Tuesday, February 05, 2019

ஏன் உங்களுக்குப் போட்டி போட்டு வெல்ல வலிக்கிறது

கேள்வி: இட ஒதுக்கீட்டின் தேவை புரிகிறது. ஆனால், எங்கள் முன்னோர் செய்த தவறுக்கு எங்களுக்குத் தண்டனையா?
பதில்:
என்னா man!
பாவம், புண்ணியம், ஏழு பிறவி, கர்மா
எல்லாம் நீங்க கண்டுபிடிச்ச Concept தான man!
அப்படிப் பார்த்தால் உங்கள் முன்னோர் செய்ததற்கு நீங்கள் தானே அனுபவிக்க வேண்டும்!
சூத்திரனும் பஞ்சமனும் படித்தாலே அவன் நாக்கை வெட்டு, காதில் ஈயத்தை ஊற்று என்று அல்லவா சட்டம் எழுதி வைத்திருக்கிறீர்கள்?
இப்போது அது போலவா சொல்கிறோம்!
நீங்களும் போட்டி போட்டு படியுங்கள், வேலைகளைப் பெறுங்கள் என்று தானே சொல்கிறோம்!
இது எப்படி தண்டனை ஆகும்?
ஆண்கள் ஆண்கள் பிரிவிலும்
பெண்கள் பெண்கள் பிரிவிலும்
போட்டியிடுவது போல,
SC/ST/BC/MBC அவங்க அவங்க பிரிவில் போட்டி இடட்டும். அங்கே யார் வெல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தேவை இல்லாத கவலை.
3% மக்களுக்கு 31% பொதுப்பிரிவு இடங்கள் போதாதா?
நீங்கள் தான் மிகவும் திறமையானவர்கள் ஆயிற்றே!
பொதுப்போட்டியில் எல்லாருடனும் மோதி வென்று 31% இடங்களையும் எடுத்துக் கொள்ளுங்களேன்!
ஏன் உங்களுக்குப் போட்டி போட்டு வெல்ல வலிக்கிறது?

No comments: