிய காற்று , நீர் , இடி , மழை போன்ற இயற்க்கை சக்திகளை போற்றிப் பாடிய பாடல்கள் அடங்கியது ,
சாமவேதம் : ரிக் வேதத்தை இசையுடன் பாட ஏற்படுத்தப் பட்டதே சாமவேதம்.
யசூர் : தாங்கள் வணங்கிய இயற்க்கை சக்திகளுக்கு சடங்கு செய்யும் முறைகளை பின்னாளில் உண்டாக்கினர் . யாகங்கள் செய்யும் முறைகளை உண்டாக்கினர் . இம்முறைகளை விளக்குவதே யசூர் வேதம் .
அதர்வண வேதம் : ஆரியர்களது முற்கால வாழ்க்கையையும் , பிராத்தனைகளையும் உள்ளடக்கியது அதர்வண வேதம் .
ஆக இது ஆரியர்களின் வாழ்வியல் வழிபாடு என்பதைத் தவிர வேறு என்ன சிறப்பு இருக்கிறது . இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன் ? என்ன லாபம் ? ஏதாவது சிக்கலை தீர்க்க இவை பயன்படப் போகின்றனவா ? தீர்த்ததாக ஆதாரம் உண்டா ?
உண்மை இப்படி இருக்க வேதம் என்றால் ஏதோ இந்த உலகையே வாழவைக்கும் ஆதாரமாகவும் . அதில் இல்லாததே இல்லை என்பது போலவும் போற்றிப் புகழுகின்றனர்.
வள்ளுவன் எழுதிய திருக்குறளுக்கு ஈடாகுமா இவைகள் ? திருக்குறள் தான் வாழ்வியல் நெறிகளை கற்றுத்தரும் உயர்ந்த நூல், அனைத்து மக்களுக்கும் பயன்படும் நூல் . நியாயப்படி தமிழர்கள் இதைத்தான் வேதமாக கருத வேண்டும் .

No comments: