Wednesday, January 09, 2019

the power of பார்ப்பனியம்

இடஒதுக்கீடு வரம்புக்குள் வரும் அத்துணை பேருக்கும், பெரும் போராட்டத்திற்கு பின்னேதான் தங்களுக்கான இடஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிக் கொண்டே இருப்பவர்களுக்கு எந்த போராட்டமும் செய்யாமல், கேட்காமலேயே, ஜஸ்ட் லைக் தட் இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது!

Please understand the power of பார்ப்பனியம்!

சமூகநீதி அரசியல்ங்குறது எல்லோருக்குமாது

இந்த பெரியார் பாய்ஸ்தான் கடவுளே இல்லைனு சொல்ரானுங்கலே அப்புறம் என்ன மயிருக்கு பெண்களை அனுமதிக்கனும் மாட்டு கறிய சபரிமலையில் சமைக்கனும்னு சொல்ரானுங்க
கடவுளே இல்லை என்று சொல்ரவன் எதர்க்கா இந்து கடவுளை மட்டும் விமர்சனம் பன்றாங்க

சமூகநீதி அரசியல்ங்குறது எல்லோருக்குமாது. ஆண் பெண் மூன்றாம் பாலினம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூதாய மக்கள் அனைவருக்குமாது. சிலரை போல இந்துக்களுக்காக குரல் கொடுப்போம்னு பார்ப்பனர் உயிர் சாதி வசதி படைத்த மக்களுக்கான அரசியல் இல்லை !!  

பிராமணர்கள் மட்டுமே முற்பட்ட பிரிவினர் கிடையாது ப்ரோ..

பிராமணர்கள் மட்டுமே முற்பட்ட பிரிவினர் கிடையாது ப்ரோ..
அது எங்களுக்கும் தெரியும் ப்ரோ, ஆனா, பிராமணர்களுடன், பிற முற்பட்ட சாதிகளை ஒரே பிரிவாக சேர்த்து எத்தனை ஒதுக்கீடு கொடுத்தாலும், அத்தனையும் பிராமணர்களுக்கே செல்லும்.. முற்பட்ட பிரிவிலுள்ள மற்றவர்கள் நாக்கை தான் வழிக்க வேண்டும்..
முற்பட்ட பிரிவிலுள்ள எல்லா வகுப்புகளும் ஒரே சமூக & கல்வி நிலையில் கிடையாது.. பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் ஒரு நிலையிலும், விவசாய வேளாண்மை சார்ந்து இருக்கும் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்ற வகுப்புகள் வேறு நிலையிலும் இருகிறார்கள்.
தற்போதைய நிலையில் மத்திய அரசு பணிகள் & கல்வியில் 68% சதவீதத்தை பெற்று ஆதிக்கம் செலுத்துவது பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் தான்.. அதே முற்பட்ட பிரிவில் வரும் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்றவர்கள் கல்வி & வேலைகளில் மிக குறைவாக இருகிறார்கள்.. மேலும், இட ஒதுக்கீடு வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிவருபவர்கள் இவர்கள் தான்.
இவர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் வைத்து 10% ஒதுக்கீடு கொடுத்தால், அதை அப்படியே பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள்.. மக்கள் தொகையில் 15% சதம் இருக்கும் முற்பட்ட பிரிவில், இவர்கள் 5% சதவீதம் தான், மீதம் 10% சதவீதம் இருப்பவர்கள் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்றவர்கள்.. இவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
எப்படி முன்னர் தனி MBC பிரிவு இல்லாமல், BC பட்டியல் மட்டும் இருந்தபோது, சில வகுப்பினர்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல், தனி MBC ஒதுக்கீடு தேவை என போராடினார்களோ, அப்படி முற்பட்ட பிரிவினர்களுக்கு இடையே பிரச்னை வரும்.

உயர் ஜாதியில் ஏழைகளுக்காகப் பொங்குபவர்களே!

உயர் ஜாதியில் ஏழைகளுக்காகப் பொங்குபவர்களே!
உயர்ஜாதியினரை யாராவது படிக்கக்கூடாது என்று சொன்னார்களா?
எங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
நீங்கள் படித்தால் நாக்கை அறு என்று சொன்னார்களா?
எங்களைச் சொன்னார்கள்.
நீங்கள் படிப்பதைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொல்லி இருக்கிறார்களா? எங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
படிப்பதை நெஞ்சில் தேக்கி வைத்திருந்தால் நெஞசைப்பிள என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களுக்கு யாராவது கல்வி கற்றுத் தர மாட்டோம் என்று சொன்னார்களா?
எங்களுக்குச் சொன்னார்கள்.
உங்களைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களைப் பள்ளி இருக்கும் தெருவில் நடக்க அனுமதி மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களுக்குப் படிப்பு வராது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
நீங்கள் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைத் தொட்டால் தீட்டு என்று யாராவது சொன்னார்களா?
எங்களைச் சொன்னார்கள். உங்களைப் பார்த்தால் பாவம் என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களை வீதியில் நடக்கக் கூடாது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைக் காலில் செருப்புப் போடக் கூடாது என்று சென்னார்களா?
எங்களைச் சொன்னார்கள்.
உங்களை உயர் கல்வி கற்க அனுமதி மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களுக்கு தகுதி திறமை இல்லை என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைப் பள்ளியில் தனி இடத்தில் அமர வைத்தார்களா? எங்களை அமர வைத்தார்கள்.
உங்களுக்கு தாகத்திற்குத் தண்ணீர் தர மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
நீங்கள் சொத்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா? எங்களுக்குச் சொன்னார்கள்.
நீங்கள் சொத்து வைத்திருந்தால் யாராவது பறித்துக் கொண்டார்களா? எங்கள் சொத்தைப் பறித்துக் கொண்டார்கள்.
உங்களிடம் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொன்னார்களா?
எங்களுக்குச் சொன்னார்கள்.
அப்படி இருக்க எங்களுக்குக் கொடுக்கும் இட ஒதுக்கீட்டை உங்களுக்கும் கேட்கிறீர்கள்?
கொஞ்சமாவது உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள்.
எதற்காக உங்களுக்கு இட ஒதுக்கீடு?
பெல் ம.ஆறுமுகம்

பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை...

எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை (Clannishness) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் : டி எம் நாயர்
பேராசைப் பெருந்தகையே போற்றி
பேசநா இரண்டுடையாய் போற்றி
தந்திர மூர்த்தி போற்றி
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி
உயர் அநீதி உணர்வோய் போற்றி
எமது இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லாக் கேடே போற்றி
இரை இதோ போற்றி! போற்றி
எத்தினேன் போற்றி போற்றி
பேரறிஞர் அண்ணா

பார்ப்பனர்கள் இன்றும் பெரியாரை எதிர்க்க காரணம்...

ஈ.வெ.ராமசாமி ஒரு தேசத்துரோகி...

ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கியவர் தான்
ஈ.வெ.ராமசாமி....

பார்ப்பனர்கள் இன்றும் பெரியாரை எதிர்க்க காரணம்...

இந்தியாவை ஆண்ட மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், ஆண்ட, பேண்ட, மோண்ட , வீரத் தமிழ் மன்னர்களும்
மனுதர்ம படியே ஆட்சி
புரிந்தனர்.

ஆனால் 1620 கள் தொடங்கி
ஆட்சிசெய்த
ஆங்கிலேயர்கள்
மனுதர்ம சட்டத்தில் பலவற்றை நீக்கினார்.

இதுவே
பார்ப்பனர்கள்
ஆங்கிலேயரை எதிர்க்க காரணமாயிருந்தது.

1773 ல் வர்ணமுறைப்படி சூத்திரர் அடிமை என்பதை ஒழித்து "சட்டத்தின் முன் அனைவரும் சமம் " என்ற நிலையை கொண்டுவந்தனர்.

1795 ல் பார்ப்பன்களும் சத்திரியர்கள் மட்டுமே சொத்து வாங்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி அனைவரும் சொத்து வாங்கலாம் என்று சட்டமியற்றினார்கள்.

1804 ல்
'பெண் சிசுக்களை' கொலை செய்வதைத் தடுக்க சட்டமியற்றினார்கள்.

1813 ல் கொத்தடிமை சட்டத்தை ஒழித்தார்கள்.

1817 ல் பார்ப்பனர்கள் எந்த குற்றம் செய்தாலும் தண்டனை இல்லை என்பதை‌ ஒழித்து,அவர்களுக்கும் தண்டனை பெற்ற சட்டம் இயற்றினர்.

1819 ல் சூத்திரப் பெண் திருமணமான உடன் ஏழு நாட்கள்‌ கோயிலில் (கோயில்களில் பள்ளியறைகள் இன்றும் உள்ளன ) பார்ப்பனர்களுடன்...... இருக்க வேண்டும்
(நீங்கள் நினைப்பது தான்) தடை செய்தனர்.

1828 ல் குழந்தைத் திருமணத்தடைச் சட்டம் கொண்டு வந்தனர்.

1829 ல் விதவைகள் உடன்கட்டை (சதி)ஏறுவதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வந்தனர்.

1835 ல் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி சூத்திரர்களும் கல்வி பயில சட்டம் இயற்னர்.

சூத்திரர் முதல் ஆண் பிள்ளையை கங்கையில்
போட்டு,கங்காதானம்‌ செய்வதற்கு தடைச் சட்டம்.

சூத்திரர் நாற்காலியில் உட்கார அனுமதிக்கும் சட்டம் கொண்டுவந்தனர்.

1868 ல் இந்து மனு(அ)தர்ம சட்டத்திற்கு
முழுமையான தடை கொண்டு வந்தனர்.

இவை அனைத்தும் சட்டவரைவு பெற்றதால் ஆங்கிலேயரை கடுமையாக எதிர்த்தார்கள், பிராமணர்கள்.

ஆங்கிலேயர் செய்த சீர்திருத்தங்கள் அனைத்தையும் பெரியார் வரவேற்றார்.

அதனால் பெரியாரையும் எதிர்க்கிறார்கள் இன்றளவும்...

பெரியார் பார்ப்பனீயம் இருக்கும் வரை தேவை...

மானுடன் உள்ள வரை தேவை......

சுய மரியாதை உள்ள வரை தேவை....

அறிவு உள்ளவரை தேவை....

(தமிழர்களின் உரிமைக்கு எதிரி யார்?
பக்கம் 22.23...)

Tuesday, January 08, 2019

கெட்ட வார்த்தை .. கருணாநிதி

உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா? எழுபது எண்பதுகளில் நாமெல்லாம் ஒரு பூச்சி புழுக்களை போல பயந்து பதுங்கி இருந்தோம் .. வவுனியா தாண்டி விட்டால் ரெயிலில் எல்லாம் தமிழ் பத்திரிகைகளை படிக்க மாட்டோம் அப்புறம் வருடா வருடம் அடி .. அது பூதாகரமாகி பேயடி பிசாசடி .. உலகத்தில் எந்த நாட்டுக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை . ஒரு சின்னஞ்சிறு நாட்டின் உள்நாட்டு குழப்பம் என்ற அளவில் மட்டுமே இது பார்க்கப்பட்டது!.. அடுத்த அடி எப்போது எங்கிருந்து என்று நடுங்கி கொண்டிருந்ததோம் . அந்த காரிருள் நாட்களில் ஒரு வெளிச்சமும் எமக்கு தெரியவில்லை .. எந்த திசையில் இருந்தும் அபய அளிக்கும் குரல் கேட்கவில்லை .. அந்த நீண்ட நெடிய இரவை கிழித்து கொண்டு ஒரு செய்தி வந்தது பிபிசி மூலம் கேட்டது . தமிழ்நாட்டில் கலவரம் ..ஆர்ப்பாட்டம் ... கருணாநிதி ஆர்ப்பாட்டம் ..கருணாநிதி கோரிக்கை மத்தியரசு செவி சாய்க்கவேண்டும .. கருணாநிதி உண்ணாவிரதம் .கருணாநிதி மனித சங்கிலி .. கருணாநிதி சாலை மறியல் .. கருணாநிதி ரெயில் மறியல் ... எங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவர் வாயிலும் ஒரு மந்திர சொல் போல உச்சரிக்கப்பட்ட அந்த வார்த்தை கருணாநிதி . அதுவரை எந்தவித நிதானமும் இன்றி சிங்களதேசம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் கருணாநிதி என்ற சொல்லுக்கு செவி சாய்த்து பதிலளித்தார் இந்திரா காந்தி அம்மையார் .. நரசிம்ம ராவை அனுப்பினர் . நரசிம்ம ராவ் கட்டுநாயக விமான நிலையத்தில் வந்து இறங்கினார் ,, முதல் முதலாக ஸ்ரீ லங்கா அறிந்து கொண்டது இனி தமிழர்களை தாக்க முடியாது ,, பக்கத்தே இருப்பது தமிழ்நாடு .. அங்கே இருக்கிறார் கருணாநிதி ! அன்றில் இருந்து கருணாநிதி என்ற சொல் முழு சிங்கள தேசத்திற்கும் கெட்ட சொல்லானது . அது முதல் நாங்கள் அதிகம் கேட்ட வார்த்தை அந்த அந்த கெட்ட வார்த்தை .. கருணாநிதி!

Monday, January 07, 2019

"பார்ப்பனர்களும் – தீட்டும்"

"பார்ப்பனர்களும் – தீட்டும்"
----------------------------------------------------
சபரிமலைக்குச் சென்று இரு பெண்கள் வழிபட்டார்கள் என்பதற்காக கோவிலை பூட்டிவிட்டு கேரள பார்ப்பன நம்பூதிரிகள் தீட்டுக் கழித்தனர் என்ற செய்தி உங்களுக்குத் தெரியும், இதே போன்ற இழிசெயலை பல இடங்களில் பலமுறை பார்ப்பனர்கள் செய்துள்ளனர் என்ற வரலாறு இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா.

1) 1927ல் திருச்சி மலைக்கோட்டை கோவில் நுழைவுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் ஜே.என்.இராமநாதன்,டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் பார்ப்பனர்களால் படிகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கமாக தாக்கப்பட்டனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

2) 1929ல் ஈரோடு கோவில் கருவறைக்குள் நுழைய உரிமை கோரி தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் உள்ளே சென்ற மாயூரம் நடராசன்,பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தோழர்களைப் பார்பனர்கள் கோவிலுக்குள்ளே வைத்துப் பூட்டினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

3) 1927ல் திருவண்ணாமலைக் கோவிலுக்கு நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணப்பன் தோழர்களுடன் சென்றபோது பறையர்கள் வருகிறார்கள் என்று பார்ப்பனர்கள் கோயிலையே இழுத்துப் பூட்டி விட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4) 1874ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிபட வந்த நாடார்களை பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு அது தொடர்பாக நடந்த வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5) 1939ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடந்தவுடன் கோவிலை விட்டு மீனாட்சியே ஓடிப்போய் விட்டால் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து கோவிலுக்கும் பூட்டுப் போட்டுவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

6) 1984ல் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே(அவர் பார்சி வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார் என்பதால்) உள்ளே விட பார்ப்பனர்கள் மறுத்துவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

7) 1946ல் திருவையாறு தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழ்ப் பாட்டுப் பாடினார் என்பதற்காக மேடை தீட்டாகி விட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8) 1925ல் கன்னியாகுமரிக்கு கோவிலுக்கு வந்த காந்தியடிகளை பிரகாரத்தை மட்டுமே சுற்றி வருவதற்கு பார்ப்பனர்கள் அனுமதித்தார்கள்,கோவிலுக்குள்ளே விடவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

9) 1927ல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று விடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர்,கோவிலுக்குள் இருத்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டு கிடந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

10)  1979ல் பாபு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை பசுவின் சிறுநீரும் கங்கை நீரும் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

11)  2014ல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்றதும் பார்ப்பனர்கள் கோயிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

12)  2018ல் இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது துணைவியாரையும், தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதனால்,இராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள்  நுழையவே அனுமதிக்கவில்லை. கோவில் படிக்கட்டில் அமர்ந்து பக்தி பூஜை செய்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

Friday, January 04, 2019

உங்களை சாதியை சொல்லி இழிவுபடுத்துகிறார்களே? தோழர்.பினராயி விஜயன்

நிருபர்:-
உங்களை சாதியை சொல்லி இழிவுபடுத்துகிறார்களே?
தோழர்.பினராயி விஜயன்:-
" இம்மாதிரியான தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அப்படியே அவர்கள் சொல்லிக்கொள்ளாட்டும். இம்மாதிரியான சாதிய ரீதியான தாக்குதல்களை புதிய தந்திரமாக பயன்படுத்துகிறார்கள். நான் அந்த சாதியில் (தீயர்) பிறந்தேன் என நினைவுபடுத்துகிறார்கள். நான் என்றுமே அதை மறுத்ததில்லை. என் தந்தை கள் இறக்கும் தொழில்தான் செய்தார். எனது சகோதரர்கள் அதைத்தான் செய்தார்கள். முன்பு நான்குவிதமான வர்ண அமைப்பில் சாதி அமைக்கப்பட்டது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த நபர் அந்த குறிப்பிட்ட சாதியை சார்ந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள். அதை நம்பிக்கொண்டிருக்கும் அந்த நபர்கள், அவ்வாறு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அவர்களிடம் நாம் என்ன சொல்வது?
அந்த காலங்கள் முடிந்துவிட்டது. இது நவீன காலம். இதை புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது"

பெண் கல்வியின் அன்னை - சாவித்ரிபாய் புலே

பெண் கல்வியின் அன்னை - சாவித்ரிபாய் புலே
--------------------------------------------------------------------------



பள்ளிக்குச் செல்லும் போது இரண்டு புடவைகளையும் எடுத்துச் சென்றாள் அந்தப் பெண். ஏனெனில் அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே வழி நெடுகிலும் சேற்றையும், சாணத்தையும், மண்ணையும் மாறி மாறி அவள் மீது வீசுவார்களாம் இந்து சனாதனவாதிகளும் ஆதிக்க மேல்சாதியினரும். அவற்றை அமைதியாக எதிர் கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும் புடவையை மாற்றிக் கொள்வாளாம் அந்தப் பெண். யாரிந்தப் பெண்? இவள் செய்த குற்றம்தான் என்ன?இந்திய தேசத்தின் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கும், சமூக கொடுமைகளுக்கும் எதிராகப் போராடிய முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே தான் அவர். இதுதான் பெண்கல்வியை முனைப்பாக கொண்டு சென்ற முதல் பெண் ஆசிரியருக்கு, இந்தியாவில் பரம்பரியத்தைக் காப்பாற்றும் சனாதன கும்பலால் கிடைத்த பரிசு என்றே நாம் கொள்ள வேண்டும். சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது.
சாவித்திரிபாய் புலே , 1831, ஜனவரி மாதம் 3ம் நாள், மகாராஷ்ட்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் என்ற கிராமத்தில் பணக்கார விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
இந்திய வரலாற்றில் பெண்கல்விக்காக முதல் பள்ளி அமைத்தவர், சாதியத்தை தீயிட்டுக் கொளுத்திய, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த சமூகப் போராளியும் கூட. அரசியல் கவிதை எழுதிய புரடசிப் பெண்ணும் ஆவார்.. மராட்டிய மண்ணின் முதல் பெண் கவிஞரும் இவரே. 19ம் நூற்றான்டின் அனைத்து சமூகத்தடைகளையும் உடைத்து தூக்கி எறிந்தவர்.
இந்தியாவின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், அதுவும் கல்வி தொடர்பான தகவல்களைப் படித்தால் கொஞசம் அச்சமாகவும் வேதனையைத் தருவதாகவும் உள்ளது. 1800 களில் பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கே கல்வி கொடுக்க திட்டமிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்திய பெண்களின், சமூகத்தை உய்விக்கப் பிறந்தவர்கள்தான் ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் காண்டோஜி சாவித்திரி பாய் புலே என்ற தம்பதியர் இருவரும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கும் மறுக்கப்பட்ட கல்வியை, ஜோதிராவ் மற்றும் சாவித்திரி இருவரும் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் கல்வி தருவோம் என்று கூறினர், 1847 ல் முதல் பள்ளியை தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக துவங்கினார்கள். பின்னர் 1848,ல், இந்திய வரலாற்றிலேயே, முதன் முறையாக, முதல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை, புனேயிலுள்ள பீடே வாடு என்ற இடத்தில், 9 பெண் குழந்தைகளுடன், தொடங்கினர். அதில் சாவித்திரிபாய்தான் பள்ளியில் பொறுப்பு ஏற்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார். பின் 1849ல், ஒரு பள்ளியை ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் துவங்கினார்கள். அதுவே பெரியவர்களுக்கான பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், என அனைத்து சாதியினருக்கும் என உருவாக்கப்பட்ட முதல் பள்ளி, இந்தியாவிலேயே இதுதான்.
சாவித்திரி பாய் புலே, ஜோதிராவ் புலே இருவரும் மகாராஷ்டிரத்தில் 9 இடங்களில் அனைத்து சாதியினருக்கும், விதவைகளுக்கும், தவறான உற்வின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் என எல்லோருக்கும் கல்வி கொடுக்க பள்ளியை துவங்கினர். இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்த பள்ளிகள் அரசு பள்ளியைவிட சிறப்பாக செயல்பட்டன. இதனால், 1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள் என்ற பாராட்டும்பரிசும் பெற்றனர்.
இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் போராளி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில்,முறையாக ஆசிரியர் தினம் என்று சாவித்திரிபாய் பிறந்த தினத்தைத்தான் கொண்டாட வேண்டும். ஆனால், சமூக சீர் திருத்தவாதியான சாவித்திரிபாய் பற்றி எந்த பாட புத்தகத்திலும் இல்லை. இது ஒரு வரலாற்றுப் பிழையே.
தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடியநடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே
அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே குற்றமாகக் கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதிச் சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர். சாதாரணங்களைக் கொடுத்தவர்களையெல்லாம் அசாதாரணமாக கடந்தவர். பூக்கள் அல்ல பெண்கள். புயல்களாகவும் இருப்பார்கள் என புரட்சி செய்து காட்டிய பெண். தன்னம்பிக்கை மனிதியாக, சமுதாயத்தின் பிழை திருத்தும் போராளியாக, சமூக ஏற்றத் தாழ்வினை வேரறுக்கும் சக்தியாக வாழ்ந்து காட்டிய வீராங்கனை. ஆனால் இந்திய வரலாற்றில் இந்த உயர்ந்த மனிதி ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது.
சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது அறுபத்தி ஆறு வயதில், மனித நேயம் காக்க மனித உயிர்கள் காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு,1897, மார்ச் 10 ம் ள் மரணமடைந்தார் சாவித்திரி பாய் புலே. அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான்.
சாவித்திரிபாய் புலே நம் அனைவருக்கும் சொல்லிச் சென்ற செய்தி இதுதான். உனக்குள்ளே எல்லா ஆற்றலும் அடங்கியுள்ளது. அந்த ஆற்றலை இந்த சமூகத்திற்கு நல்லது செய்யப் பயன்படுத்து. ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்பதும், சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையில்லை என்பதும் தான்.
போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,சோராமல் உழை
ஞானத்தை,செல்வத்தைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய்க் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக
பிராமண நூல்களை வேகமாகத் தூக்கி எறிக !
இப்படியாகச் செல்கிறது அவரின் கவிதை வரிகள்.

Anti Hindi agitation, Kamarajar ayya, Dravidian political story.

Those who do not know the past are condemned to repeat it.
Anti Hindi agitation, Kamarajar ayya, Dravidian political story.
first anti Hindi agitation 1937 - 38
Again implementation of Hindi by Mr.Rajaji than chief minister of Madras presidency.
Mr.RajajI CM was adamant about Hindi implementation which was opposed by Periyar and Justice party which was the than opposition party later becomes Dravidar Kazagam.
Protests and agitation continues for almost 3 years .
2 die and more than 1100 arrested including woman and children.
Congress govt resigns in 1939 and governor of Madras Lord Erskine abolished Hindi.
The adoption of an official language for the Indian Republic was a hotly debated issue during the framing of the Indian Constitution after India's independence from the United Kingdom. After an exhaustive and divisive debate, Hindi was adopted as the official language of India with English continuing as an associate official language for a period of fifteen years, after which Hindi would become the sole official language. The new Constitution came into effect on 26 January 1950. Efforts by the Indian Government to make Hindi the sole official language after 1965 were not acceptable to many non-Hindi Indian states, who wanted the continued use of English. The Dravida Munnetra Kazhagam (DMK), a descendant of Dravidar Kazhagam, led the opposition to Hindi. To allay their fears, Prime Minister Jawaharlal Nehru enacted the Official Languages Act in 1963 to ensure the continuing use of English beyond 1965. The text of the Act did not satisfy the DMK and increased their skepticism that his assurances might not be honoured by future administrations.
As the day (26 January 1965) of switching over to Hindi as sole official language approached, the anti-Hindi movement gained momentum in Madras State with increased support from college students. On 25 January, a full-scale riot broke out in the southern city of Madurai, sparked off by a minor altercation between agitating students and Congress party members. The riots spread all over Madras State, continued unabated for the next two months, and were marked by acts of violence by police, police excess, police firing and lathi charges. Mr. Bhakatchavachalam s Government of the Madras State, under Home minister Mr.Kakkan called in paramilitary forces to quell the agitation.Their involvement resulted in the deaths of about seventy persons (by official estimates) including two policemen.
Thiru.Kamarajar opposed tooth and nail the actions of his party chief minister Thiru . Bakatvachalam, Home minister of TamilNadu Thiru Kakkan who gave orders to shoot and kill Tamil students, as home minister.
After this episode all chief minister of TamilNadu have held the home portfolio not assigning it to any other minister.
Thiru O.V.Alagesan and Thiru.C.Subramaniam than union ministers resigned from the Lal bahadur shastri cabinet in protests against the prime minister and chief minister not concerned about their party but Tamil people. The prime minister Lal bahadur sastri not bothered about anything than Hindi imposition advised the president of India to accept the resignation. The president refused to accept and adviced the prime minister to to calm the situation, considering unity and diversity of India . Indian Prime Minister Lal Bahadur Shastri gave assurances that English would continue to be used as the official language as long as the non-Hindi speaking states wanted. The riots subsided after Shastri's assurance, as did the student agitation.
The agitations of 1965 led to major political changes in the state. The DMK won the 1967 assembly election and the Congress Party never managed to recapture power in the state since then. it's all because of the rule of Mr.Bhakatchavachalam and Mr Kakkan who were very unpopular with the people of Madras state today's TamilNadu.
when the DMK captured power in 1967 defeating the congress it was not Mr.Kamarajar as some want us to believe but it was Mr Bhakatchavachalam who lost as CM.
Kamarajar ayya lost the MLA election to Mr.Srinivasan a student due to the anger of the Tamil people against Thiru.Bhakatchavachalam and Thiru.Kakkan who ordered shootings to kill more than 100 people.
secondaly there was a huge scarcity for rice and than Mr.Bhakatchavachalam s govt gave maize ( makka cholam) for food.
The official Languages Act was eventually amended in 1967 by the Congress Government headed by Mrs.Indira Gandhi to guarantee the indefinite use of Hindi and English as official languages. This effectively ensured the current "virtual indefinite policy of bilingualism" of the Indian Republic.
it is a lie being spread that Thiru Kamarajar was defeated by dravidian ideology. no supporter of the Dravidian movement let it be the DMK, Admk,Mdmk will speak against Kamarajar ayya.
speaking only about Kamarajar ayya is divisive politics by two groups in TamilNadu.

Purification atrocities of the Tantris of Kerala.

Purification atrocities of the Tantris of Kerala.
August 2000.
Mr. Vayalar Ravi , a Hindu, was once the home minister of Kerala. He was in August 2000 an MP of the Congress party. His wife was a Christian. He wanted to get his son married in a Hindu temple. That very intention of Mr. Vayalar Ravi showed that his son is a Hindu as he had been brought up in the environs of his community in the Hindu religion as mentioned in Explanation (b) to Section 2 (1) of the Hindu Marriage Act, 1955 which attempts to define the term ‘Hindu’.
Yet, the tantri, the head priest of the temple, would have none of it. He simply performed the purification ceremony. In his opinion, the marriage has defiled the temple. And within the temple premises, it is only the tantri who is supreme and the Constitution and the laws enacted in accordance with it do not have any significance, the tantri presumed. The tantri has, therefore, seen to it that his opinion prevailed.
If, for the sake of argument, Mr. Ravi converts himself, now, to Christianity to escape from the tyranny of these tantris, the fundamentalist Hindu bigots would cry from the rooftops that the missionaries convert the Hindus through allurement or force. Because, Mr. Ravi had been born a Shudra only in order to stomach such insults and remain a Hindu still. And, that was the fatwa of the tantris.
“Kala Pahar, the Bengali Prince, turned Muslim when Brahmins refused him permission to marry the Muslim princess who was prepared to renounce Islam to be able to marry him. The revenge he took on his ancestral society is well known. The Muslim majority in East Bengal is mainly due to him”… {-Balraj Madhok- Indianisation- Page 52- 1970-Orient Paperpacks.}.But, these tantris would never learn.
In Mohandas Vs Devaswom Board, 1975 KLT 55, Jesudas, famous playback singer, was a catholic Christian by birth. He used to render devotional music in a Hindu temple and used to worship the presiding deity. He also filed a declaration stating that he was the follower of Hindu faith. It had been held such a bona fide declaration amounts to his acceptance of Hindu faith and becomes a Hindu by conversion. Mr.Ravi’s case is comparable to it. But these Guruvayur tantris would not listen to such court verdicts.
In Perumal Vs Ponnuswamy, the Supreme Court has held that the acceptance of Ms. AnnaPazham, a Christian lady, to the marriage in Hindu form itself was the proof of conversion. She continued to live as a Hindu even after. It has been held that if a person expresses his/her intention to become a Hindu followed by the conduct of community or caste taking into the fold of which he/she is ushered accepts him/her as a member, then he/she is considered Hindu. No formal ceremonies to effectuate conversion are required, said the Supreme Court. But the tantri exercises veto. If a Christian woman can thus become a Hindu through marriage, would not the son born of that marriage be a Hindu?
Now, the questions are
1. Whether the tantri was superior even to the courts of law in laying down law whether a person is a Hindu or not
2. Whether the tantri had not insulted the former minister and present Member of Parliament (i.e., an official representative of the people) who still continues to remain a Hindu
3. Whether the Constitution does not have role to play within the precincts of a Hindu temple where the tantris commit various social and racial crimes and do anything as they please to provoke others and thereby cause communal tension and other undesirable consequences and
4. Whether the upper caste Tantri's action in offending the religious feelings of the lower caste Hindu does not attract Section 295 A of the IPC

Mahatma Gandhi had said it very clearly. On 08.10.1927, Mahatma Gandhi, disenchanted with the obstinacy of the Brahmins of Travancore, wrote from Nagercoil, “Let me, if my voice will reach them, carry my voice to the Brahmin priests who are opposing this belated reform. It is a painful fact, but it is historical truth, that priests who should have been the real custodians of religion have been instrumental in destroying the religion of which they have been custodians”, (Page 94 – The Epic of Travancore - Mahadev Desai). On 09.10.1927, he wrote from Trivandrum, “The priests who today arrogate to themselves the function of the Brahman and distort religion, are no custodians of Hinduism or Brahmanism. Consciously or unconsciously they are laying the axe at the root
of the very tree on which they are sitting, and when they tell you that shastras enjoin untouchability and when they talk of distance pollution, I have no hesitation in saying that they are belying their creed and that they are misinterpreting the spirit of Hinduism”. Gandhi was right; the Kerala Brahmins had been destroying the religion for long.

சபரிமலைக்கு பெண்கள் சென்று வழிபடுவதற்கான உரிமைப் போராட்டத்தை கிண்டலடித்து

சபரிமலைக்கு பெண்கள் சென்று வழிபடுவதற்கான உரிமைப் போராட்டத்தை கிண்டலடித்து ஒரு பதிவு பல இடங்களில் கண்ணில் பட்டது. சபரிமலைக்கு செல்வதற்கான உரிமையைக் கேட்கின்ற பெண்கள் ஜல்லிக்கட்டிலும் கலந்து கொள்வார்களா என்கின்ற பொருளில் அந்தக் கிண்டல் பதிவு இருந்தது.
இதே பொருளில் எமது ஈழத்தை சேர்ந்த சிலரும் பதிவிட்டிருந்தார்கள் என்பதுதான் இதில் அதிர்ச்சியான விடயம். அந்தப் பதிவுகளுக்கு பல ஈழத் தமிழர்கள் விருப்புககுறியும் சிரிப்புக்குறியும் இட்டிருந்தார்கள். பெண்களை கலாய்த்து விட்டார்களாம். அப்படியே 'மாடு குத்தும்' என்பது போன்ற கொச்சைத்தனமான கேலிக் கருத்துக்களும், சிரிப்புக்குறிகளுமாக அந்தப் பதிவுகள் கிடக்கின்றன.
பெண்கள் டாங்கிகளை புரட்டியதையும், இராணுவ முகாம்களை தகர்த்ததையும், சிங்கள ஆண் சிப்பாய்களுடன் கைகலப்பு புரிந்து அடித்து வீழ்த்தியதையும் தங்கள் கண்களால் நேரடியாகப் பார்த்தவர்கள் இவர்கள். ஆனால் மாடு பிடிக்கச் சொல்லி வெட்கமே இல்லாமல் பெண்களை கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள். தலைவர் பிரபாகரன் இல்லையென்றதும், எல்லா விடயங்களிலும் அவருக்கு முன்னதான காலப் பகுதிக்குள் சென்று விட்டார்கள்.
மாலதி படையணியின் போராளிகள் அலங்காநல்லூர் மைதானத்தில் இறங்கினால் காளைகளை அடக்கிவிட மாட்டார்கள் என்று உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறீர்களா? மனச்சாட்சி என்கின்ற ஒன்று இருந்தால் இந்தப் பதிவுகளை அழித்து விடுங்கள். அது தலைவர் பிரபாகரனுக்கு தருகின்ற மரியாதையாக இருக்கும்.

- வி. சபேசன்

ஒட்டுமொத்த இந்துக்களும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்

ஒட்டுமொத்த இந்துக்களும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்

ஆனால் ஹிந்துக்களிலும் சில பேரை கோயிலுக்குள் அனுமதிக்காத, அர்ச்சகராக முடியாத நிலை இருக்கிறது.
ஹிந்துக்களிலும் சிலபேர் ரிஷர்வேஷன் வேணும் நீட் வேண்டாம் என்ற் நிலைப்பாடு இருக்கிறது.
அந்த ஹிந்துக்களில் சில கிராமமக்கள்,விவசாயிகள் மீத்தேன் ,ஈத்தேனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த ஹிந்துக்களில் சிலபேர் தூத்துக்குடியில் ஸ்ட்ரெலைட் நிறுவன மாசால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஹிந்து மக்கள் போராடும் பொழுது இன்னொரு குருப்பா ஹிந்து மக்கள் இவர்களின் போராட்டத்தை ஏளனம் செய்து எதிர்க்கிறார்கள்.

அப்படி இருக்கும் பொழுது ஹிந்துக்கள் எல்லாம் எப்படி ஒன்று சேர்வார்கள்.

Friday, December 28, 2018

உபயோகமில்லாத மாடுகளை தெருவில் விட்டு விடுவதால் அங்குள்ள மக்கள் தொல்லை அனுபவிக்கிறார்கள்

உத்திரபிரதேசம் மாநிலம் 
அலிகார் நகரில் உள்ள இக்லஸ் (Iglas) என்னுமிடத்தில் ஆதரவற்ற மாடுகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதாம்.


விவசாய பூமியான இக்லாஸில் உபயோகமில்லாத மாடுகளை தெருவில் விட்டு விடுகிறார்கள்.
வட இந்தியா முழுவதும் இப்படி தெருவில் விட்டு விடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
அப்படி தெருக்களில் விடப்படும் ஏராளமான மாடுகளால் அங்குள்ள மக்கள் தொல்லை அனுபவிக்கிறார்கள்.
தொல்லை தாங்க் முடியாத மக்கள் மொத்தம் 800 மாடுகளை அங்குள்ள அரசுப் பள்ளிகள் காம்பவுண்ட் உள்ளேயும், வகுப்பறையும் உள்ளேயும் கட்டி வைத்து போய்விட்டார்கள்.
காலையில் வந்து பார்த்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதைப் பார்த்து திகைத்திருக்கின்றனர்.
பள்ளிகளுக்கு வேறு வழியில்லாமல் விடுமுறை விட்டிருக்கிறார்கள். காவல்துறையும் கலெக்டரும் இது அரசியல் என்கிறார்கள்.
ஆனால் பொதுமக்களோ இப்படி திரியும் மாடுகளை எடுத்துச் செல்லுங்கள் என்கிறார்கள். இதில்லாமல் சில மாடுகளை அங்கே உள்ள மக்கள் உயிருடன் புதைத்திருக்கின்றனர்.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் மூச்சு திணறி மாடுகள் இறந்ததாக வந்திருக்கிறது.
News - http://archive.is/GhKPC
மாடுகளை கொல்லக் கூடாது அது மதத்தின் படி மகா பாவம் என்று சொன்ன மக்கள் இன்று மாடுகளை உயிருடன் புதைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
உணவு சங்கிலி, ஒரு நாட்டில் உள்ள அனைவரும் எப்படி எதை உண்கிறார்கள். இந்திய நாட்டின் 130 கோடி மக்களும் எப்படி எல்லாம் ஒவ்வொருவேளையும் பசியாறுகிறார்கள் என்பதை எல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக தெரிந்தவர்கள் மாட்டுக்கறியை எதிர்க்க மாட்டார்கள்.
வெறுமே மத அபிமானிகள் மாட்டுக்கறியை எதிர்ப்பார்கள். மாடு உண்பவர்களை கொல்லுவார்கள்.
இப்போது பாருங்கள் மதவாதிகளே ஒட்டுமொத்தமாய் தெய்வமாக வணங்கும் மாட்டையே உயிருடன் புதைக்கிறார்கள்.
உயிருடன் புதைக்கப்படும் போது அம்மாடுகள் அடைந்திருக்கும் மூச்சுத்திணறலை நினைத்துப் பாருங்கள்.
எவ்வளவு கொடுமை அது...
ஜி.எஸ்.டி வரி மாதிரி ஒவ்வொரு மக்கள் செலவுக்கும் “மாட்டு வரி” என்று ஒன்று வைத்து இம்மாடுகளை காப்பாற்றுகிறேன் என்பதுதான் அவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும்.
மிக இயல்பான ஒரு விஷயம் உணவு...
அமெரிக்கர்கள் போல மாட்டுக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
சீனர்கள் போல பன்றிக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
நம்மை விட அவர்கள் எவ்விதத்தில் குறைந்து விட்டார்கள்.
மனிதநேயம், பண்பாடு, பிறரை மதித்தல் இதில் கூட அவர்கள் நம்மை முந்தியே இருக்கிறார்கள்.
நம் நாட்டில் மட்டும்தான் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது.. பன்றிக் கறி சாப்பிடக் கூடாது... எவ்வளவு மனத்தடைகள்...
படித்த மக்களே திருந்துங்கள்... யோசியுங்கள்...
மாட்டின் பாலைக் குடிக்கிறீர்கள்... புரோட்டீன் சத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்..
அது போல மாட்டுக்கறியை உண்டு புரோட்டீன் எடுத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு...
உங்களுடைய மதக்கொள்கையால் வடமாநிலங்களில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள் சத்துணவில் முட்டை கூட சாப்பிட முடியாமல் தவிக்கின்றன...
நாம் சொல்லும் ஸ்லோகங்கள் எல்லாம்
எத்தனையோ குழந்தையின் தட்டில் உள்ள
சத்தான உணவை தினமும் பிடுங்கி தூர எறிந்து அவர்களின் உணவின் மேல் கைவைக்கிறது என்பதை நம்ப முடிகிறதா..
ஆனால் அதுதான் உண்மை...

Thursday, December 27, 2018

கண்ணன் கேள்வி - பிஜேபி நாடார்கள்?

கண்ணன் கேள்வி - பிஜேபி நாடார்கள்?



பதில் - உழைத்து முன்னேறிய சமூகம் என்று அறியப்படும் நாடார்கள், அரசியல் முக்கியத்துவம் இன்றி தவித்தனர். பொருளாதாரத்தில் வளர்ந்த பிறகு, அரசியல் ஈடுப்பாடும் அதிகரித்தது.

ஜாதீயை, மதத்தை வைத்து அரசியல் செய்யும் பிஜேபி, தெய்வ வழிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் நாடார்களை வளைத்தது. இந்து தூபம் போட்டு மயக்கியது. பொருந்தா கூட்டணி. ஆனாலும், தம் சமூகத்துக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்று தந்து விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த நிலைபாட்டை எடுத்தனர் நாடார் தலைவர்கள்.

தமிழிசை அவர்கள் பதவிக்கு இன்னும் தோள் தருபவர்கள் நாடார் சங்க தலைவர்கள்தான். பொன்னர் அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் விஷயத்தில் சிறு சங்கடம் இருந்தாலும், பிஜேபியை வைத்து சாமர்த்தியமாக பயணித்துவிடலாம் என்று எண்ணினார்கள்.

ஒன்றிய அரசு பலம், பணம் இருக்கும் தெம்பில் தமிழக அரசியலில் கலக்கலாம் என்று எண்ணியவர்களை கலங்க வைத்துவிட்டது ஆர்.கே நகர்.

பிஜேபியும் நாடார் சங்கத்திற்கு வரும் கூட்டம் அப்படியே தங்களை கோட்டைக்கு அழைத்து சென்றுவிடும் என்ற நினைப்பில் மண். இனி, பிஜேபிக்கு நாடார்கள் தேவைப்பட மாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த அவமானம்.

இனியேனும், நாடார் தலைவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சென்ற தலைமுறை உழைத்து, ஒழுக்கத்துடன் இருந்து கட்டிக்காத்த நல்ல பெயரை, பிஜேபியுடன் சேர்ந்து ஏற்கெனவே கெடுத்தாகிவிட்டது, இனி, மேலும் அவமானப்படாமல் உடனே வெளியேறுங்கள்.

நீங்கள் அரசியல் முக்கியத்துவம் பெற வேண்டுமானால், குறுக்குவழியை தேடாமல் மக்களுக்காக உழைத்து முக்கியத்துவத்தை பெறுங்கள். நீங்கள் வந்த பாதையில் கற்றப் பாடத்தை இன்றும் ஒடுக்கப்பட்டவர்களாக, தாழ்த்தப்பட்டவராக இருப்பவர்களுக்கு பயன் பெறும் வகையில் செயலாற்றுவீர்களானால் அது உங்கள் முந்தைய தலைமுறைக்கு செய்யும் பெரும் பேறு மட்டும் இன்றி அரசியல் முக்கியத்துவம் தானாக தேடி வரும்.

சமூகம் என்று இனியும் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைக்காமல், தமிழர் நலனில் கவனம் செலுத்தினால், தமிழ் நாட்டுக்காக உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்ட சங்கரலிங்கனார் ஆன்மா சாந்தியடையும். செய்வீர்களா?

Wednesday, December 26, 2018

சில அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக செய்த உணர்ச்சி வேகப் பேச்சுக்கு பலியானவர் என்பது புரிகிறது

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலகட்டத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்கள் அப்பொழுது மற்றைய நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த போராளிக் குழுக்களையே தமது வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டார்கள்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் அப்பொழுது தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் குண்டு வைத்தார்கள். விமானங்களை கடத்தினார்கள். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தியா போன்ற நாடுகளிலும் இடதுசாரி புரட்சகர இயக்கங்களின் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. பண்ணையார்களை கடத்துவது, கொலை செய்வது, அரசாங்கத்திற்கு தகவல் சொல்பவர்களை சுடுவது என்கின்ற பாதையில் அவர்களின் போராட்டமும் போய்க் கொண்டிருந்தது.
இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் எமது தமிழ் இளைஞர்களும் ஆயுதங்களை ஏந்தினார்கள். சிங்கள அரசாங்கத்தின் கட்சியில் இருந்தவர்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிட்டவர்கள், தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் என்று எல்லோர் மீதும் அவர்களின் துப்பாக்கிகளும் திரும்பியது.
அன்றைய உலகின் போக்கில் இது தவிர்க்க முடியாத அவலமாகிப் போனது. சிறுவயதில் துரோகி அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டார் என்றுதான் படித்தோம். இன்று இருந்து சிந்தித்தால், சில அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக செய்த உணர்ச்சி வேகப் பேச்சுக்கு பலியானவர் என்பது புரிகிறது. துரையப்பாவை சுட்டது சரி என்றால், இன்றைக்கு விஜயகலா மகேஸ்வரனில் இருந்து அங்கஜன் வரை சுட வேண்டும்.
அண்மையில் இயற்கை எய்திய அதிபர் பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் 1989ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எவ் இயக்கம் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். அன்றைக்கு அவரை சுட்டிருந்தால் 'ஒழிந்தான் துரோகி' என்பதோடு அவர் வரலாற்றை முடித்திருப்போமே என்று நினைக்கின்ற போதே உள்ளம் நடுங்குகின்றது. இன்றைக்கு அவர் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், மாணவர்களினதும் அஞ்சலியோடும், ஆசான் என்கின்ற மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
தீவிரமான தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் விருப்பப்பட்டியலில் இன்றைக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இருக்கிறார். அன்றைக்கு புலிகளிடம் மாட்டியிருந்தால், அதோ கதிதான். ரெலோ இயக்கத்தின் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பார்வதி அம்மாவின் இறுதி நிகழ்வை சிவாஜிலிங்கம் முன்னின்று நடத்துகின்றார்.
காலம் இவர்களுக்கு வழங்கிய வாய்ப்பை நிறையப் பேருக்கு வழங்காமல் போய்விட்டது. இன்றைக்கு தமிழர் அரசியலில் முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய பலரை துப்பாக்கிகள் கொன்று தீர்த்து விட்டன. அன்றைக்கு யார் துப்பாக்கி ஏந்தியிருந்தாலும், இந்த நிலை மாறியிருக்கப் போவதில்லை. ஏற்கனவே சொன்னது போன்று, உலகில் விடுதலைப் போராட்டம், மக்கள் புரட்சி என்று எல்லாவற்றின் பாதையும் இதுவாகத்தான் இருந்தது.
இன்றைக்கு நாம் இவற்றை படிப்பினைகளை பெறுவதற்கான சம்பவங்களாகத்தான் நோக்க வேண்டும். நியாயப்படுத்தல்கள் செய்து எதிர்காலத் தலைமுறையினரையும் இதே வழியில் செல்வதற்கு தூண்டக் கூடாது. சம்பந்தனை கொல்ல வேண்டும், சுமந்திரனைப் போட வேண்டும் என்று மனநோய் பிடித்து முகநூலில் சிலர் கவிதைகளையும் பதிவுகளையும் எழுதுவதைப் பார்க்கிறேன். இந்த மனநோய் பரவக் கூடாது என்பதில் இனப்பற்றும் மானுடப்பற்றும் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Friday, December 14, 2018

இந்திராவின் மருமகள், இந்தியாவின் மகள்

1997 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள், அன்றைய காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரிக்கு 10, ஜன்பத் இல்லத்தில் இருந்து ஒரு குறிப்பு வந்தது . அதை வாசிக்கும் போதே அவர் முகம் மாறியது " It is all over... She is coming " என்று அந்த குறிப்பை சோகமாக வாசித்து முடித்தார். அந்த எட்டு வரி குறிப்பு தான் சோனியா காந்தியின் அரசியல் வாழ்க்கையின் முதல் புள்ளி. அந்த குறிப்பில் 1998ஆம் ஆண்டு பாராளமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் அறிவித்தார். தன்னுடைய கனவர் இறப்புக்கு பின் ஏழு ஆண்டுகள் அமைதியாக இருந்த சோனியா காந்தியின் இந்த முடிவை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அப்படி தான் அவர் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.அதற்கு அடுத்து சில மாதங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.
கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது அவருக்கு சொந்த கட்சியிலே பல எதிர்ப்புகள் குறிப்பாக, ஷரத் பவார், மறைந்த லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா இவர்கள் எல்லாம் கட்சியை விட்டு விலகினார்கள். அத்தனை எதிர்ப்புகளையும், சவால்களையும் தனி ஒரு நபராக அவர் எதிர் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த தலைமையை வழங்கினார். தலைவராக பொறுப்பேற்று ஆறு ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தார். பதினொரு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இருபத்து நான்கு மாநிலங்களில் ஆட்சியை கைபற்றியது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலே 19 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒரே நபர் அவர் மட்டுமே.
நேரடியாக அரசியலில் களம் இறங்காத போதும் 1970களிலும், 80களிலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி களின் அரசியல் நடவடிக்களையும், அதிகாரத்தில் இருக்கும் போது அவர்களது செயல்பாடுகளையும் அருகில் இருந்து பார்த்தவர். கட்சியை வழி நடத்துவதில் இந்திராவும் சோனியா காந்தியும் ஒரே அனுகுமுறையை கையாண்டதில்லை. கட்சியில் மூத்த தலைவர்கள் தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினால் இந்திரா காந்தி அத்தனை பேரையும் அதிரடியாக நீக்கி விடுவார் அல்லது கட்சி இரண்டாக உடையும். சோனியா காந்தி அப்படி அல்ல அவர்களே கட்சியை விட்டு விலகும் வரை அமைதியாக இருப்பார். 1994ல் நரசிம்ம ராவ் சோனியா காந்தியை ஓரம் கட்ட நினைத்த போதும் கூட அவர் கட்சியை பிளக்க முயற்ச்சிக்கவில்லை. பெரும்பான்மையான மத்திய அமைச்சர்களும் , மாநில முதல்வர்களும் அப்போது சோனியாவை தலைவராக்க விரும்பினார்கள் எனினும் அவர் மறுத்து விட்டார். 2004ல் கூட பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். 1975ல் அலாகாபாத் உயர் நீதி மன்றம் அன்னை இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்த போது அதை ஏற்க மறுத்து அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். ஆக தலைமை பொறுப்பை பொருத்தவரை அடிப்படையிலேயே இந்திரா காந்திக்கும் சோனியா காந்திக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு. சோனியா எப்போதும் ஒரு democrat leader தான்.
சோனியா காந்தியின் வாழ்க்கையை நான்கு காலக் கட்டங்களாக பிரிக்கலாம் .முதல் காலக் கட்டம் அவருடைய திருமண வாழ்க்கை , காதல் கனவர், தன்னுடைய அத்தையான அன்னை இந்திராவின் முழுமையான அன்பும் அரவனைப்பும் பெற்ற ஒரு நிறைவான திருமண வாழ்க்கை. எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த போது அன்னை இந்திராவின் படுகொலை அவரை பெரும் சோகத்தில் தள்ளியது.
இரண்டாம் காலக் கட்டம் அவருடைய வாழ்க்கையை தலை கீழாக புரட்டி போட்டது. ராஜீவின் மரணம் அவருடைய வாழ்க்கையில் பேரிடியாக வந்து விழுந்தது. ராஜீவ் காந்திக்கு அரசியல் மீது நாட்டமே இல்லை. அன்னை இந்திரா பிரதமராக இருந்த போதும் அவர் பைலட் ஆகவே இருந்தார். சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு அன்னை இந்திராவின் வற்புறுத்தலால் அரசியலில் நுழைந்தார் ராஜீவ். அன்னை இந்திராவின் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் காரியக் கமிட்டி ராஜீவை தலைவராக தேர்ந்தெடுத்த போது அதை கடுமையாக எதிர்த்தார் சோனியா. அன்னை இந்திரா போல் தன் கனவரும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. எல்லா பொதுக் கூட்டங்களுக்கும், வெளிநாடு பயணங்களுக்கும் ராஜீவ் உடன் சோனியா எப்போதும் இருப்பார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி சோனியாவின் வாழ்க்கையில் இடி விழுந்தது. தன்னுடைய அன்பு கனவரை தீவிரவாதத்துக்கு பலி கொடுத்தார். அதில் இருந்து மீண்டு வர அவர் மிகவும் சிரமப்பட்டார்.
மூன்றாவது காலக் கட்டம் 1991 முதல் 1998 வரை அந்த ஏழு ஆண்டுகள். வாழ்க்கையை வெறுத்து தனிமையில் இருந்தார். அவர் இத்தாலிக்கே திரும்பப் போகப் போவதாக அப்போது பேசப் பட்டது. இந்த காலக் கட்டத்தில் தான் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தினார்கள். அதை முற்றிலுமாக நிராகரித்து விட்டார். டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் வந்த போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து " சோனியா , சோனியா " என்று கத்தினார்கள். பத்து நிமிடத்திற்கும் மேலாக கைதட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. காரியக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் சோனியாவிடம் வந்து மேடைக்கு வர அழைத்த போது, இந்த ஆர்பாட்டத்தை இப்போது நிறுத்தா விட்டால் நான் கூட்டதில் இருந்து வெளியேறுவேன் என்று எச்சரித்தார். இந்த காலக்கட்டத்தில் தான் Rajiv Gandhi Foundationஐ தொடங்கினார். மேலும் Nehru Memorial Fund , Indira Gandhi Memorial trustஐ தலைமையேற்று பல சர்வதேச மாநாடுகளை டெல்லியில் நடத்திக் காட்டினார்.
நான்காவது காலக் கட்டம் அவருடைய அரசியல் பயனத்தின் தொடக்கம். 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார். 1998 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரானார். பிறகு 2004ல் காங்கிரஸ் அதிக இடங்களை கைபற்றியபோது ஐக்கிய முற்போக்கு கூட்டனி என்று ஒன்று உருவானது அதன் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா தான் பிரதமராக வேண்டும் என்று முதல் ஆளாக சொன்னவர் கலைஞர், அனைவரும் அவர் தான் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்தார்கள். சோனியா அது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அன்றைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாமை சந்தித்து ஆட்சி அமைக்க தமக்கு போதுமான MPக்கள் இருப்பதாக தெரிவித்தார், அப்போது MPக்களின் ஆதரவு கடிதத்தை அவர் எடுத்துச் செல்லவில்லை. MPக்களின் ஆதரவு கடிதத்துடன் அதற்க்கு அடுத்த நாள் கலாமை சந்தித்தார். இரண்டாம் நாள் கலாமை சந்திக்க சென்ற போது சோனியா தன்னுடன் மன்மோகன் சிங்கை அழைத்துச் சென்றார்.
அந்த ஒரு நாள் இரவில் தான் சோனியா தான் பிரதமராக போவதில்லை என்ற முடிவை எடுத்தார். ஆதரவு கடிதத்தை திரு.அப்துல் கலாமிடம் கொடுத்து விட்டு குடியரசு தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது Madam , Are you the next PM ? என்று ஒருவர் கேட்ட போது " I think our country will be safe in the hands of Dr.Manmohan Singh " என்று கூறினார். சோனியா காந்தியின் இந்த முடிவை யாரும் எதிர்பார்க்க வில்லை. காங்கிரஸ் கட்சியினர் இதை நிராகரித்தார்கள், நாடு முழுவதும் அன்று சுஸ்மா ஸ்வராஜ்ன் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது காரணம் சோனியா பிறப்பால் ஒரு இத்தாலியர், அவர் பிரதமரானால் நான் மொட்டை அடித்துக் கொள்வேன் என்று சொன்னார்.இன்றும் சங்கிகள் அப்துல் கலாம் அவருக்கு பதவி பிரமானம் செய்து வைக்க மறுத்து விட்டார் என்று பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சர்ச்சை பற்றி அப்துல் கலாம் தன்னுடைய Turning Points புத்தகத்தில் எழுதியிருக்கிறார் from Turning Points " While this communication was in progress, I had a number of emails and letters coming from individuals, organizations and parties that I should not allow Mrs Sonia Gandhi to become the prime minister of our country. I had passed on these mails and letters to various agencies in the government for their information without making any remarks. During this time there were many political leaders who came to meet me to request me not to succumb to any pressure and appoint Mrs Gandhi as the prime minister, a request that would not have been constitutionally tenable. If she had made any claim for herself I WOULD HAVE HAD NO OPTION BUT TO APPOINT HER " சுருக்கமாக " சோனியாவை பிரதமராக்க கூடாது என்று எனக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் தரப்பட்டது. அந்த கோரிக்கை அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானவை . ஒருவேளை சோனியா பிரதமராக வேண்டும் என்று அவரே நினைத்திருந்தால், அவருக்கு நான் பதவி பிரமானம் செய்து வைப்பது தவிர வேறு வழியில்லை "
அதற்கு பிறகு காங்கிரஸ் பாராளமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவர் பிரதமர் பதவி தனக்கு வேண்டாம் என்று தெளிவாக சொன்னார். அவருடைய பேச்சுகளில் மிகச் சிறந்த பேச்சு அது. காங்கிரஸ் MP ரேனுகா சௌத்ரி அவர் பேச்சை கேட்டு கதறி அழுதார். நான் youtubeல் பலமுறை பார்த்த வீடியோ அது, குறிப்பாக இந்த வரிகள் இன்றும் என் மனதில் இருக்கிறது " The people of India choosen us for their aspirations not for ours. I must be humble to decline this post" நாட்டின் உயரிய பதவியை இந்த இரண்டு வரிகளில் தூக்கி எறிந்தார்.
எச் ராஜா போன்ற ஈன பிறவிகளுக்கு அவர் இத்தாலியராக தெரியலாம். மோடி போன்ற தற்குறிகள் அவரை விதவை என்று அழைக்கலாம்.
ஆனால் அவர் இந்திராவின் மருமகள், இந்தியாவின் மகள்.

சில ஆதி திராவிட தோழர்கள் திராவிடர் இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள்

சில ஆதி திராவிட தோழர்கள் திராவிடர் இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பு இந்தியா முழுவதும் ஆதிதிராவிர் நிலை வப்படி இருந்தது என்பதைக் கூறிவிட்டு பிறகு சென்னை மாகாணத்தில் என்ன மாறுதல் செய்தார்கள் என்பதைக் கூறுகிறேன்.
நான் பதிவிட்ட இந்த நுல் எம்.சி.ராசா வாழ்க்கைச் சுருக்கமும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளும் ஜெ.சிவசமுகம் பிள்ளை அவர்கள் 1930 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டது.
இந்திய அரசு ஆதிதிராவிடர்கள் நிலையை அறிந்து கொள்ள 1928 ஆம் ஆண்டு எம்.சி,ராசா தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அவர் இந்திய அரசுக்கு தொகுத்து அளத்ததை சிறு சிறு பகுதியாக தொடர்ந்து பதிவிட உள்ளேன்.
வாலாசா வல்லவன்.
இயல் - 7
இந்திய அரசின் மத்தியகுழு அறிக்கைக்கு ராவ்பகதூர் எம்.சி. ராசா எழுதிய குறிப்பு:
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் இந்திய நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய மாறுதலில், வளர்ச்சியில் ஒரு திட்டவட்ட மான பிரச்சினையாக உருவாகிவிட்டனர். அந்தப் பிரச்சினைகள் வரலாற்று சக்திகளால் மத, பொருளா தார மற்றும் சமுதாய சக்திகளின் விளைவாக உருவானவை. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே தோன்றிய மாற்றங்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற, சமுதாய கருத்துக்களை வெடித்து சிதற வைத்தன.
பூர்வீக இந்து சமுதாயத்தை உருவாக்கியவர்கள் விதித்த நிபந்தனைகளின் காரணமாக, அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கள் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் உருவாக்கிய விதம் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளின் காரணமாகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களிடையே விழிப்புணர்ச்சி எற்பட்டு அவர்கள் தங்கள் வாழ்வு மேம்படவும் பொருளா தாரம், கல்வித்துறைகளில் முன்னேற்றம் ஏற்படவும் அரசியல் பிரச்சினையாக அதை உருவாக்கினார்.
அவர்களிடையே தங்கள் வகுப்புக்களைப் பற்றிய உள்ளுணர்வுகள் வளர்ந்தன, தாழ்த்தப்பட்ட வகுப்புக்களை சார்ந்தவர்களது பூர்வீகம் வரலாற்று அடிப்படையில் ஆய்வுக்குரியது. அரசாங்கத்தின் அனுதாபம் காரணமாகவும், இந்து சமுதாயத்தில் மிக தாமதமாக சமூக விழிப்புணர்வு உருவான காரணத்தினாலும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சக்திகளுக்கு பழைமைவாதிகள் ஒருபக்கமும் அறியாமை இன்னொரு பக்கமும் அணிதிரண்டு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைகளை ஒப்புக் கொள்கின்றன மற்றும் அவர்களுக்காக சிறப்பு நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கின்றன

சிந்துவெளி நாகரீகம்

ஆரியர்களை பற்றி தெரிந்து கொள்ளும் முன் சிந்துவெளி மக்களை குறித்து நாம் பார்ப்போம் ஏனெனில் இது ஒரு ஆரிய பண்பாடு என்று RSS கூட்டம் கூறிவருகிறது.
சிந்துவெளி நாகரீகம் என்பது சாரத்தில் பாலைவன நாகரிகம் ஆகும்.
அதாவது உலகில் தோன்றிய முதல் நாகரிகங்களான சிந்து வெளி நாகரீகம் சீனாவின் மஞ்சள் நதி மற்றும் யாஞ்சி நாகரீகங்கள் . எகிப்தின் நைல்நதி நாகரீகம். மெசபடோமியாவின் டைகிரீஸ் யுப்ரடீஸ் நாகரீகங்கள் அனைத்தும் ஏறத்தாழ சமகாலத்தில் தோன்றிய நாகரிகங்களாகும்
இந்த நாகரீகங்கள் அனைத்தும் சமகாலத்தில் தோன்றியவை அதுபோல் வேறொரு ஒற்றுமையும் உண்டு இவை அனைத்தும் கற்கால மனிதன் செம்பையும் வெண்கலத்தை கற்கருவிகளோடு இணைத்து பயன்படுத்திய காலமாகும்
இந்த நாகரீகங்கள் தோன்றிய பகுதிகள் அனைத்தும் பால நிலம், சார்ந்த ஆற்று பாசன பகுதிகள் ஆகும் அதாவது அக்கால மனிதன் தனது எளிய கற்கருவிகளைக்கொண்டு எளிமையாக வேளாந்தொழில் செய்ய தேர்வு செய்த இடங்களே பாலை சார்ந்த வண்டல் மண் கொண்ட நிலமாகும்
ஏனெனில் கற்கருவிகளசிக்கொண்டு அவனுக்கு இங்குதான் தோண்டுவதும் மண்ணை பதப்படுத்துவதும் மிக எளிதாக இருந்தது இதன் வளர்ச்சிப்போக்கில் நல்ல வருமானத்தையும் கொடுத்தது
இவை சுரங்கத்தொழில் மற்றும் பட்டரைகள் கைவினைத்தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபடும் அளவுக்கு வருமானம் பெருகியது
இப்படி வளர்ந்த இந்த நாகரீகங்களின் உச்சத்தில்தான் பொதுவாக மனிதன் பயிர்தொழிலை விரிவாக செய்ய ஆரம்பித்தான்
இதுஆரம்பத்தில் பெண்களால்தான் மேற்கொள்ளப்பட்டது என பழைய பதிவுகளில் கூறியுள்ளேன் நினைவில் கொள்க எனவே வேளாண் தொழிலை அடிப்படையாக கொண்ட இம்மக்கள் தாய் தெய்வத்தையே வணங்கினார்கள்
ஆனால் சுரங்கம் வர்த்தகம் பட்டரைத்தொழில் பெரிய படகுகளை செய்வது வெண்கலகருவிகளை ஏற்றுமதி செய்வது தந்த பொருட்கள் முத்துமாலைகள் மாணிக்க மாலைகள் போன்ற தொழில்கள் பரவலாக விரிவடந்தது
இந்த தொழில் பிரிவினை இயல்பாகவே ஆணாதிக்கத்தையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கி இருந்தது
இக்காலத்தில் மெசபடோமிய ஊர் பகுதியில் கிடைத்த தடயங்கள் அங்கு இறந்த ஆண்டையின் உடலின் நான்கு திசைகளிலும் 70 போர் வீரர்களும் பணியாளர்களும் அப்பென்ணின் உடலுக்கு காவலாக புதக்கப்பட்டு இருந்ததும் இது அடிமை சமூக அமைப்பு முறை என்பதையும் தெளிவாக்கியது
இதுபோல் எகிப்திய பிரமிடுகளும் அடிமை உழைப்பால்தான் கட்டப்பட்டன இதன் காலம் கிமு 2500
மேற்கண்ட இந்த உதாரணங்கள் வேலை பிரிவினையுடன் சேர்ந்து அடிமை முறையும் உருவானதைக்காட்டுகிறது
ஆனால் சிந்து வெளியில் இவ்வளவு கொடுமையான அடிமை முறை நிலவியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை
ஆனாலும் சாதிய வேலை பிரிவனை முறையோ அல்லது சற்று நெகிழ்வான அடிமைமுறையோ இங்கு இருந்து இருக்கவே வேண்டும்
சிந்துவெளி மக்கள் மாடு,ஆடு,கழுதை நாய் ஒட்டகம், யானை குதிரை போன்ற விலங்குகளை வீட்டு விலங்காக வளர்த்துவந்தனர்
குதிரைகளை ஆரியரே இந்தியாவுக்கு கொண்டுவந்தனர் என்பது தவறாகும் கிமு 2000க்கும் முன்பே இந்தியாவில் பல்வேறுபகுதிகளில் குதிரைகள் வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்டன என்பதை மொகஞ்சதாரோ,ஹரப்பா லோதல் சுர்க்கோட்டடா, கலிபங்கன் குண்டாசி ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் பற்றிய நீண்ட பட்டியலே இருக்கிறது
இவர்கள் மத்திய ஆசிய ஈரான் எகிப்து சீனா ஆகிய உலகின் பெரும் பகுதிகளுடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர்
என்பதற்கு அங்கெல்லாம் கிடைத்த ஹரப்பன் பொருட்கள் சான்றாக விளங்குகிறது
சிந்து வெளி பண்பாடு என்பது ஏதோ ஒரு இனத்துக்கான பண்பாடு அல்ல
அது இப்பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு மக்கள் சமூகங்களின் பொதுப்பண்பாடு ஆகும்
இதில் ஏற்றதாழ்வுகளும் இருந்தன சில பகுதிகளில் ஏர்கலப்பயும் சில பகுதிகளில் சூலம் போன்ற கருவிகளும் மன்ணை கிளர பயன்படுத்தப்பட்டது சில பகுதிகளில் ஆரம் கொண்ட சக்கரங்களும் சில பகுதிகளில் வட்ட சக்கரங்களும் பயன்பாட்டில் இருந்தன
இவை அந்த சமூகங்களுக்கு இடையில் நிலவிய வேறூபாட்டை கூறுகின்றன
சிந்து வெளி நாகரீகம் என்பது ஆப்கன் பாகிஸ்தான் முதல் குஜராத் உபி வரை ஏறத்தாழ 15 லட்சம் சதுர கிலோமிட்டர் தூரம் பரவி இருந்தது இவை இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் பாதியாகும் இந்த அளவு நிலப்பரப்பில் எந்த குறிப்பிட்ட இனங்களோ தேசிய இனங்களோ இதுவரை உருவானதே இல்லை
எனவே எந்த இனமோ அல்லது குறிப்பிட்ட மொழி சார்ந்த மக்களோ இது எங்கள் நாகரீகம் எனக்கூறுவது அவர்களின் அறியாமையே ஆகும்
இந்த நாகரீகத்தின் பெரும்பகுதி கிமு 1900 வாக்கில்; அழிந்து விட்டது
இதை ஆரியர்கள் அழித்தார்கள் என நம்புவதற்கு சில காரணகள் உண்டு அவை ரிக் வேதத்தில் இந்திரன் தஸ்யூ தாசர்களின் கோட்டைகளை அழித்தான் எனும்பாடல்கள் அடிக்கடி வருவது ஹரப்பா பகுதிகளின் தெருக்களில் பிணக்குவியல்கள் கிடைத்ததும் ஆகும்
இவை இரண்டையும் இணைத்து புரிந்து கொண்ட ஆங்கிலேய ஆய்வாளர் மார்சல் ஆரியர்களே இந்நாகரீகத்தை அழித்ததாக முடிவு செய்தார்
மேலும் ரிக்வேதத்தில் ஹரியூப்பிரியா நதிக்கரையில் நடந்த போரை பற்றிய பாடல்களும் வரலாற்று ஆய்வளார் DD கோசாம்பி இன்றைய ஹரப்பாதான் ரிக்வேத ஹரியூப்பிரியா என நம்பி விட்டார்
ஆனால் உண்மையில் புதையுண்ட நகரம் எனும்பொருளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஹரப்பா எனும் பெயர் சூட்டப்பட்டதை அவர் அறியவில்லை
மேலூம் ஹரப்பாவில் காண்ப்பட்ட பிணக்குவியல் பல்வேறு கால கட்டங்களை சேர்ந்தவை என்பதும் அவர்கள் அனைவரும் கடும் தொழு நோயாளும் காச நோயாளும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது
மேலும்,ஹரப்பா நாகரீகம் ஆரியருடையது இல்லை இவர்கள் தந்தை வழி தனித்தெய்வங்களையே வணங்கினர் சிந்து மக்களோ தாய்வழி தெய்வங்களை வணங்கிய நகர்புறத்தை சேர்ந்த வேளாண்தொழில் சுரங்கத்தொழில் அனைத்திலும் திறமை வாய்ந்தவர்கள்
ஆரியர்களோ மேய்ச்சல் தொழில் மட்டுமே அறிந்த நிலையான இருப்பிடம் அற்ற நாடோடி வாழ்வினர் இவர்களுக்கு விவசாயமோ ஏர்கலப்பை பற்றிய எந்த அடிப்படையும் அறியாதவர்கள்
மேலும் ஹரப்பா அழிந்த காலத்தில்தான் எகிப்திய மெசபடோமிய நாகரீகங்களும் அழிந்தன காரணம் மழை 200 ஆண்டுகள் பொய்த்துபோனதே காரணம் என பல்வேறு சான்றுகள் நிறூபிக்கின்றன
அக்ல்கால சிப்பி நத்தை ஓடுகளிள் கன ஆக்சிஜனும் கன ஹைட்ரனும் கலந்துள்ளது அப்பகுதியில் நிலவிய வரட்சியை சுட்டுகிறது மேகாலய குகை ஆய்வுகளும் மழைபெய்யாததை உறுதிசெய்கிறது
மேலும் ஹரப்பா நாகரீகம் அழிந்து 500. 600 ஆண்டுகளுக்கு பின்பே ஆரியர்கள் சுந்து வெளியில் குடியேறினார்கள்
கடைசியாக கிடைத்த தகவல்கள் சிந்து பகுதியை சுற்றி இப்போது வாழும் மக்களிடம் சிந்து மக்களின் ஜீன்கள்காணப்படுவதையும் அவர்களின் உடல் காசம் மர்றும் மலேரியா ஆகிய நோய்களை எதிர்க்கும்திறன் குறைந்தவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது
ஹரப்பா மக்களை தாக்கி அழித்த நோய்களில் மலேரியாவும் ஒன்று தொடரும்

இராஜாஜி மகள் லட்சுமி அம்மையார்

குழந்தை திருமணம் மூலம் பாதிக்கப்பட்ட இராஜாஜி மகள் லட்சுமி அம்மையார், காந்தியடிகள் மகன் தேவதாஸ்காந்தி ஆகியோரின் சாதிமறுப்பு திருமணம் நடந்த அந்த காலத்திலும்..

இதே மாதிரித்தான் சாதிக்காய் சங்கிபாய்ஸ் கதறிட்டு இருந்தாய்ங்களாம்...

(இந்த திருமணம் நடைபெற முக்கிய காரணம் தந்தைபெரியார்) 👍👍👍👍


b

வருணாசிரம தருமப்படி சுடுகாட்டிலும் பேதம்

வாழ்க மனுதர்மம் !
வளர்க மனு நீதி!
வருணாசிரம தருமப்படி சுடுகாட்டிலும் பேதம் !
2000 ஆண்டுகட்கு மேலாக மனு நீதிக்கு அடிமையாக இருக்கும் தமிழர்கள் பிணத்தைப் புதைப்பதிலும் சாதியவெறி கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் வியப்பென்ன ? 
மனு தர்மத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்காமல் மாந்தருக்கு உண்மையான விடுதலை கிடைக்காது !
" பார்ப்பனன் இறந்தால் (இரவிகுல மண்டலமுள்ள ) கிழக்கே உள்ள சுடுகாட்டுக்குக் கொண்டுபோ என்றும் ; சத்திரியனகா இருந்தால் (சாமராஜ்யபுரி மண்டலமுள்ள) வடக்கே கொண்டுபோ என்றும்; வைசியனாக இருந்தால்
(குபேர மண்டலமுள்ள) மேற்கே கொண்டுபோ என்றும் , சூத்திரனாக இருந்தால் (எமலோக மண்டலமுள்ள) தெற்கே கொண்டுபோ " என்றும் மனு கூறுகின்றார் .
சான்று : பக்கம் 86
சித்தாந்த சிந்தனை
டாக்டர் புரட்சிதாசன் , எம் . ஏ., வௌியீடு:பாண்டியன்பாசறை சென்னை 600 017

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

இன்றோடு 14 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது
அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்
உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே
அவரின் வாதமும் வல்லரசுகள் முன்னால் அவர் செய்த தர்க்கமுமே. பாலசிங்கமே புலிகளின் முகம், பிரபாகரன் என்பவன் முகமூடி
யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார்
அவர் புலிகளுடன் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று கொடுத்தவர் அவரே, அந்த ஆதரவில்தான் ராஜிவ் கொலை முதல் பல சிக்கல்களை தாண்டி புலிகளால் நிற்க முடிந்தது
பிரபாகரனுடன் நேருக்கு நேர் விவாதித்த ஒரே புலி இறுதிவரை பாலசிங்கம் மட்டுமே, இந்த கடிவாளம்தான் அதுகாறும் புலிகளை காத்தது
அமைதிபடை காலம், சந்திரிகா காலம் என எல்லா ஆபத்துக்களிலிருந்த்தும் புலிகள் அவரால்தான் காப்பற்றபட்டனர், பிரேமதாசா முதல் இறுதியாக நார்வே குழு வரை அவர் புலிகளை காக்க பட்டபாடு கொஞ்சமல்ல‌
உலக நிலை மாற, பாலசிங்கத்திற்கும் சில விஷயங்கள் புரிந்தன, இனி தனிஈழம் என்பது சாத்தியமல்ல, இந்தியாவும் ராஜிவ் கொலை என்பதை தாண்டி வராது, ஆனால் பிரபாகரனோ தனிஈழம் இல்லை என்றால் யாரையும் கொல்ல கூடியவர்
ஆனால் அமெரிக்க எச்சரிக்கையோ இனி யுத்தமென்று வந்தால் புலிகள் இருக்கவே மாட்டார்கள் எனும் ரீதியில் இருந்தது
பாலசிங்கம் தவித்தார், நார்வேயிடம் தனியாட்சி பரிசீலிக்கின்றோம் என சொல்லிவிட்டு பிரபாகரனை அவரால் சந்திக்க முடியவில்லை,
பிரபாகரன் உலகம் புரியாதவராய் இருந்தார், புரிவதற்கு அறிவு கொஞ்சமாவது வேண்டும்
பாலசிங்கத்தோடு முரண்பட்டார் பிராபரன், 2002ல் பாலசிங்கம் சுயாட்சி முடிவுக்கு வந்திருந்தார், ஆனால் பிரபாரகன் வரவே இல்லை.
சில இடங்களில் அவர் இறுதியில் பிரபாகரனால் அவமானபடுத்தபட்ட இடங்களும் உண்டு என்பார்கள்
2004ல் கருணா விலகும்பொழுதே , ஆண்டன் பாலசிங்கமும் விலகினார், உடல்நலம் காரணம் காட்டி விலகுவதாக சொன்னாலும், அவர் மனம் நொந்தது கொஞ்சமல்ல‌
உலகில் எல்லா நாட்டையும் பகைத்துவிட்டு ஒரு இயக்கம் நாடு அடைய முடியாது என அவர் சொன்னது யார் காதிலும் ஏறவில்லை
அந்த பாலசிங்கம், இறுதியில் புலிவால் பிடித்த கொடுமையால் ஏதும் யாரிடமும் பேசமுடியாமல் தவித்தார்
இந்தியாவுடன் அவர் நட்புறவினை ஏற்படுத்த முயன்றாலும், இந்தியா புலிகளை நம்ப மறுத்தது, காரணம் 1983 முதல் புலிகள் காட்டிய நன்றிகடன் அப்படி
இந்தியாவினை இழுத்து பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர விரும்பினார் பிரபாகரன், இந்தியா போங்கடா .... என்ற நிலைப்பாட்டில் இருந்தது, அதன் நிலைப்பாடு அப்படி
பிரபாகரனுக்கும் உலகிற்கும் இடையில் தவியாய் தவித்தார் பாலசிங்கம்
எப்படியாவது இந்தியாவினை இழுத்து தன் நோக்கத்தில் வெல்ல வேண்டும் என்ற பிரபாகரனுக்கு எப்படி இந்தியா வரும் என நம்புகின்றாய்? என சொல்லிபுரியவைக்க முடியா சோகத்தில் அவர் இருந்தார்
எதையுமே யோசிக்காத பிரபாகரன் ஒருபக்கம்
தனக்கு செவிமடுக்கா பிரபாகரனை மொத்தமாக ஒழித்துவிட மேற்குநாடுகள் ஒருபக்கம்
இதில் கொல்லபடபோவது லட்சகணக்கான மக்கள், இதுதான் பாலசிங்கத்தின் வேதனை
நார்வே தூதுகுழு என்பது அமெரிக்காவின் மென்மையான முகம், இஸ்ரேல் என்பது அவர்களின் கொடுமையான முகம் என்பது உலக அரசியல் தத்துவம்
அந்த நார்வே வந்து பேசுகின்றது என்றால் அது அமெரிக்காவின் குரல் என்றே அர்த்தம். 1987ல் ராஜிவினை வெளியே போ என சொன்ன பிரபாகரன், எரிக் சோல்ஹிமினையும் கழுத்தை பிடித்து தள்ள தயங்கவில்லை
பாலசிங்கத்திடம் இனி பிரபாரனின் சாவு தவிர்க்கமுடியாதது என்பதை சொன்னார் எரிக்சோல்ஹிம், ஏன் அமெரிக்க இலங்கை தூதரே "இனி புலிகள் யுத்தமென்று வந்தால் கேவலமாக தோற்பார்கள்" என சொன்னார்.
நார்வே தூதர் எரிக் சோல்ஹிமிடம் " லட்சகணக்கான சனம் சாக போகுது எரிக், அதனை நினைத்தால்தான் கடும் வேதனை" என இறுதியாக சொன்னதுதான் ஆண்டன் பாலசிங்கத்தின் வார்த்தை
அவர் காலமானதும், பாய்ந்துவந்த மேற்குலக கட்டளைகள் புலிகளை குதறி எறிந்து முடித்தும் விட்டன‌
எங்கோ காட்டுக்குள் சுட்டுகொண்டிருந்த இயக்கம், பாலசிங்கத்தின் வருகைக்கு பின்னே உச்சம் அடைந்தது, அவர் காலமெல்லாம் அது தன் கொடியினை பறக்கவிட்டுகொண்டே இருந்தது
சுருக்கமாக சொன்னால் அப்போரின் கிருஷ்ணபரமாத்மா சாட்சாத் பாலசிங்கமே, அவர் சொற்படி கேட்டிருந்தால் இந்நேரம் ஈழ வரலாறு மாறி இருக்கலாம்.
தர்மன் தவறு செய்தான், அதனால் பொறுத்திருப்போம் என்ற கிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு பாண்டவர் கட்டுபட்டனர்,
என்மீது தவறே இல்லை, அர்ச்சுணா யுத்தம் தொடங்கு என தர்மன் வனவாசம் போகாமல் யுத்தகளம் வந்திருந்தாலோ
கிருஷ்ணா உன் புல்லாங்குழலை தூக்கி நட, கர்ணனையும், பீஷ்மரையும் வெல்லும் வழி எனக்கு தெரியும் என அர்ச்சுணன் பேசி இருந்தாலோ பாரதம் என்னாயிருக்கும்?.."
அதுதான் ஈழத்தில் நடந்தது
புலிகளின் பெரும் தவறு ராஜிவ் கொலை, அடுத்த பெரும் தவறு பாலசிங்கத்தையும், கே பத்மநாபனையும் ஒதுக்கியது.
இதனால் ஏற்பட்டதே பெரும் அழிவும் முடிவும்
உனக்கு தெரியாது, இந்தியாவும் கலைஞருமே ஈழபோருக்கு காரணம்,என சீமானிய வைகோயிச அடிப்பொடிகள் சொல்லிகொண்டிருந்தால், அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்
பாலசிங்கத்தின் மனைவி அடெல் ஆஸ்திரேலியா பெண்மணி, வெள்ளைகாரிதான், ஆனால் கிட்டதட்ட சோனியா சாயல். கணவனுக்காக தமிழ் கற்றார்
ஈழபோராட்டத்தின் ஆரம்பம், சிக்கல், எது தடை?, எது பிடிவாதம் என்பது நம் எல்லோரையும் விட அடேலுக்கு நன்றாக தெரியும், காரணம் எல்லா பேச்சுவார்த்தைகளிலும் அவரும் பங்குபெற்றிருந்தார்
ஈழப்போர் முடிந்து எங்காவது அவர் பேச கண்டிருக்கின்றோமா?
சீமான், வைகொ, இன்னும் சம்பந்தமில்லா பலபேர் டிவிக்களில் பிரபாகரன் அப்படி, இப்படி என பேசிகொண்டிருக்க, பிரபாகரனிடம் ஒரு மூத்த சகோதரி போல பழகிய அடேல் அமைதி காக்கின்றார்.
அவருக்கு எல்லா ரகசியமும் தெரியும், ஈழமுடிவின் காரணமும் தெரியும், ஆனால் பேசவிட மாட்டார்கள், பேசவிட்டால் பலர் முகத்தில் கரி பூசப்படும்
அப்படி அது அரசியலாக்கபட்டுவிட்டது, அவர் பேசினால் பலபேர் ஓடவேண்டி இருக்கும், இந்த புலிபெருமை எல்லாம் தூரவீசபடும்.
அதனால் அவர் வாய்திறக்க கூடாது என்பதில் பலருக்கு ஆர்வம்
ஈழபோராட்டம் 30 ஆண்டுகள் நடைபெற்றது என்றால், உலகளாவிய ஒரு பார்வை பெற்றது என்றால் அதற்கு ஒரே காரணம் பாலசிங்கம்
அவர் வந்தவுடன் இயக்கம் விஸ்வரூபமெடுத்தது, அவர் இல்லாத இயக்கம் சீட்டுகெட்டென சரிந்தது
இன்று அந்த ராஜதந்திரியின் நினைவு நாள்,
திம்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவிலிருந்து அவர் நாடுகடத்தபட்டதும், பின் அமைதிபடை மோதலின் போது அவர் பிரேமதாசாவோடு போஸ் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன‌
அதே பாலசிங்கம் பின் ராஜிவ் கொலைக்கு பின் கிட்டுவுடன் லண்டனில் போஸ்கொடுத்த காலமும் உண்டு
பின்னாளில் பிரபாகரனை திருந்தமுடியாது என அவர் அறிந்த கால்ங்களில் இந்தியாவுடன் தன் தொடர்பினை ஏற்படுத்த முயன்றதும், இந்தியா கையினை தட்டிவிட்ட காலமும் கண்ணுக்குள் வந்தது
ஒருவகையில் பிரபாகரனுக்கு அஞ்சிய வாழ்வுதான் அவர் வாழ்ந்திருக்கின்றார், படித்தவர், பெரும் ராஜதந்திரி ஆனால் ஒரு முரடனுக்கு முக மூடியாக இருந்ததுதான் பெரும் சோகம்
ஆங்கில புலமையில் தன்னிர்கற்றவர் பாலசிங்கம், அதற்கு எடுத்துகாட்டு கிளிநொச்சி மாநாடு, உலக பத்திரிகையாளர் ஆங்கிலத்தில் கேள்விகளை அள்ளி வீச, அனாசயமாக பதிலளித்தார் பாலசிங்கம்
அதனை கவனித்தவர்களுக்கு ஒரு விசித்திரம் பிடிபடும்
கேள்விக்கான பதிலை வாய்வரை கொண்டுவருவார் பாலசிங்கம், அதற்குள் பிரபாகரன் முகம் மாறும், உடனே கேள்வியினை பிரபாகரனிடம் மொழிபெயர்ப்பார், பிரபாகரன் திருதிருவென விழித்துகொண்டே ஆஆஆஆ..ஈஈஈஈ,, அது.. என எதாவது முணகுவார், பிரபாகரன் பதிலுக்கு சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலத்தில் பதிலளிப்பார் பாலசிங்கம்
பிரபாகரனுக்கு ஒன்றும் புரியாது, இப்போதிருக்கும் அதிமுக எம் எல் ஏக்கள் போல முழித்துகொண்டே இருந்தார்
ஆனாலும் ஒரு கேள்விக்கு பிரபாரன் முட்டாள்தனமாக பதில் சொல்ல, உலகின் சுருக்கு கயிறு இறுகியது, அது ராஜிவ் கொலையினை பற்றி நிரூபர்கள் சுருக்கு போட, பாலசிங்கள் கேள்வியினை திருப்ப, கொஞ்சமும் யோசிக்காமல் "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்றார் பிரபாகரன்
அவரை பொறுத்தவரை அது பிரபாகரன் செய்த ஏராளமான கொலையில் ஒன்று, இந்தியர் வருந்தும் துன்பமா? சரி துன்பமான சம்பவம் என சொல்லிவிட்டார்
ஆனால் பால்சிங்கம் ராஜதந்திரமான வார்த்தைகளால் அதனை மறைத்தாலும், துன்பியல் சம்பவம் முத்திரையாயிற்று, அது பால்சிங்கத்தின் வார்த்தை அல்ல,
மாறாக பிரபாகரனின் வார்த்தை
பிரபாகரனை பக்கத்தில் வைத்து ஒரு பேட்டி கூட கொடுக்கமுடியா பாலசிங்கம், 30 ஆண்டுகளாக இயக்கம் நடத்தினார் அல்லவா? அதுதான் ராஜதந்திரம்
ஈழம் அமைவதில் 1991லே மண் அள்ளி போட்டாயிற்று, பின் பின்லேடன் ஆட்டத்தில் அதற்கு சமாதியும் கட்டியாயிற்று
பாலசிங்கம் சொற்படி கேட்டிருந்தால் இன்று ஈழத்தில் ஒரு சுயாட்சியாவது அமைந்திருக்கும், இத்தனை பெரும் அழிவு நடந்திருக்காது என்பதில்தான் பால்சிங்கத்தின் முத்திரை ஈழபோராட்டத்தில் பதிந்திருக்கின்றது.
ஈழ புலிகளுக்கு உண்மையான காவல்காரன் அந்த பாலசிங்கமே என்பதைத்தான் 2009 முள்ளிவாய்க்கால் உலகிற்கு உணர்த்தியது.
இதில் மகா விசித்திரம் என்னவென்றால், 30 வருடம் பழகிய அந்த பாலசிங்கத்திடம் சொல்லாத பல ரகசியங்களை பிரபாகரன் என்னிடம் சொன்னார் என சீமான் என்றொருவர் சொல்லிகொண்டிருக்கின்றார் அல்லவா?
அதுதான் மகா விசித்திரம்
பீஷ்மரிடம், கர்ணனிடம் கூட சொல்லாத ரகசியத்தை துரியோதனன் ஒரு வழிப்போக்கனிடம் சொன்னான் என்பதை நீங்கள் நம்புவீர்களானால், சீமானையும் நம்பிகொள்ளுங்கள்.
அங்கே திருமுருகன் காந்தி என்பவன் மே 17 அன்றுதான் ஈழம் அழிந்தது என சொல்லிகொண்டிருக்கின்றான் , இந்த டிசம்பர் 14 பற்றி எல்லாம் அவன் பேசமாட்டான்.
உண்மையில் ஈழதமிழரின் நம்பிக்கை அழிந்தது 2009 முள்ளிவாய்க்காலில் அல்ல, அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் அடைந்த டிசம்பர் 14.

அவா ஆத்துல vs நம்மாத்துல



அம்மபீ, வேத பாட சாலையில படிச்சுண்டிருந்தியே?
... ஆமாம் மாமா, ஏழு வருஷம் முடிச்சுட்டேன்...
ஏழு வருஷத்துல என்ன கத்துண்டே? சுருக்கமா சொல்லு..
... நம்மாத்துல நெய்ய பருப்புல ஊத்தணும்...
... அவா ஆத்துல .... நெருப்புல ஊத்தணும்...
.
.. நம்மாத்துல அரிசியை உலையில போடணும்...
... அவா ஆத்துல ..... தலையில போடணும்..
... நம்மாத்துல பூசணிக்காயை கூட்டுல போடணும்..
.
.. அவா ஆத்துல.. .. ரோட்டுல போடணும்..
அவா ஆத்து சாமானையெல்லாம் வீணடிச்சதுக்கு, அவாளண்ட காசும் வாங்கிண்டு,
கடைசியா.. ஸ்வாஹா சொல்லி முடிக்கணும்..

Tuesday, December 11, 2018

கடந்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம்

கடந்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம், காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட 2G ஊழல் குற்றச்சாட்டும், பாஜக அமைத்த பலமான கூட்டணிகளும், மீடியாக்களின் ஓயாத விளம்பரங்களுமே.
பாஜகவோ தனது வெற்றிக்கு காரணம் இந்துத்துவ கொள்கையும், மோடியுமே என தவறாக புரிந்து கொண்டு அதை தீவிரமாக நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் நலனை மறந்து விட்டார்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் அவதியுறும்போது, மக்களே தியாகம் செய்யுங்கள் என இரக்கமில்லாமல் சொன்னார்கள் ஆட்சியாளர்கள். 100க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.
லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் அவதிப்பட்டும் பலர் தற்கொலை செய்துள்ள போதும் அவர்களின் 3000கோடி ருபாய் கடனை தள்ளுபடி செய்யாமல் , 20 கோடீஸ்வரர்களின் 3லட்சம்கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது பாஜக அரசு.
சிறுபான்மை மக்களை எதிரியாக்கி 50மேற்பட்ட முஸ்லிம்கள் மாட்டின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட போதும் மவுனம் காத்து , கொலைகாரர்களை ஊக்குவித்தது பாஜக.
மக்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு இருக்கும் போது ராமர் கோவில் கட்ட அவசரத் தீர்மானம் போட்டனர் பாஜக.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் போது நடிகர் குடும்ப விழாக்களில் சந்தோழமாய் இருந்தனர்.
மக்கள் தங்களது வாக்குகளின் பலம் அறிந்து ஜாதி மதம் பார்க்காமல் மக்களுக்காக உண்மையாக உழைக்கும் அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்தால்தான்,
அண்ணல் அம்பேத்கர் , பண்டிட் நேரு கண்ட உண்மையான ஜனநாயகம் மலரும்.
ஜெய் ஹிந்த்

Tuesday, October 02, 2018

செத்தாலும் சாதி போகாது

கொஞ்ச நாளைக்கு முன்னாடி friend ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருந்தேன் ..
எப்பயும் சாதி எதிர்ப்பு பேசுரவன் அவன் ...
தீடீர்னு ஒரு நாள் அவங்க வீட்ல சண்ட ஏன்டானு கேட்டேன் இல்லடா பாட்டி சாதி வச்சு திட்டிருச்சுன்னு சொன்னான் என்னடா சொல்றா புரிலன்னு கேட்டேன் ...
எங்க அம்மா அப்பா காதல் பண்ணி கல்யாணம் பண்ணாங்க அப்பா தலித் அம்மா ஒரு இடைநிலை சாதிய சேந்தவங்க அவங்க மத்த பேரன பாக்குற விதமும் என்ன பாக்குற விதமுமே வேற மாறி இருக்கும் சின்ன வயசுல இருந்து என்ன அவங்க தூக்குனதே கெடையாது வீட்டுக்கு போய் சாப்பிட்டாலும் என் தட்டுக்கு மட்டும் வித்தியாசம் இருக்கும் மத்த எல்லாருக்கும் கீரை சாதம் செஞ்சு உருண்ட புடிச்சு வாயில திணிக்கும் போது நா மட்டும் கைல வாங்கி சாப்பிடுவேன் சின்ன வயசு கதையெல்லாம் சொல்லும் போதே கண்ணுல தண்ணி அடக்கிட்டு இருந்தான் ..
நா பேச்ச மாத்த எல்லா கொஞ்ச நாளைக்கு தான் உங்க ஆத்தாலும் ஐயனும் எங்க அம்மையும் அப்பனும் சாகுற வரையும் தான் அப்பறம் எல்லாம் மாறும் னு சொல்கிட்டு இருந்தேன்.
அந்த நேரம் வீட்ட விட்டு கிழவி வெளிய வந்துச்சு ஒரு மொற மொராச்சுட்டு போச்சு ....
கொஞ்ச தொலவு கிழவி போற வரையும் ரெண்டு பேரும் அமைதியா பாத்துட்டு இருந்தோம் இன்னும் வாழுறதே கொஞ்ச நாள் தான் அப்படி இருந்தும் தான் பெத்த பொண்ணு பையன் மேல இவ்ளோ வன்மத்த கக்க வைக்குது சாதி !
ஒரு சிலர் சொல்றாங்க செத்தாலும் சாதி போகத்துன்னு அது இந்த மாறி ஆளுங்க நடமாடும் போது தெளிவா தெரியுது .