Tuesday, July 03, 2018

எலைட் தலித்துகள், சாரி இப்படி சொல்வது அவர்களை புண்படுத்தும். அதனால் தலித் பார்ப்பனர்கள்

இன்று திருமா அவர்கள் திமுக வை யாரும் அழிக்க முடியாது என்ற கருத்து கூறியவுடன் அதற்கு சங்கிகள் பதறியிருக்கறார்களோ இல்லையோ தலித் அரசியல் பேசுபவர்கள் அதிகமாக பொங்கியுள்ளார்கள். இவர்களுக்கு சமூக நீதி முக்கியமா அல்லது திராவிடமும் தலித்தியமும் பிரிவது முக்கியமா என்றால் கண்ணை மூடி கொண்டு திராவிடமும் தலித்தியமும் பிரிவது தான் முக்கியம் என்று கூறுவர்.
அவர்கள் செய்வதை பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை‌. தமிழ் தேசியம் இந்திய தேசியம் என எதை எதையோ தூக்கி கொண்டு வந்து கடந்த நூறு வருடங்களாக திராவிடத்தை அழிக்க பலரும் பல வழியில் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி பலவும் விழலுக்கிறைத்த நீராக வீணாக போனது தான் வரலாறு. உண்மையில் இந்திய தேசியம் தமிழ் தேசியம் ஆகியவற்றை தூக்கி பிடித்ததும் திராவிடம் தான். திமுக தான்.
சீனாவுடனான போர் என்று வந்தவுடன் இப்பொழுது நமக்கு நம் நாடு தான் முக்கியம் என்று நாட்டுப்பற்றுடன் அதற்கான நன்கொடையையும் அதிகமாக வசூலித்து அனுப்பியவர்கள் திராவிடர்கள் தான். அண்ணா அவர்களின் பேட்டிகளில் உள்நாட்டு பேட்டிகளில் பத்திரிக்கைகளில் மத்திய அரசையும் இந்திய தேசியத்தையும் கிழித்து தொங்க விட்டிருப்பவர் அமெரிக்கா மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொடுத்த பேட்டிகளில் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட மாநிலத்தின் முதல்வராக தனது நாட்டையும் தனது அரசையும் விட்டு தராமல் தான் பேசியிருப்பார்.
தமிழுக்கு திமுக செய்ததை பேசினால் அதற்கென்று ஒரு நூலகம் அமைத்து அந்த புத்தகங்களை அடுக்கும் அளவிற்கு இருக்கும். முதன்மையாக முக்கியமாக சில குறிப்புகள் சொன்னால்
1. தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.
2. இருமொழி கொள்கை
3. திருக்குறளை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தது. இது முக்கியமான ஒன்று. பச்சை தமிழன் என்று சொல்லப்படும் காமராஜர் ஆட்சியிலும் சரி தமிழ் மன்னர்களின் ஆட்சியிலும் சரி திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்லவே இல்லை. இராமாயணத்தையும் பாரதத்தையும் சிரமேற்கொண்டு மக்களிடம் சேர்த்த அவர்கள் திருக்குறளை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிற்கு பிறகு தான் பேருந்தில் திருக்குறளை கொண்டு வந்தது, திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட வைத்தது, குமரி முனையில் வள்ளுவரை நிறுத்தியது என்று அதனை எல்லாரிடமும் கொண்டு சென்று சேர்த்தனர்.
4. தனித்தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது திராவிடர் கழகத்தின் மூலமாக ஒரு கொள்கையாக ஒரு முன்னெடுப்பாகவே தொடங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று வாய் கூசாமல் பொய் பேசி இன்று பொய்யான பரப்புரைகளை செய்து வருகின்றனர். அவர்களையும் நாங்கள் கடந்து வந்தவர்கள் தான்.
இன்று ஒரு கூட்டம் எலைட் தலித்துகள், சாரி இப்படி சொல்வது அவர்களை புண்படுத்தும். அதனால் தலித் பார்ப்பனர்கள் என்றே குறிப்பிடுகிறேன். அவர்கள் வந்து திராவிடம் தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்லி கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலும் தலித்துகளின் நிலை மற்றும் அவர்களுக்காக தொடங்கப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் தமிழ்நாட்டில் அவர்களுக்கென திமுக செய்ததையும் ஒப்பிட்டாலே அவர்களுக்கு புரியும். இதை நாங்கள் எடுத்து சொன்னாலும் சொல்லி காட்டுறியா... இதான் டா உங்க சூத்திரபுத்தி என்று அவர்களின் சாதி ஒழிப்பு மனநிலையை அப்பட்டமாக காட்டுகின்றனர்.
பண்றது தான் பண்றாங்க என்னமோ பண்ணிட்டு போகட்டும் னு பார்த்தா அம்பேத்கரை என்னவோ அவர்களுக்கு மட்டுமான தலைவராக சித்தரித்து அவரை ஒரு இனத்திற்கான தலைவராக மட்டும் சித்தரிக்கிறார்கள். உலகின் மாபெரும் சிறந்த சிந்தனைவாதி ஆகச்சிறந்த அறிவாளி போற்றத்தக்க பொருளாதார நிபுணர் ஆகிய அம்பேத்கரை இப்படி ஒரு கூண்டுக்குள் அடைக்க முயல்வது அவருக்கு செய்யும் துரோகம் தான்.
நீங்கள் சொல்வதால் அம்பேத்கரை விட்டு விட்டு செல்ல முடியாது. வள்ளலார், இராமானுஜர், பசவர் ஆகியோரின் வரிசையில் அவரையும் பார்ப்பனர்களிடம் பறிகொடுக்க நாங்கள் தயாராய் இல்லை.
ஜெய் பீம் என்பதை என்னவோ அவர்களுக்கான வாசகமாகவே நிறுத்த முயல்கிறார்கள். அதை நீங்கள் எவ்வளவு பாடுபட்டாலும் அடைய முடியாது. அவர் எங்களுக்குமானவர். எல்லாருக்குமானவர். பெருமையாக சொல்வேன். உரத்து சொல்வேன். திரும்ப திரும்ப சொல்வேன்...
ஜெய் பீம் 🖤🖤🖤
ஜெய் பீம்💙💙💙
ஜெய் பீம் ❤️❤️❤️

Monday, July 02, 2018

ஆத்திகராக இருங்கள் நாத்திகராக இருக்காதீர்கள் என்று சொல்லும் ஆளுனருக்கு பல கேள்விகள்

ஆத்திகராக இருங்கள்
நாத்திகராக இருக்காதீர்கள் என்று சொல்லும் ஆளுனருக்கு
பல கேள்விகள்?
முதலில் நாட்டில் சாதி மத கலவரத்தை தூண்டுவது *ஆத்திகமா?, நாத்திகமா?*
கோயில் கருவறையிலே பாலியலில் ஈடுப்பட்டது *ஆத்திகனா?நாத்திகனா?*
கோயில் சிலையை (சாமி உங்களுக்கு)
திருடி சென்று அயல் நாட்டிற்கு விற்பனை செய்தவன் *ஆத்திகனா? நாத்திகனா?*
பழனி கோயிலில் சிலை செய்ய கொடுத்த தங்கத்தை திருடிய கயவன்
*ஆத்திகனா? நாத்திகனா?*
சிறுமி என்றும்பாராமல் கோயிலிலே அடைத்து வைத்து கொடூரமாக பாலியல் வன்முறை செய்த அயோக்கிய நாதாரி
*ஆத்திகனா?, நாத்திகனா?*
கடவுளின் பெயரால் திருவிழா நடத்தும் போது அடிதடி மோதலை உருவாக்கி ஊரையே தீயி்க்கு இரையாக்குவது *ஆத்திகனா?, நாத்திகனா?*
பாபர் மசூதியை இடித்து தள்ளி மதக்கலவரத்தை தூண்டியவன் *ஆத்திகனா?, நாத்திகனா?*
*இப்படி எல்லா ஒழுக்க கேட்டையும் செய்யும் ஒரே ஆள் யாருன்னா அது ஆத்திகன் தான்.*
*இப்ப சொல்லுங்க ஆத்திகனா இருப்பது நல்லதா*
*இல்லைன்னா நாத்திகனா இருப்பது நல்லதான்னு*
*எப்பவுமே நாத்திகமே சிறந்ததும், மேலாதும் கூட*
மன்னிக்கவுமi
*கடைசி வரி* *எப்பவுமே நாத்திகமே சிறந்ததும், மேலானதும் கூட என்று திருத்தி வாசிக்கவும்*

நான் ஏன் நரேந்திர மோதியை வெறுக்கிறேன்

நான் ஏன் நரேந்திர மோதியை
வெறுக்கிறேன்.
*****************************
1. டிமானிஸ்டேஷன்
---------------------------------
வருமானத்துக்கு அதிகமா செலவு செய்யமுடியாதபடி எல்லாமே சரியா இருக்கனும் அது இங்க இல்லையே.
ஒரு எடுத்துகாட்டுக்கு ஐந்து லெட்சம் வருமானம் உள்ள நான்
ஐந்து கோடி ரூபாய்க்கு வீடோ நிலமோ காரோ வாங்குனா..இவ்வளவு பைசா என்கிட்ட எப்படிவந்ததுனு கேட்க யாருமே இல்ல..
இருக்குற Income tax Department லையும் தேவையான அளவு Employee இல்ல..
பின்ன வருமானத்துக்கு அதிகமா யாரு வேணாலும் செலவு செய்யலாமே..
நான் பைக்குள போனா
என் பைக்குக்கு ஆர்சி புக்கு இருக்கா இன்சூரன்ஸ் இருக்கா
லைசன்ஸ் இருக்கானு கேக்கிறதுக்கு போலீஸ் இருக்கு ஆன என் பைக்கு என் வருமானத்தில் வாங்கபட்டதா என்று கேட்பதற்கு யாருமே இல்லையே. .
எனது வருமானதுக்கு அதிகமாக நான் தாராளமாய் செலவு செய்துகொள்ளலாம்..
அதிகபட்சம் செலவுகளுக்கான வரி மட்டும் தான் கட்டவேண்டும்..
இங்கே வருமானதுக்கு அதிகமாக செலவு செய்யமுடியாத சூழ்நிலை இருக்குமாயின்
எந்த போலிஸ்காரனும் லஞ்சம் வாங்கமாட்டான்
எந்த அரசியல் வாதியும்
ஊழல் செய்யமாட்டான்
ஊழல லஞ்சத்த ஓழிக்கனும்னா Police department விட Income tax department க்கு தான் அதிக Employee வேணும்..
ஒரு பேங்குக்கு லோன் வாங்கபோனா உங்களுக்கு Security இருக்கா Property இருக்கானு கேக்குறான்..
ஆனா அதே பேங்குல பைசா போட போனா எதுவுமே கேக்காம பேன் கார்ட வாங்கி Tax கட் பண்ணிட்டு பைசாவ அக்கவுண்டுல போட்டுகிடுதான்..
நான் லோன் கேட்டா ஆயிரம் கேள்வி கேக்கிறவன் ..
நான் பைசா போட்டா அந்த பைசா எங்கிருந்து வந்தாலும் அவனுக்கு கவலஇல்லை...
டிமானிஸ்டேஷன் என்பது வருமானதுக்கு அதிகமாக செலவு செய்யமுடியாத சூழ்நிலை இருக்கும்போது யாராக இருந்தாலும் தவறான வழியில் வந்த வருமானத்தை பணமாக பதுக்குவார்கள்..
அப்படி பதுக்கி வைத்திருக்கும் போது அறிவிக்கபடும் டிமானிஸ்டேஸன் தான் Successful ஆகுமேதவிர வருமானதுக்கு அதிகமான செலவை தாராளமாக செய்யும் தேசத்தில் ஒருநாளும் டிமானிஸ்டேஸன் Successful ஆகாது..
ஓட்டைப் பானையில்
தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டு
நான் தண்ணீரை சேமிக்கிறேன் என்று சொல்வதும்,நினைப்பதும்
முட்டாள் தனம்
மிஸ்டர் மாரிதாஸ்.
மேலும் மோடி ஆட்சியில் கொண்டுவரபட்ட டிமானிஸ்டேஸன் ஆனது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அல்ல
அது Cashless economy யை கொண்டுவருவதற்காக மட்டும் தான்..
ஆன் லைன் வர்த்தகத்தில் நம்பிக்கையில்லாத மக்களை குறிபிட்ட காலத்திற்கு ஆன் லைனில் உளாவவிட்டால் தானாக மக்கள் சில்லரை வர்த்தகத்திலிருந்து வெளியேறி கார்ப்ரேட்டின் அடிமையாவார்கள்..
என்ற நோக்கத்தில் கொண்டுவரபட்டதுதான் இந்த டிமானிஸ்டேஷன்..
இதை Successful ஆக முடித்து தருவதற்காக அம்பானியால் இலவசமாக இறக்குமதி செய்யபட்டது தான்
Jio sim..
இது நாளடைவில் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அன்று நாம் ஆன் லைன் வர்த்தகத்திலிருந்து வெளிவர முடியாத நிலையில் இருப்போம்
2. GST.
மோடி முதலமைச்சராக இருந்த
போது எதிர்த்த GST யை
பிரதமரானப் பிறகு
செயல்படுத்தினார்.
உள் நாட்டு பொருட்களுக்கும்
வெளிநாட்டுப் பொருட்களுக்கும்
ஒரே மாதிரியான வரியை
விதித்துவிட்டால்
அந்நிய முதலீடு அதிகரிக்கும்
அதே சமயம் உள்நாட்டுப்
பொருட்களின் விற்பனை
வீழ்ச்சியடையும்
இதன் மூலம் இந்திய ரூபாய்
மதிப்பும் வீழ்ச்சியடையும்.
இது தாங்கள் அறியாததா
மிஸ்டர் மாரிதாஸ்.
மேலும் சுற்று சூழலை பாதிக்கும் பொருளுக்கும்
பாதிக்காதப் பொருளுக்கும்
ஒரே மாதிரியான வரிகொள்கை
மூலப்பொருளுக்கும்
மதிப்புகூட்டு பொருளுக்கும்
ஒரே மாதிரியான GST வரி ..
என்ன சார் இது ..
3.பிளைட் மோட்
வெளிநாட்டு உறவை மோடிதான்
மேம்படுத்த வேண்டுமானால்
எதர்க்காக சுஷ்மா சுவராஜை
வெளியுறவுத்துறை
அமைச்சராக நியமிக்க வேண்டும்.
4. Free wifi
உப்புக்கு வரிகட்ட மாட்டோம்னு
சொல்லி உப்பு சத்தியாகிரஹம்
பண்ணிட்டு சத்தமே
இல்லாம சாப்பாட்டுக்கு
வரிக்கட்டிக் கொண்டு இருக்கிறோம்.
இன்னும் பத்துவருடத்தில்
தண்ணீருக்கும் வரிக்கட்டுவோம்.
அதப்பத்தி கவலைபடாம
ரயில் நிலையத்தில்
குடிதண்ணீரை இலவசமா
கொடுக்காம
எதுக்கு சார் Free wifi ..
கொடுக்குறாங்க..
5.மாட்டுக்கறி அரசியல்
மாட்டுக்கறி ஏற்றுமதிக்கு
தடைவிதிக்காமல்
ஏற்றுமதி செய்து
அந்நியனுக்கு உணவாக்கலாம்
ஆனால் சொந்த நாட்டு
மக்கள் உண்பதால்
மாட்டுக்கறி அரசியல்
ஆகிறதோ..
6. நிரவ் மோதி,மல்லையா
ஒருவிவசாயி பேங்குல
லோன் வாங்கி மாடு
வாங்குனா அந்த
மாட்டுக் காதுல சீல்
அடிச்சுவிடத்தெரிஞ்ச
பேங்குக்கு
பதினொராயிரத்து ஐந்நூறு
கோடி கடன் வாங்குனவனுக்கும்
அவன் சொத்துக்கும் சீல் அடிக்கத் தெரியல
அவன் வெளிநாட்டு
பணபரிவர்த்தனைய
தடுக்கத் தெரியல
அவன் பாஸ்போட்டையும்
முடக்கத்தெரியல.
என்னனு கேட்டா
ஏதோ அவரு பதினோராயிரத்து
ஐந்நூறு கோடிய
ஷீ ஷாக்சுலையும்
சட்ட பாக்கெட்டுலையும்
மறைச்சு வைச்சு கொண்டு
போன மாதிரி பேசுறது..
7. Clean India
பிளாஸ்டிக் ப் பொருட்களுக்கு
எந்த தடையும்,கட்டுப்பாடும்
விதிக்காமல் என்னடா
கீளின் இந்தியா..
8. விலைவாசியும் குறையல
வேலைவாய்ப்பும் கொடுக்கல
என்னடா காமன் இந்தியா
இருக்குற ட்ரெய்ன
சரி பண்ணாம
எதுக்குடா புல்லட் ட்ரென்னு.
9.. கெட்ட வார்த்தைகள்
மேலும் மோடியின் சிறப்பாட்சியில்
அதிகமாய் பேசப்படும்
கெட்டவார்த்தைகள்
தலித்,ஹிந்துத்துவா,RSS
மற்றும் பல..
10. மிஸ்டர் மாரிதாஸ்
நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்னு நீங்க
ஒரு புத்தகம் வெளியிட்டா..
நான் ஏன் மோடியை வெறுக்கிறேன் என்று
என்னால் பத்து புத்தகம்
வெளியிட முடியும்..
ஒரு வீடியோ போட்டுட்டு விவாதிக்கலாமானு
கேப்பீங்களே
வாங்க சார் விவாதிக்கலாம்
ஐ எம் வெயிட்டிங்.

விவசாயம் - 3

சில வாரங்களுக்கு முன் விவசாயத்தில் சாதியம் பற்றியும், சாதிய அமைப்புக்கு விவசாயத்தின் தொண்டு பற்றியும் எழுதியதற்கு நானே எதிர்பார்த்திராத வகையில், பலர் தன் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து இதைப் பற்றி மேலும் பேசுவது அவசியமான ஒன்று, மேலும் தொடர்ந்து எழுதுங்கள் என கூறியிருந்தனர்.
சாதிய அமைப்புக்கு அடுத்து விவசாயத்தில் நடக்கும் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், குழந்தைகளை விவசாயம் மற்றும் அது சார்ந்த வேலைகளில் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்க்கையையும், குழந்தை பருவத்தையும் அழிப்பது.
இதைப்பற்றி நான் எழுதுவதற்கு காரணம் விவசாயத்தை அழிப்பதற்காகவோ, நான் அதன் எதிராளியோ அல்ல. என்னுடைய அவா அனைத்தும் விவசாயத்தின் குறைகள் களையப்பட வேண்டும். குறைந்த பட்சம் அவற்றைப் பற்றி விழிப்புணர்வாவது மக்களிடம் வர வேண்டும். ஒரு சிலர் அறிவாளிகள், வேற எந்த தொழிலிலும் இதெல்லாம் இல்லையானு கிளம்பி வராதீங்க.
According to the Child Labour Act, 1986, a complete prohibition has been imposed on employment or involvement of child labour (A person below the age of 14) in any establishment whether hazardous or not. An amendment was made to the CL Act in 2016 and it was changed to Childhood and Adolescent (Prohibition and Regulation) Labour Act 1986. According to this law, children between 14 to 18 can be involved in helping the family after the school hours or during vacation.
இந்த கொடுமை விவசாயத்தில் சர்வ சாதாரணமாக அரங்கேறும். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அது தவறே இல்லை என்று வேற வாதாடுவார்கள். யோசித்து பாருங்கள் எத்தனை குழந்தைகளின் குழந்தைப் பருவம் அழிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கப் பட்டிருக்கிறது. உடனே, நானும் விவசாய குடும்பத்தில் தான் பிறந்தேன், நானும் வயலில் வேலை செய்து தான் வளர்ந்தேன், நான் நல்லா தான் இருக்கேன்னும் சொல்லிட்டு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறது.

விவசாயம் - 2

கேள்வி: கிழவி இரண்டு நாட்களுக்கு முன் விவசாயத்தில் சாதி இருப்பதாகவும், விவசாயம் சாதிய அமைப்பை நம்பி இருப்பதாகவும் பதிவிட்டீர்கள். உங்களுக்கு ஏன் விவசாயத்தின் மீது இவ்வளவு வெறுப்புணர்வு? விவசாயத்தில் சாதி பாகுபாடு இருப்பதை ஏற்கிறேன். ஆனால், விவசாயத்தில் மட்டும் தான் சாதி உள்ளதா? அனைத்து தொழில்களிலும் சாதி உள்ளதே, அதைப்பற்றி ஏதும் வாயைத் திறக்காமல் விவசாயத்தை மட்டும் சாடுவது ஏன்? விவசாயம் எவ்வளவு இன்றியமையாத ஒன்று?
மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே என சமூகத்தால் வரையறுக்கப்பட்ட, மக்களின் உயிர்களை காவு வாங்கும், மலம் அள்ளுதல் போன்ற தொழில்களைத் தவிர, சாதிய பாகுபாடின்றி அனைவராலும் அவரவர் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க இயலும் எந்த தொழிலின் மீதும் எனக்கு வெறுப்புணர்வு இல்லை. இங்கு தான் கொஞ்சம் பார்வையை ஆழமாக்க வேண்டும். தொழிலைத் தேர்ந்தெடுத்த பிறகு வேலை செய்யும் இடத்தில் சாதி அடக்குமுறை இருப்பதற்கும், தொழிலைத் தேர்ந்தெடுப்பதே இந்த சாதி மட்டும் தான் என வரையறை இருப்பதற்கு வேறுபாடு உண்டு. உடனே அப்போ அங்கு சாதி அடக்குமுறைகள் இருக்கலாமா என கிளம்பி வராதீர்கள். சாதிய அடக்குமுறை எங்கு இருந்தாலும் அதை எதிர்ப்பவள் நான்.
இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள் என அம்பேத்கர் கூறியுள்ளார். இந்துக்கள் இருக்கும் இடமெங்கும் சாதிய வேறுபாடு இருக்கும். அது பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், வெளிநாடாகட்டும், வேலை செய்யும் இடமாகட்டும். ஒரு இந்துவாக உங்களை நினைத்துக்கொண்டு நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களை அறியாமல் சாதிய எண்ணங்கள் உங்கள் ஆழ்மனதில் வேரூன்றி இருக்கும். மக்கள் இந்து மதத்தையும், மதகருத்துகளையும் விட்டொழித்தாலொழிய சாதிய பாகுபாட்டைக் களைய இயலாது.
எல்லா தொழில்களிலும் சாதி பாகுபாடு இருக்கும்போது விவசாயத்தை மட்டும் சாடுவது ஏன் எனக்கெட்டால், விவசாயத்தில் மட்டும் தான் சாதி பாகுபாடு என்பதை, அது வாழ்வியல் முறை அப்படித்தான் இருக்கவேண்டும், என்பது போல ஒடுக்கப்பட்டவர்களின் மனதில், இவர்கள் தான் நாட்டுக்கே சோறு போடுகிறார்கள் என்று உணர்ச்சியூட்டி பதியவைக்கப்படுகிறது. அவர்கள் எதிர்த்து கேள்வி கேட்கவோ, நினைத்தால் வேறு வேலைக்கு செல்லவோ விவசாயிகளுக்கு அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. விவசாய கூலிகள் பலர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலைக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதும், சித்ரவதைப்படுவதும் அவர்களது அன்றாட வாழ்க்கையாகி போயிருப்பது இதற்கு சான்று. மேலும், விவசாயம் செய்பவர்களே பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
விவசாயத்தை உணர்ச்சிகளை நீக்கி ஒரு தொழிலாக மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதுதான் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும். இல்லையேல், விவசாயம் என் உயிர்மூச்சு என்போர் அதே விவசாயத்திற்கு பலி ஆகவும் நேரிடும். இதைப்பற்றி மேலும் விவரத்திற்கு Please google, "Impacts of Climate Change on Agriculture", "Economic Survey 2018". தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்தாமல், இயற்கை, மரபு என சென்றால் என்ன ஆகும் என்பதற்கு இவை சான்று. மேலும் விரிவாக பிறகு பார்ப்போம்.
விவசாயத்தில் இருக்கும் அளவிற்கோ அல்லது அதிகமாகவோ சாதிய தலையீடு இருக்கும் தொழில்களை பட்டியலிடவும். அறிந்துக் கொள்ள மிக ஆவல். ஒரு ஆசிரியரை விட, ஒரு மருத்துவரை விட, ஒரு பொறியிலாளரை விட, ஒரு எழுத்தாளரை விட, ஒரு அரசு அதிகாரியை விட, (பல எடுத்துக்காட்டுகள்) விவசாய கூலி தொழிலில் சாதி வேறுபாடு குறைவு தான், எல்லாருக்கும் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என்றால் ஆதாரத்தோடு கூறுங்கள், அடுத்த கணமே நான் உங்களுடன்.
Don't allow your faith to substitute emotion for evidence.

விவசாயம் - 1

"நாம் பாரம்பரிய தொழிலை இழந்துவிட்டோம். இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால், ஊருக்கே சோறு போடும் விவசாயத்தையும், விவசாயியையும் நாம் மதிப்பதே இல்லை," இது போன்ற வசனங்கள் இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கின்றன. போதாதற்கு நம்மாழ்வார் போன்று ஒரு சில அதிதீவிர சமூக ஆர்வலர்கள் வேற இயற்கை விவசாயம், அது இதுன்னு உணர்ச்சி பொங்க பேசி பல இளைஞர்கள் மூளை மழுங்கி, "விவசாயம் என் உயிர்மூச்சு, அதிலும் இயற்கை விவசாயம் என் உயிர்மூச்சுக்கு ரெண்டு படி மேல" என்பன போன்ற வசனங்கள் பேசுவதையும் பார்க்கமுடிகிறது.
இவையெல்லாம், மத நம்பிக்கைகளைப் போல விவசாயத்தை புனிதப்படுத்தும் இழிவான செயல் என்பதை படித்த இளைஞர்கள் உணர மறுப்பது ஏனோ! மற்ற தொழில்களைப் போல விவசாயம் ஒரு தொழில். அவ்வளவே. என்னைக் கேட்டால் விவசாயத்தை விட மற்ற தொழில்கள் மேலானவை என்பேன். ஏனெனில், விவசாயத்திற்கு சாதி அமைப்பை ஊட்டி வளர்த்து தாங்கிப் பிடிப்பதில் மிக முக்கிய பங்குள்ளது. ஒரு விவசாயியின் மகளாக எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து கண்கூடாக நான் இதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பல ஆண்ட சாதி பிரியர்கள் அரசின் 100 நாள் வேலைத்திட்டம் விவசாயத்தை அழித்துவிட்டது எனப் புலம்புவதிலிருந்து என் கூற்று நிரூபணமாகும். 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்கள் வேலையே செய்வதில்லை என்பதெல்லாம் பிறகு வாதிடலாம். நில உடமையாளர்களின் நிலத்தில் வேலை செய்ய செல்லும் ஆட்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆண்டைகள் அவர்களின் மகன், மகள்களை படித்துவிட்டு நல்ல வேலைக்கோ, வெளிநாட்டிற்கோ அனுப்பிவிட்டு, அவர்கள் நிலத்தில் வேலை செய்ய யாரும் இப்போதெல்லாம் வருவதில்லை! 100 நாள் வேலைத்திட்டம் தான் கெடுத்துவிட்டது! விவசாயத்தை காப்பற்ற யாரும் இல்லை! என்று வெற்று சாதிவெறி கூச்சல் போடுவார்கள். ஆக, ஒடுக்கப்பட்டவர்கள் படித்து வேறு வேலை பார்த்து மேலே வரக்கூடாது, அவர்களிடமே கைகட்டி வேகும் வெயிலில் கூலி வேலை செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அப்பட்டமான சாதிவெறி.
நமது நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்திற்கு சாதி அமைப்பை ஒரு நேரடிக் காரணம் ஆக டாக்டர் அம்பேத்கார் முன்வைக்கிறார். தொழில் பிரிவினையோடு இல்லாமல், தொழிலாளர்களையும் பிரிப்பது தான் சாதி. பிரிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பிரிக்கப்பட்ட தொழிலையே செய்யவேண்டும் என்பது வேலையில்லா நிலைமைக்கு இட்டுச்செல்கிறது எனவும் கூறுகிறார். விவசாய நிலத்தில் அடிமைகளைப்போல இரவும், பகலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் இப்படி பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுபவர்கள் தான் கூலி விவசாயிகள்.
அவர்கள் தெளிந்தால் என்ன ஆகும் என பயந்து பீதியில் தான் விவசாயம் ஒரு புனித பிம்பமாக கட்டமைக்கப்படுகிறது. விவசாயமாகிய ஒரு தொழிலுக்கு உணர்ச்சி ஊட்டப் படுகிறது. இளைஞர்களைக் கவர இயற்கை விவசாயம் என கவர்ச்சியூட்டப் படுகிறது.

இந்து மதத்தை யார் முதலில் விட்டொழிக்க வேண்டும்

இந்து மதத்தை யார் முதலில் விட்டொழிக்க வேண்டும் என்று கேட்டால், பெண்கள் தான் முதலில் இந்த கருமத்தை விட்டொழிக்க வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில், இந்து மத நூல்கள், "பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை" என்று கூறுவதில் தொடங்கி, பெண்களின் மீது எந்த அளவிற்கு அநீதிகளையும், அநியாயங்களையும் கட்டவிழ்க்க முடியுமோ அந்த எல்லை வரை சென்று கற்பனைக்கும் எட்டா கொடுமைகளை பெண் சமூகத்திற்கு இந்து மதம் இழைத்துள்ளது.
இந்துமத வர்ண தர்மத்தின் படி, கடைசி படி நிலையில் உள்ள சூத்திரர்களை விட கீழ் நிலைக்கு தள்ளி, பெண்களை வர்ண மாற்றவர்களாக காட்டி அனைத்து வருணங்களில் உள்ள ஆண்களுக்கும் அடிமைகளாகவே சித்தரிக்கிறது. புரட்சி சமுதாய சிற்பிகளான தந்தை பெரியார் தென்னாட்டிலும், டாக்டேர் அம்பேத்கார் வடநாட்டிலும் மனுதர்மத்தை எரித்ததில் வியப்பேதுமில்லை.
இப்படிப்பட்ட கேவலமான அடிப்படைவாத இந்துத்துவ சித்தாந்தங்களில் முழுவதும் ஊறி போய் இருக்கும் அரசு (BJP, RSS) ஆளுகையில் தன் மக்களுக்கு என்ன செய்யும் என்பதற்கு இதோ மற்றுமொரு சாட்சி.


நமது இந்தி(து)ய திருநாடு, பெண்கள் பெண்களாக இருப்பதற்கே (வாழ்வது அடுத்தது) மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்தது என்பது கூடுதல் தகவல்.
இந்து மதமும், கோவில்களும், அதனை பின்பற்றுபவர்களுக்கும் சிறிதும் மனிதம் இல்லை என்பது, சமீபத்தில் கோவிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சித்திரவதை செய்து ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்ட ஆசிஃபா ஒரு சான்று. சில சமயங்களில் இந்த இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அனைவரும் சாட்சிகளாகவே செத்து மடிவார்களோ என்ற பயமும் அச்சுறுத்த தவறியதில்லை. இந்துத்துவ BJP அனைத்து அடிப்படை சக்திகளுக்கும் முழு அதிகாரம் கொடுத்து கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்கும் அந்த பயங்கர வாதிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.


எம்.ஜி.ஆர் ஒரு டம்மி பீசு. - எடப்பாடி எங்கிருந்து வந்தார் என்று புரிகிறதா

எம்.ஜி.ஆர் ஒரு டம்மி பீசு.
தமிழக மக்கள் செய்த மிகப்பெரிய தவறு
காமராஜரை தோற்கடித்தது அல்ல. எம்.ஜி.ஆரை ஜெயிக்க வைத்தது தான்.
1975ல் இந்திராகாந்தி அமல்படுத்திய
எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநிலம்
தமிழ்நாடு.அப்போதைய முதல்வர்
கலைஞர்.
எம்.ஜி.ஆர் பயந்து டெல்லி சென்று
எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக செயற்குழுவை கூட்டி எமர்ஜென்சிக்கு
எதிராக தீர்மானம் போட்டார் கலைஞர்.
அதிமுக பொதுக்குழுவை கூட்டி
ஆதரவாக தீர்மானம் போட்டார்
புரட்சித் தலைவர்.
எமர்ஜென்சியை எதிர்க்கும் மாநில
கட்சியை தடை செய்வோம் என்றார்
இந்திரா.முடிந்தால் திமுகவை தடை
செய்து பாருங்கள் என்றார் கலைஞர்.
தன் கட்சிப் பேரையே அனைத்திந்திய
அதிமுக என்று மாற்றினார் MGR.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்
ஜனநாயக காற்று வீசுகிறது என்றார்கள்
வடமாநில அரசியல்வாதிகள்.
அப்படிப்பட்ட கலைஞரை மீண்டும்
தேர்ந்தெடுக்காமல் 1977-ல் MGR-ஐ
முதல்வராக்கினர் தமிழக மக்கள்.
அப்போது மட்டும் மக்கள் கலைஞரோடு
நின்று அவர் கரத்திற்கு வழு
சேர்த்திருந்தால் தமிழகம் இன்னும்
வேறு உயரத்திற்கு சென்றிருக்கும்.
ஜெயலலிதா,எடப்பாடி என்று
கலைஞரின் ஆளுமைக்கு நிகரில்லாதவர்கள் எல்லாம் திமுகவுக்கு
மாற்றாக ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.வேறு ஒரு தகுதியான
மாற்று கட்சியாவது வந்திருக்கும்.
"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்" என்று சினிமாவில்
பாடிய MGR சினிமாவில் மட்டுமே
ஹீரோவாக இருந்திருக்கிறார்.
"தென்றலைத் தீண்டியதில்லை
தீயைத் தாண்டியிருக்கிறேன்" என்று
வசனம் எழுதிய கலைஞர் நிஜத்திலும்
ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார்...
எடப்பாடி எங்கிருந்து வந்தார்
என்று புரிகிறதா.??

நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவரா?

#ஆன்மீக_அறிவியல்
#பகுத்தறிவு
#நம்முனோர்கள்_முட்டாள்கள்
#பார்பனமுன்னோர்கள்_அயோக்கியர்கள்
வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது....
---- venu gopaala shanger எழுதுகிறார்...
இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.
சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும்.
இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூடும்.
மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான்.
பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மய்யம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.
போலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர். ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். பாரதத்தை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.
மதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது மதவாதிகள் அறிவியலால் தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.
இந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும், நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். உதாரணமாக "இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அளவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம்" இவ்வாறு வரலாறு உள்ள மனித கற்பிதங்களை இதுவரை தெரியாத அறிவியலுடன் முடிச்சுப்போடுவார்கள்.
இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, மந்திரம் ஓதுவது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகளின் மூலம் மீண்டும் மதநிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன.
இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.
அமெரிக்காவில் உள்ள நாசாவும், நமது திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிவிட்டார்களாம் என்பார்கள். இல்லையென்றால் திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வைத்துவிட்டு போய்விட்டார் என்பார்கள்.
ஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போடுவார்கள். அணுவின் இயக்கத்திற்கும் நடராஜர் நடனத்திற்கும்கூட முடிச்சுப்போடுவார்கள். ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். ஏன் நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம் என்று நாம்கூட கூறிவிட்டுபோகலாம். கேட்பவர் சுயமாக யோசிப்பதே இங்கு முக்கியம். ஆதாரமற்ற எவற்றையும் புறந்தள்ளுவதே புத்திசாலித்தனம்.
எதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம்மைச்சுற்றி இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.
மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.
எடுத்துக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவதில்லை.
அதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் இந்த ஆன்மீக அறிவியலைவைத்து ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது.

ஆர்எஸ்எஸை தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும்

ஆர்எஸ்எஸை தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும் ..திமுக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸை அகற்றிவிடுவோம்..
#மானமிகு_கனிமொழி..
..
இப்போதுதான் சரியான பாதையில் செல்கிறது மிகவும் ஆபத்தான தேசத்தின் ஒருங்கிணைப்பை வெட்டி சாய்க்கும் இயக்கமாய்.. இந்தியர்களின் ஒற்றுமைக்கு இடைஞ்சலாய் .. ஒருசாரார் வெளிப்படையாகவே சொல்ல வேண்டுமெனில் பார்பனர்களின் இயக்கமாய் .. சாதிய வெறியை தூண்டி மக்களை கலவரத்தோடு வைத்து ...மதவெறியை தூண்டி அதில் தங்கள் மட்டுமே பயனடைய வேண்டுமென்ற நோக்கோடு செயல்படும் இயக்கம்..
தொடங்கபட்ட காலத்திலிருந்தே.. அது இடைசாதி கடைசாதியினருக்கெதிராக இருந்தது.. சூத்திரன் கல்வியை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என வெளிப்படையாகவே சொல்லி திரிந்தவர்கள்.. ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காக .. இந்த மண்ணின் பூர்வகுடிகளை தாழ்ந்தவனாய் காட்டி சமுக ஏற்றதாழ்வை மனதில் ஆழமாக பதித்ததில் ஆர்எஸ்எஸின் பங்கு அதிகம்..
..
ஆரியம் அஞ்சுகிற ஒரே சொல் திராவிடம்.. ஆரியத்தை வேரறுக்க நீங்கள் எதை கொண்டுவந்தாலும் அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்துவிடுவார்கள் அல்லது முனை மழுங்கிய கதையாகும் ..இன்றைக்கு நடக்கிற அவலங்களுக்கெல்லாம் காரணியான பாசிசத்தை நம் மீது திணிக்க நாமே காரணமென்றால் அது உண்மையும் கூட.. மதம் சாதி என மெல்ல கடித்து குதறும் விடயங்களில் ஆரியர்கள் அடிக்கடி அரவணைத்து நம் குரல்வளையை கடித்து குதறுகிற போது நம்மவரை கொண்டே நம் கைகளை கட்டி போடுகிறார்கள்.. கல்வியில் நமக்கான உரிமையை பறித்து .. நாமே நமக்காக உண்டாக்கிய மருத்துவ கல்லூரிகளில் அவர்களினி குழந்தைகள் படிக்க வைக்க நம்மை கொண்டே சொல்லவைத்திருக்கிறார்.. இன்னும் நிறைய வரும் வராதுவந்த வாய்ப்பினை மிக கெட்டியாக பிடித்துக்கொண்டு இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் அரியகிட்டிய அடிமைகளை வைத்து கூத்தாட்டம் நடத்துகிறார்கள்.. அது தப்பாட்டம் என தெரிந்தும் காலம் கடத்த வேண்டியிருக்கிறது..
..
அளவிற்கு அதிகமாக பார்பனர்கள் பொதுவெளியில் ..விவாதங்களில் திமிரோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்.. மௌனமாய் இருந்ததால் நம்மீது கத்திவீச தொடங்கியிருக்கிறார்கள்.. எங்கு அடித்தால் இவர்களின் ஆட்டம் அடங்குமென அறிந்து வீசியடிக்கிறார் கனிமொழி..



..
என்வீட்டில் எல்லோருமே திமுக ..கனிமொழி மட்டும் திராவிடர் கழகம் .. ஆசிரியரின் மாணவியாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார் கலைஞர் ..
ஆம் இந்த துணிவு பெரியார் திடலோடான தொடர்பில் வந்தது ஆரியத்தை வீழித்த பார்பனர்களின் ஆட்டத்தை அடக்க திராவிடத்தை ..அதன் சித்தாந்தத்தை பற்றிபிடித்து கொள்ளுங்கள்..
வெல்லலாம்.. நிச்சயமாக பாசிசவாதிகள் அஞ்சுகிற ஒற்றைச் சொல் .. திராவிடம்..
குலைநடுங்க செய்கிற ஒரு பெயர் உண்டெனில் இது பெரியார் தான்..
பெரியாரை முன்னெடுக்கிற.. பெரியாரை கொண்டு நடந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் அதுவே .. தமிழகத்திற்கு விடிவை தரும் தமிழர்க்கு நிம்மதியை தரும்.. வாழ்த்துகள் கனிமொழி..
..
சரியான பாதையில் 

மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே தவிர சாதி சான்றிதழை கிழித்தால் அல்ல

சாதி சான்றிதழை கிழித்தால் சாதி ஒழியுமென்ற அதிமேதாவிக்கு.. மநுவை ஒழித்தால் தான் சாதி ஒழியுமே,தவிர சான்றிதழை அல்ல.. சாதி சான்றிதழை கிழிக்க சொல்வதின் பின்ணணியை பார்க்க வேண்டும் மிகவும் ஒடுக்கபட்ட சமூகத்தின் அடித்தட்டிலிரு்து மேலே வர முடியாமல் சுழன்று திரியும் எம் மக்களை .. மிகவும் பிற்படுத்தபட்டவராய்.. சமூகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு கல்வி வேலைவாய்ப்பில் ..உயர்சாதியினரோடு போட்டியிட முடியவில்லை.. பொருளாதாரம்..கட்டமைப்பு வசதி அதற்கான வாய்ப்புகள் மறுக்கபட்டவர்களையும் .. உயர்கல்விகளுக்கு வருவதற்கு .. அவர்களுக்கான விகிதாசாரத்தை தருவது தானே சரி .. அவர்களை எப்படி இனங்காண்பது..
இன்றைக்கும் உயர்பதவிகளில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துகிற அவலம்.. உச்சநீதிபீடம் முதல் .கவர்னர்...அரசு அதிகாரிகள் ..செயலர்கள் என அதிகார அமைப்பையே பார்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.. இடைநிலை கடைநிலை பணிகள் தான் ..பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களுக்கு கிடைக்கிறது அதையும் ஒழித்துகட்ட சாதி சான்றிதழ் மறுப்பு பயன்படுமே தவிர...அவர்களை ஒருபோதும் தூக்கிவிடாது..
..
சாதியை ஒழிக்க வேண்டாமா என கேட்பவருக்கு .. முதலில் 3% விழுக்காடு பார்பானுக்கு அவன் விகிதாசாரப்படி 1.5 % விழுக்காடு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க சொல்லுங்கள்..
இடஒதுக்கீட்டின் படி முழுவதுமாக நிரப்பபடாமல் இருக்கிறது..
அப்படியே எம் குழந்தைகள் உயர்கல்வியை தகுதி இடஒதுக்கீட்டின்படி பெற்று வந்தால் அவர்களை கொலை செய்து தற்கொலையென கதைகட்டி.. அந்த இடத்தை அபகரிக்கும் செயல் ..
இந்தியாவில் இடஒதுக்கீடில்லாமல் உயர்பதவி அதிகாரங்களில் பார்பனர்கள் எப்படி இத்தனை பதவிகளில் என எப்போதாவது கேட்டதுண்டா.. சாதி சான்றிதழை ஒழித்தால் எல்லாவற்றையும் பொதுவாக்கினால் மொத்தமும்,கொள்ளை போகும்.. இப்போதே நீட்டென்ற பெயரில் மருத்துவத்தில் எம் குழந்தைகளின் உரிமைகள் பறிபோகிறது
இதெல்லாம் திடீர் அரசியல்வாதிக்கு புரியாது..
இந்த மண்ணின் மக்களை ..அவர்தம் உரிமைகளை தடுக்க நினைக்கும் செயல் இது..
***********************************
சிலைகள் கடத்தபடுவது குறித்து ஏதேனும் கருத்து சொல்லியிருக்கிறாரா... கதவை உடைத்தோ சுவரை உடைத்தோ சிலைகள் திருடபடவில்லை .. கருவறைக்குள் நுழையும் அதிகாரம் பெற்ற திருடர்கள்.. அதேபோல் பித்தளை சிலையை வைத்துவிட்டு ஐம்பொன்சிலையை கடத்துவதாகவும்.. தமிழக கோவில்களில் 7000 கோவில்களில் டூப்ளிகேட் சிலைகள் தான் உள்ளன என்கிறார்
பொன். மாணிக்கவேல்.. இதற்காகதான் அறநிலையத்துறையை நாங்களே நிர்வகிப்போமென எச்.ராசா சொல்லி வருகிறாரா.. சிலைதிருட்டில் பாஜக தேசிய பொறுப்பில் உள்ளவருக்கு தொடர்பு இருப்பதாகவும் ..அதனால் தான் பொன்.மாணிக்கவேல் அவசர அவசரமாக ரயில்வேதுறைக்கு மாற்றபட்டதாகவும் செய்திகள் வருகின்றன ..இது குறித்து திமுக போராட்டத்தை நடத்த வேண்டும்.. சட்டமன்றத்தில் முதல்வர் சொன்ன பதிலுரை திருப்தியாகவே இல்லை வழக்கம் போல நீதிமன்றத்தில் இருக்கிறது.. பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைக்கவில்லையென்கிறார்.. ஆம் அரசுக்கு ..ஒத்தூதவில்லை அவர்..சிலை திருட்டிற்கு காரணமாக உள்ள பாப்பான்களை காப்பாற்ற அரசு முயல்கிறது
திருசெந்தூர் முருகனின் வேல் காணமல் போனதற்காக .. நீதிகேட்டு நெடும்பயணம் நடத்திய வரலாறெல்லாம் உண்டு.. இந்த சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் டெல்லி வரை செல்வாக்கு பெற்றியிருப்பதாக சொல்லபடுகிறது..
எதற்காக நாங்களே நிர்வகிக்கிறோமென சொல்கிறார்கள் என்பதன் பொருள் இப்போது விளங்கும்.. சிலை திருடர்களை அடையாளம்காண வேண்டும்..
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாய் ஆககூடாது..

ஸ்ரீரங்கம் கோவில் தீட்டாகிவிட்டதாம்

ஸ்ரீரங்கம் கோவில் தீட்டாகிவிட்டதாம் அதற்கு கோவிலுக்கு பரிகாரம் செய்யவேண்டும் அதாவது தீட்டுகழித்து சுத்தம் செய்யவேண்டும்..
சொல்வது யார்.. மந்திரியென்றும் பாராது மந்தியைப்போல காலடியில் அமர்ந்து .. சென்றவுடன் பழைய கும்பகோணமடமாகிய காஞ்சி மடத்தை சுத்த செய்து தீட்டு கழித்தார்களே அந்த பொன்னர் சொல்கிறார்..
ஆதிதிராவிட சகோதரன் கை பட்டால் தான் தீட்டு ஆனால் பார்த்தாலே தீட்டென்று .. பனைமரத்தில் ஏறி நிற்கிறவனின் நிழல் கூட படகூடாதென்று அந்த வழியே அந்தணன் (பாப்பான்) போனால் மட்டை தட்டி ஓசை எழுப்பவேண்டும் இவர் சொல்கிறார்..
ஸ்டாலினால் நாத்திகன் வந்து போனதால் ஸ்ரீரங்கம் கோவிலை சுத்தம் செய்யவேண்டும்..
..
ஆத்திகர்களின் அயோக்கியத்தனங்கள் மதமென்ற பெயரில் ..இந்து கிருஸ்துவ இஸ்லாமிய மத குருக்களின் காமலீலைகள் நாடு கண்டு சிரிக்கிறது.. துறவி வேசம் போடுகிறவன் மத போதகன் வேசம் கட்டி சோக்காலி வாழ்க்கை வாழ்கிறான்.. இதில் சங்கராச்சாரியார் ஜகத் குரு என்று சொல்லி ஜெயேந்திரர் ஆடிய ஆட்டத்தை அந்த சமூகத்து எழுத்தாளரே ..பகிரங்கமாக குற்றம்சாட்டியதும்..
பி.ஜே எனும் நவீன இஸ்லாமிய போதகன் காமகளியாட்ட ஒலிநாடா வும்..பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை தந்ததும்.. ஆன்மீகத்தின் உண்மைதன்மையை .. ஆன்மீகம் என்ற பெயரில் அடிக்கிற கூத்திற்கு license உரிமம் வழங்கபட்டதைப்போல நாடே காரி உமிழ்கிறது..
மதபோதை மக்களின் சிந்தனை திறனை மழுங்கடித்து செய்யும் கேடுகெட்ட செயல்களை நியாயபடுத்த வைக்கிறது.. பி.ஜேவின் அடிவருடிகள்.. தனிநபரின் தவறுக்காக அவரின் தவறிய நிலையில் முன் போதித்த நல்லவகைகளை மறக்க கூடாதென்று பேசுகிற நிலை இதுவொருவகை மூளைச்சலவை ...நம்பியவரின் நடத்தைகளை நியாயபடுத்தி சுக்கான் பிடிக்கும் அயோக்கியத்தனம்.. அது ஜெயேந்திரர் விடயத்திலும் நடந்தது..
ஒருசிலரின் தவறை எப்படி ஆன்மீகத்தோடு சேர்ப்பதென்ற கேள்வி எழாமல் இல்லை.. அவர்களை பின்தொடர்கிற கூட்டத்தையும் சேர்த்து வழிகெடுப்பதைதான் எதிர்க்கிறோம்..
..
ஸ்டாலின் பொட்டை அழித்தாரென்று புலம்பி தீர்க்கும் பொன்னர்.. இந்தியாவின் முதல் குடிமகனை காவலாளி கைப்பிடித்து கோவிலுக்கு நுழையவிடாமல் தடுத்தது குறித்து பேச மறுக்கிறார்.. தொடர்ந்து ஸ்டாலினைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் மோடியின் எட்டுவழிச்சாலை துரோகத்தை மக்கள் மறந்துவிடுவாரென நினைக்கிறார்.. இதே கோவிலுக்கு யாரென்றே தெரியாத ஒரு பாப்பான் பூணூலோடு வந்தால் காவலாளி தள்ளிவிடுவானா..? .. தேசத்தின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை.. இங்கே நீயாராக இருந்தாலும் பூணூல் இல்லையென்றால் அதுவும் தாழ்த்தபட்டவனென்றால் அடி உதை மிதிதான்.. எந்த கொம்பனாக இருந்தாலும் .. இதுதான் மதம் ஆன்மீகம்..
இவர் வேண்டாமென்கிற நாத்திகம் ..
மனிதனை சகமனிதனாக பார்க்க சொன்னது ஏற்றதாழ்வில்லை.. உன்னைப்போலவே அவனுக்கு சகலஉரிமைகளும் உண்டு.. அதேபோல பாலின வேறுபாட்டைச்சொல்லி கூடுதல் குறைவென்று பிரிப்பதை எதிர்த்தது..
பொன்னரும் எச்சையும் சமமானவர் என்றது.. எல்லோருக்கும் கல்வி ... அவனவன் விருப்பபடி உண்ண உடுத்த .. வாழ உரிமை ஒரே வார்த்தையில் சொன்னால் நல்லதை சொல்லும் நாத்தீகம்.. 
..
பொய் புரட்டு ஏமாற்று ஏற்றதாழ்வென ஆன்மீகத்தோடு வாழ்வதைவிட.. நாத்திகன் எனும் சொல் நல்லது பொன்னரே..

அதிமுக வாயில் உலக்கையை வைத்து குத்தும்போது வீரம் எங்கோ போனது

இன்றய ஹிந்து தமிழ் விஷமத்தனம் என்னவென்றால் சீமானிடம் பேட்டியில் இப்படி கேட்கப்படுகின்றன....கடந்த கால மத்திய மாநில அரசின் பெயரை வெளிப்படையாக சொல்லி கேட்டுவிட்டு அதைவிட இப்பொழுதைய அடக்குமுறைகள் மோசமானதா..? ..அதற்கு சீமான் இப்பொழுதைய மாநில மத்திய அரசையும் அதன் சர்வாதிகாரத்தை பற்றி மட்டுமே விமர்சிக்கிறார்...ஏன் ஹிந்து தமிழ் வெளிப்படையாக பிஜேபி அதிமுக என்று சொல்லி கேட்க வேண்டியது தானே..?
இந்த பேட்டியில் சீமான் சொல்லிய பதிலில் மிக பெரிய காமெடி என்னவென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது யுத்ததந்திரம் அதுவே சமயோசித வீரம் என்கிறார்... இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பிரச்சாரம் செய்தவர் அந்த அம்மையார் இருக்கும் வரை பெரிய போராட்டம் செய்யாமல் பம்மியது உலகம் அறிந்தது..அதே வீரனை அதே அதிமுக என்ற கட்சி இப்பொழுது வாயில் உலக்கையை வைத்து குத்தும்போது வீரம் எங்கோ போனது..????

அசுரர்களிடம் குறியீடு முறை - ஆரியர்களிடம் எழுத்து முறையே கிடையாது

எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு அடுத்தவர்களுக்கு ஒரு கருத்தை தெரியப்படுத்த பேச்சினால் மட்டுமே முடியும். எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு பேசாமல் எழுத்தினால் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
தஜிகிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாயை கடந்து முதன் முதலில் ஆரியர்கள் அசுரர்களிடம் வியாபாரத்தொடர்பை ஏற்படுத்திய பொழுது அசுரர்களிடம் குறியீடு முறையிலான எழுத்து முறைகள் இருந்தன. ஆனால் ஆரியர்களிடம் எழுத்து முறையே கிடையாது. அதாவது அவர்களிடம் கல்வியறிவே இல்லை. ஆதாவது கி.மு 1800 வரை கூட ஆரியர்களுக்கு குரல் மூலமாக செய்திகளை கடத்த முடியுமே தவிர எழுத்து மூலமாக எதையும் உணர்த்த தெரியாது.அதற்கு பலகாலம் பிறகு கூட அவர்கள் எழுத படிக்க கற்றுக்கொள்ள சிரமப்பட்டனர்.
ஆக அரக்கர்கள் ஆரம்பம் முதலே கல்வியறிவுடன் இருந்தவர்கள்தான். நம்ம பிள்ளைங்களுக்கு எல்லாம் படிப்பு வராது என்று நினைத்தால் அந்த எண்ணத்தை கைவிடுங்கள்.
( வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தில் இருந்து புரிந்து கொண்டது )


கமலின் வைணவ மூளை - நயவஞ்சகமான வார்த்தைகள் -ஆச்சரியம் இல்லை

கமலின் வைணவ மூளையில் இருந்து வெளிப்பட்ட இடஒதுக்கீடு எதிரான நயவஞ்சகமான வார்த்தைகளின் கோர்வையுடன் கூடிய பதிவை பார்த்தேன்...ஆச்சரியம் இல்லை...தன்னை இவ்வளவு சீக்கிரமாக அமபலப்படுத்தி கொண்டார் என்பதே எனக்கு ஆச்சரியம் தருகிறது.....
ஏழாம் அறிவு படத்தில் கமலின் மகள் இடஒதுக்கீடு எதிரான வசனம் பெரும் சர்ச்சையாக போனது..... பிற்பாடு அந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய பேட்டியில் சுருதிஹாசன் அதை வசனத்தில் சேர்த்ததாக எங்கோ படித்த ஞாபகம்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போட்டியில் சூர்யா முன்னிலையில் பாரதியார் கோயில் சம்பவம் மற்றும் பாடல்கள் பற்றி பாடம் எடுத்தார் தன் மகளுக்கும் சூர்யாவுக்கும்....ஆனால் சமத்துவம் மற்றும் பெண்ணியம் பேசிய அதே பாரதியை மறந்து விடுவார்...
இதில் இன்னொரு ஆச்சரியம் எதற்கு இதில் கேரளாவை மேற்கோள் காட்டினார் என்று தெரியவில்லை...கேரளா கல்வியில் முன்னிலையில் இருந்தாலும் சாதிய கட்டமைப்பில் விடுபடும் எண்ணத்தில் பலவருடங்கள் பின்தங்கி இருக்கிறது...சில மாதங்கள் முன் நீயா நானா விவாதத்தில் ஒரு கேரள நடிகை மேனன் என்று கேரள சாதிய பழக்கத்தை கரு பழனியப்பன் விவாதத்தில் கேள்விகளால் அவரை அமபலப்படுத்தினர்...இதில் தமிழகம் பெரியாரின் போராட்டத்தால் எப்போவோ முற்போக்கு மாநிலமாகி விட்டது....இன்னும் 50 களில் மற்றும் 60 வயதுகளில் இருக்கும் சாதி நாய்களை செருப்பால் அடித்தால் முழுமையாக மாறிவிடும்...
எழுத்தாளர் ஞாநி 1982 கமலுடன் பேட்டியில் , ஞாநி தன்னுடைய கடைசி வரியில் இவருக்கு இரண்டு முகங்கள் இருக்கிறது என்று எச்சரித்தார்...
இவரை நம்புவார்கள் அழிவது நிச்சயம்


மற்றும் சிலர்

மற்றும் சிலர்
-லதாமகன்
கள்ளிச்செடி வளர்ப்பவன், பக்கம் 33


சட்டை போடாமல்
தோள்துண்டை கக்கத்தில் வைத்து வரும்
மாயாண்டிக்கு

தொடாமல் சோறு போடு என்பாள் அம்மா

அவர் பையனுடன் விளையாட வேண்டாம் என்பார் அப்பா

மரியாதை குடுக்க தேவையில்லை
என்பார்கள் நண்பர்கள்

பெரியவங்க பேச்ச கேளுங்க சாமி
என்பார் மாயாண்டி 

இந்துக்கள் vs பட்டியல் சமூகத்தினர்

1) யாரெல்லாம் இந்துக்கள் என்று இந்து மத வேதம் கூறுகிறது?



    பிராமனர், ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்ற நான்கு பிரிவுகளை ஒப்புக்கொண்டவர்கள் இந்துக்கள் என இந்து மத வேதம் கூறுகிறது.




2) இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவமான வர்ணாஷ்ரம தர்மா என்றால் என்ன?

      பிராமனர் - புரோகிதம் தொழிலை செய்பவர்.
   
      ஷத்ரியர் - போர் புரியும் தொழிலை செய்பவர்.

      வைசியர் - வானிபம் செய்பவர்.


      சூத்திரர் -  ஏவல் தொழில் செய்பவர்.


அதாவது மேல் உள்ள மூன்று வர்ணத்தார்கும் அடிமை தொழில் செய்பவர்.  மேல் உள்ள வர்ணத்தாரின் தேவையை பூர்த்தி செய்பவர்.



      இந்த வர்ணங்களில் இருக்கும் சந்ததிகள் அந்த வர்ணத்திற்குரிய தொழில்களை செய்ய வேண்டும்...

 வேறு வழியல்லையேல் தனக்கு கீழ் உள்ள வர்ணத்தாரின் வேலைகளை செய்யலாம் ஆனால் தனக்கு மேல் உள்ள வர்ணத்தாரின் வேலைகளை செய்யக்கூடாது.

 திருமணத்திற்கும் இதே முறைதான்... தன் முதல் மனைவி தன் வர்ணத்திலும் அடுத்தடுத்த மனைவிகள் தனக்கு கீழ் உள்ள வர்ணத்தை சேர்ந்த பெண்களை மணக்கலாம் ஆனால் தன் மேல் நிலையிலுள்ள வர்ணத்தை சேர்ந்த பெண்களை மணக்க கூடாது...




3) பட்டியல் சமூக மக்கள் எந்தப் பிரிவின் கீழ் வருகின்றனர்?


            இந்த கேடுகெட்ட வர்ணத்தை ஏற்காமல் புத்தரின் நெறிக்கொள்கையை பற்றி பிடித்தவர்கள்தான் இன்றைய பட்டியல் சமூகத்தினர் ... இவர்கள் இந்த இந்து மத வர்ணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள்.



4) பட்டியலினத்தைச் சார்ந்த சாதிகளை(SC)  இந்தியா முழுவதிலும் எதனடிப்படையில் பட்டியலிட்டனர்?

               பட்டியல் இனம்  (SC) பத்து நெறிமுறைகளை கொண்டு பிரிக்கப்பட்டனர்...

அவையாவன ::


1) பிராமணர்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள் என்பதை மறுத்தவர்கள்.

2) பிராமண குரு மற்றும் அங்கிகரிக்கப்பட்ட வேறு இந்து குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெறாதவர்கள்.

3) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள்.

4) பெரிய இந்துக்கடவுளர்களை வழிபடாதவர்கள்.

5) பிராமனர்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள்.

6) பிராமண புரோகிதலர்களை வைத்து எந்த நிகழ்ச்சிகளையும் செய்யாதவர்கள்.

7) சாதாரண இந்துக் கோவில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதவர்கள்.

8) தீட்டு ஏற்படுத்துவதாக கூறப் படுபவர்கள்.

9) தங்களின் இறந்தவர்களை புதைப்பவர்கள்.

10) மாட்டிறைச்சி உண்பவர்கள்.

இந்த பத்து கோட்பாட்டின் அடிப்படையில் 1911 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இவ்வாறு பட்டியலிடப்பட்டனர்.





5) இந்துக்களாக கருதப்பட்டிருந்தால் இந்தியா முழுமைக்கும்

 ( இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் காகாலத்தில் இந்தியா ஒரு நாடாக இல்லை. எண்ணிலடங்கா நாடுகளாக இருந்தது.)

 ஏன் பட்டியல் சமூக மக்கள் ஊருக்குள் இல்லாமல் தனியாக சேரியில் தங்கினார்கள்?

        மற்ற சாதி இந்துக்களால் ஒதுக்கப்பட்டதாலும்...
இவர்கள் அவர்களிடம் இருந்து ஒதுங்கியதாலும் சேரிகளில் தனிமை படுத்தப்பட்டனர்.

Friday, June 29, 2018

பிராமணர்கள் எங்காவது கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா.!?

பிராமணர்கள் எங்காவது கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா.!?
-எஸ்வி.சேகர்-
இவரின் கூற்றில் ஒழிந்து கிடக்கும் உண்மையை நாம் விவாதிக்காமல் எளிதாக தவிர்த்து விட்டு கடந்து செல்வது யாரை ஏமாற்றும் செயல்..!!??
கூட்டுக் களவாணிகளில் பார்ப்பனர்களை மட்டும் குற்றம் சுமத்துவது ஒருதலை பட்சமாக இல்லையா.!?
நத்தம் நாயக்கன்கொட்டாய் 350 தலித் வீடுகளை கொளுத்தியது யார்.!? பார்ப்பனர்களா.!?
இளவரசன் கோகுல்ராஜ் நாகமுத்து சங்கர் முத்தழகு வை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1968 கீழ்வெண்மணியில் 44 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1978 விழுப்புரத்தில் 12 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1979 உஞ்சனையில் 5 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
1992 வாச்சாத்தியில் 186 பழங்குடியின குடும்பங்களையும் துண்புறுத்தியும் 18 சிறுமிகள் பெண்களை வன்புணர்ந்து வன்கொடுமை செய்தது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
1995 கொடியங்குளம் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
அதை தொடர்ந்து நெல்லை விருதுநகரில் 75 பேரை அரிவாள் வீசி கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
இந்த கலவரத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தது யாரால்.!? பார்ப்பனர்களாலா.!?
1997 மேலவளவு 7 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2000 ம.புளிபங்குடி 3 தலித்துகளை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2002 திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலத்தை திணித்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
2003 கண்ணகி முருகேசனை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
2017 வடபழஞ்சி முத்தழகை கொன்றது யார்.!? பார்ப்பனர்களா.!?
கீரிப்பட்டி பாப்பாபட்டி நாட்டார்மங்களம் கொட்டக்காச்சியெந்தல் பஞ்சாயத்துகளில் தேர்தலை நடக்க முடியாமல் செய்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
தேசிய கொடியை தொட்டதற்காக சொட்டத்தட்டி பஞ்சாயத்து தலைவரை செருப்பால் அடித்தது யார்.!? பார்ப்பனர்களா.!?
எழுத்தாளர் பெருமாள் முருகனை முடக்கியது யார்.!? பார்ப்பனர்களா.!?
எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது கொடூர தாக்குதல் நடத்தியது​ யார்.!? பார்ப்பனர்களா.!?
நந்தினியை வன்புணர்ந்து கொன்றது யார்.!?
பார்ப்பனர்களா.!?
ஆக வன்முறையிலும் கலவரத்திலும் ஈடுபடும் கூட்டுக் களவாணியான பெருந்திரள் வாக்குவங்கி இடைநிலை சூத்திர சாதி இந்துக்களையும்​ இக்கணம் விமர்சிப்பதை விட்டுட்டு
மற்றொரு கூட்டுக் களவாணியான எஸ்வி.சேகர் போன்ற பார்ப்பனர்கள் மீது மட்டும் ஒட்டு மொத்த பழியையும் சுமத்த முயல்வது தூற்றுவது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் பித்தலாட்டம் ஏமாற்றுவேலை

பௌத்த விஹாரையே அபேஷ் பண்ணுனதுக்கு என்ன செய்யிறதாம்?

திருப்பதி ஜீயருக்கு ஆண்டுக்கு 1.5 கோடி சம்பளம் என்று சொன்னதற்கே ஆச்சரியப்படுறீங்க.
பௌத்த விஹாரையே அபேஷ் பண்ணுனதுக்கு என்ன செய்யிறதாம்?
கி.பி.7 ம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் பரவிய காலத்தில் தான் இந்த நிலப்பரப்பில் கோவில்கள் கட்டப்பட்டன.
ஆழ்வார்களும்-நாயன்மார்களும் கடுமையான மதமாற்றப் பணிகளை செய்து முடித்தனர்.
அவர்களுக்கு இணையான மதமாற்றத்தை உலகில் இதுவரை எவரும் செய்ததில்லை.
கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதற்கு ஒரே உதாரணம் ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவ மக்கள் தொகை 4% சதத்தை தாண்டாதது தான்.
கிறிஸ்தவம் இந்திய நிலப்பரப்பில் வளராமல் போனதற்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு.
அது யாதெனில் கிறிஸ்துவின் பிறப்பு குறித்ததும் கிருஷ்ணரின் பிறப்பு குறித்ததும் ஒன்றுதான்.
மதமாற்றம் செய்வது வேறு
மதம் மாறுவது என்பது வேறு.
இங்கு அதிகாரம் மூலம் மட்டுமே மதம் மாற்றப்பட்டார்கள்.
மதம் மாறுவது என்பது தனிநபர் மனம் சார்ந்த தேடல் மட்டுமே.
ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பவனை
மற்றொரு நடிகனின் ரசிகனாக மாற்ற முடியாது எளிதில்.
பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு
வைதீகம் வந்து சேர்ந்தது.
வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.
வைணவத்தின் இருகிய தன்மையை உடைத்ததே ராமானுஜரின் தென்கலை வைணவம்.
வடகலை இன்றும் வக்கிரங்களோடு வாழ்கிறது.
ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை வடகலை வைணவர்களே.
இந்த நிலப்பரப்பெங்கும் இருந்த பௌத்த ஆலயங்கள் கி.பி.7 க்குப் பிறகு அப்படியே சைவ-வைணவ பங்குளாக பிரிக்கப்பட்டன.
திருப்பதி பெருமாள் கோவிலும் பௌத்த ஆலயமே.
இன்றுள்ள பெருமாள் சிலையின் அலங்காரத்தை அகற்றினால் உள்ளே புத்தரே இருப்பார்.
எந்த பெருமாள் கோவிலிலும் மொட்டையடிக்கும் வழக்கம் கிடையாது.
பௌத்த வழக்கமே மொட்டையடித்தல்.
நேற்று ஒரு நண்பர் இதைப்பற்றி கடந்த பதிவில் கேட்டார்.
அவருக்காக இந்தப் பதிவு.
உங்களுக்கு பயன்பட்டாலும் கூட.
புத்தரை தூக்கி எறிந்த சந்தோச முழக்கமே கோவிந்தா.கோவிந்தா.
கோ என்றால் அரசன் என்ற பொருள் உண்டு.
அந்த அரசன் புத்தனே.
இந்திய வரலாறு என்பது
பௌத்தத்திற்கும்-பார்பபனியத்திற்கும் நடந்த யுத்தமே என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்து நினைவில் கொள்ளத்தக்கது.
இதுவே அங்குள்ள சிலை.

ஜீன் - 30 -1997 - ஈன சாதி பயலுக்கு தலைவர் பதிவி கேட்குதா


கடந்த 1997 ம் ஆண்டு சூன் 30ந் தேதி மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தபட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த ஊரில் வசித்த ஆதிக்க சாதி வெறியர்கள் அம்பலகார்ர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாரத்திற்க்கு வருவதை இரண்டு முறை யாரும் போட்டியிடாதவாறு தடுத்து நிறுத்தினார்.இதை மீறி துணிச்சலாக முருகேசன் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேலவளவு பஞ்சாயத்து தவைவரானார்.இதை பொருத்து கொள்ள முடியாத சாதிவெறியர்கள் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த முருகேசன் உள்ளிட்டவர்களை வெட்டி சாய்த்தனர்.


ஜீன் - 30 -1997
அன்றொரு நாள் இப்படித்தான் அமைதியாக விடிந்தது
மேலவளவு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை 50 க்கும் மேற்பட்ட ஜாதி வெறி மிருகங்கள் அரிவாள், கத்திகளோடு மறித்தன. இதை பார்த்ததும் பேருந்தின் நடத்துனரும் ஓட்டுநரும் தலை தெறிக்க ஓடுகின்றனர்.
மக்கள் அலறி அடித்து கொண்டிருக்கையில் அந்த சம்பவம் நடைபெறுகிறது. 7 பேர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்படுகிறார்கள்..
என்ன நடந்தது ??? - வாக்குமூலம்
"ஈன சாதி பயலுக்கு தலைவர் பதிவி கேட்குதா " என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள்.



அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).
2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).3.
“முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).4.
“சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).5.
"அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).6.
“அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)
இப்படி ஒரு கொடூரம் எதற்காக நடந்தது ??
1997 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது அதில் மேலவளவு ஊராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.
சாதி இந்துக்கள் ஊர் மந்தையில் கூட்டம் போட்டு தலித்துகள் யாரும் போட்டியிடக்கூடாது மீறி போட்டியிட்டால் கொலை செய்யவும் தயங்கமாட்டோம் என சபதமிட்டார்கள்....

நமது பகுதியில் நாம் பெரும்பான்மையாக இருக்குமிடதில் நாம் இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் சரியா வராது என எண்ணி மேலவளவு திமுக கிளை செயலாளர் முருகேசன் அவர்கள் திமுக சார்பில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு பிறகு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்....
மீண்டும் ஊர் மந்தையில் சாதி இந்துக்கள் ( கள்ளர் சமூகம்) கூடினார்கள் மீண்டும் எச்சரிக்கை செய்தார்கள் வேண்டாம் முருகேசா மனுவை வாபஸ் வாங்கிவிடு இல்லையென்றால் சொன்னபடி செய்வோம் என எச்சரிக்கை செய்தார்கள்...
எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் போட்டியிடுகிறேன் உங்களுக்கு தெரிந்ததை பார்த்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்...
பல்வேறு குளறுபடிகளுக்கு நடுவில் தேர்தல் நடந்து (அப்போது வாக்குச்சீட்டு முறை)வாக்குகள் எண்ணப்பட்டன மேலவளவு ஊராட்சி மன்ற தலைவராக பெரியப்பா முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்....
சாதி இந்துக்களுக்கு ஒரே தலைகுனிவாய் போனது...
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு...
இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஊராட்சி பணிகள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் மதுரை மாவட்ட கலெக்டர் அவர்களை சந்திக்க முருகேசன் உள்ளிட்ட ஒரு பத்து பதினைந்து பேர் கிளம்பி சென்றார்கள் இந்த தகவலை ஓர் உளவாளி மூலம் பெரும் பணம் கொடுத்து சாதி இந்துக்கள் தெரிந்து கொண்டனர்...
அதே கயவனை உளவாளியாக அமர்த்தி எப்போது எங்கே வருகிறீர்கள் என்கிற தகவல்களை சொல்லசொல்லி அனுப்புகிறார்கள் அப்போது அவர் சாதி இந்துக்களிடம் கேட்கிறான் என்னை ஒன்றும் செய்துவிட மாட்டீர்களே என்று அதற்கு சாதி இந்துக்கள் நீ நம்மபயயா உன்னை ஒன்றும் செய்யமாட்டோம் தகவலை சரியாக சொல்லிவிடு என்று அனுப்பி வைத்தார்கள்...
காலையில் மதுரை சென்று கலெக்டர் அவர்களை சந்தித்து விட்டு வந்து உணவருந்தும் போது பொது தொலைபேசியில் சாதி இந்துக்களை அழைத்து சாப்பிட்டு விட்டு சற்று நேரத்தில் கிளம்பி விடுவோம் என தகவல் சொல்லி விட்டார்.
மதுரையில் இருந்து கிளம்பி மேலூர் வந்து இறங்கியவுடன் மீண்டும் அவர்களுக்கு தெரியாமல் பொது தொலைபேசியில் மூலம் அழைத்து இந்த பஸ்ஸில் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என தகவல் சொல்லி விட்டார்....
அந்த பஸ்ஸின் ஓட்டுனர் நடத்துனர் எல்லாம் சாதி இந்துக்கள் அவர்களுக்கு ஏற்கனவே தகவல் சொல்லியாச்சு பஸ்ஸை எங்கே நிறுத்த வேண்டும் என்று பஸ் கிளம்பி மேலவளவு நோக்கி சென்று கொண்டிருக்கிறது அப்போது ஊருக்கு முன் உள்ள வளைவில் பஸ் நிறுத்தப்படுகிறது.
பஸ்ஸை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கி ஓட்டெமடுத்தார்கள் சாதி இந்துக்கள் கும்பலாக கையில் பயங்கரமான ஆயுதங்களோடு பஸ்ஸின் இருவாயில்களிலும் நின்றார்கள் பொதுமக்களை விரட்டியது அக்கும்பல் முருகேசன் உள்ளிட்ட உறவுகள் தப்பிக்க முற்படும் போது முதல் வெட்டு உளவு சொன்ன கயவனுக்கு விழுந்தது பணத்துக்காக இனத்தானையே காட்டி கொடுத்த நீ நாளை எங்களை காட்டி கொடுக்க மாட்டைனு என்னடா நிச்சயம் என...
அவரோடு சேர்த்து 7 பேர் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்....(அவர்தான் உளவாளி என யாருக்கும் தெரியாமல் போயிருக்கும் அவரின் மனைவி அழுகும் போது ஒரு ப்புளோவில் உன்னை வெட்டமாட்டாங்கனு சொன்னியே ஆனா உன்னைதான் முதல்ல வெட்டியிருக்காங்க என அழுததால் அனைவருக்கும் தெரிந்தது)
படுகொலையை கண்டித்து மேலூர் மதுரை என தென்மாவட்டங்களில் கலவரம் மூண்டது பட்டியலின மக்களின் உடமைகள் சிதைக்கப்பட்டன மேலூரில் பெரும் கலவரம் மூண்டது...
பின்பு எல்லாம் அடங்கிய பிறகு 7பேரின் உடல்கள் அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது ...

ஒரு ஊராட்சி மன்ற பதவியில் கூட பட்டியலினத்தவர் அமரக்கூடாது - என்று கள்ளர் ஜாதி வெறி பிடித்த மிருகங்களால் நடத்தப்பட்ட பச்சை படுகொலை
இந்த ஜாதி வெறியை, ஆதிக்கத்தை வீழ்த்தத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் ,தந்தை பெரியாரும் தன் வாழ் நாள் முழுதும் போராடினார்கள்
ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை
மேலவளவு போராளிகளுக்கு வீர வணக்கம்



டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937)

டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937)
1875- ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவரான சி.நடேசனார் மருத்துவம் பயின்றவர். பிராமணரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், அவர்களுக்காக ' திராவிடர் இல்லம்' விடுதியை 1914- ல் தொடங்கியவர் இவர். அவர்களின் உணவு, உடை, தங்குமிடம் ஆகிய தேவைகளை மட்டுமன்றி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்குமான செலவுகளையும் ஏற்றவர். இது தவிர, ' சென்னை ஐக்கிய சங்கம்' என்ற அமைப்பையும் நடேசனார் உருவாக்கினார். கல்வி, வேலைவாய்ப்புகளில் பிராமணரல்லாதோர் சமூகம் ஏற்றம் காண, அரசியல் அதிகாரம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்த நடேசன் ஏனைய முன்னோடிகளுடன் கைகோத்தன் விளைவே நீதிக் கட்சி. 1923-ல் மதறாஸ் மாகாணச் சட்ட மன்றத்தில் அவர் காலடி எடுத்துவைத்தார். ' சென்னை பப்ளிக் சர்விஸ் கமிசன்' அமைக்கப்பட்டதில் முக்கியமான பங்கு இவருக்கு உண்டு. ஆதிதிராவிடர்களின் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேச உரிமை ஆகியவற்றைக் குறித்து 1918 லேயே பேசிய நடேசன், தன்னுடைய பதவிக் காலத்தில் பிராமணரல்லாதோர் மேம்பாட்டுக்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தார்.




யார் இராவணன்.....???

யார் இராவணன்.....???

அரக்கனா....???

நர மாமிசம் உண்ணும் கோரியா...???

அயோக்கியனா.....???

இல்லை. இவற்றில் எதுவும் இல்லை.

பிறகு இராவணன் யார்....???

கலை பத்தில் தலைசிறந்த கலைஞன்.

யாழிசை வித்தகன்.

பெண்களை கண்ணெனப் போற்றும் பேராண்மை வாய்ந்தவன்.

அப்படியென்றால் புராணத்தில் சொல்லப்பட்டவை....???

கேள்வி எழும் எனில் அதற்கான விடை வெறும் புரட்டு என்பதே.

புராணங்கள் இதிகாசங்கள் யாவும் பண்டைத் தமிழர்களை அரக்கர்களாகவும் கோர வடிவம் கொண்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன.

இந்த புராணங்கள் எல்லாம் வடமொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை.

நமது வரலாற்றை திரித்து,   ஆரியர்களை மேன்மை தங்கியவர்களாகவும், தமிழர்களை காட்டுமிராண்டிகளாகவும் காட்டுவதற்கே

இந்த புனைவுக்கதைகள். பெரும்பாலான புராணங்கள் தமிழர்களை
அசுரர் என்றே அடையாளப்படுத்துகிறது.

"சுரர் என்றால் மது அருந்துபவன்.  அசுரன் என்றால் மது அருந்தாதவன்"

இதை தவறாக எடுத்துக்கொண்ட நமது சமூகம் அசுரன் என்றால் அரக்கன் என்ற தவறான புரிதலுக்குள் விழுந்து விட்டது.

ஒருவேளை உண்மையில் இராவணன் கொடியவனாக இருந்திருந்தால் சீதையை கவர்ந்த அந்நொடியே அவள் கற்பிழந்திருப்பாள், இராமன் வந்திருக்க மாட்டார், இராமயணம் பிறந்திருக்காது.

சீதை சிதையில் இறங்கியது கூட இராவணன் கற்பை நிரூபிக்கத்தான்.

இராமாயணமே பதிவு செய்கிறது இராவணன் ஆட்சியில் இலங்கை செல்வ செழிப்போடு இருந்ததென்று.

கட்டுக்கோப்பான ஆட்சி வழங்கியவர் இராவணன்.

வீரம் செறிந்தவன், மிகச்சிறந்த சிவபக்தன், எழுத்தாளன், மருத்துவன், மாண்புமிக்க போராளி, இன்னும் இன்னும்....

ஆனால் இன்று, தன் இனத்தான் இறந்த நாளையே கொலுவைத்து கொண்டாடுகிற அடிமைத்தனத்தில் ஊறியவர்களாய் மாறி நிற்கிறோம்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் எரியப்போவது வெறும் இராவணன் பொம்மையல்ல,

நமது ஆண்மையும், வீரமும், இனமானமும் தான்.
ஆரியரின் இராவண எதிர்ப்பு என்பது மறைமுக  தமிழர்  எதிர்ப்பு.

ஆரியத்தை நேரடியாக எதிர்த்த தமிழ் மன்னன் என்பதற்காகவே, இன்றளவும் எரியூட்டப்படுகிறார் நமது பாட்டன் இராவணன்.

ஆரியத்தின் சூழ்ச்சியால் ஆரியன் ராமன் கடவுள் ஆனான். எங்கள் பாட்டன் இராவணன் அரக்கனான்.

வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் வாழாது. படித்தறிவோம் வரலாற்றை.

போற்றுவோம் நமது மூதாதை இராவணன் பெரும்புகழை.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைதான பெரியார் நீதிமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தின் சில பகுதிகள்

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைதான பெரியார் நீதிமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தின் சில பகுதிகள்:

“இந்தக் கோர்ட்டு காங்கிரசு அமைச்சர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவைதவிர இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரசு அமைச்சர்கள் அதிதீவிர உணர்ச்சியுடன் உள்ளார்கள். அதுவிஷயத்தில் நியாயம் அநிநாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும், கையில்
கிடைத்த ஆயுதத்தைப் பயன்படுத்தி ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புகிளர்ச்சியைத் திடீரென்று வகுத்து புகுந்த திருடர்களுடன் ஒப்பிட்டும் மாண்புமிகு அமைச்சர்கடற்கரைக் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அமைச்சர்கள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது என் கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரிக் கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். இந்த இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி ஒரு செயல் விளக்கம் (Demonstration) ஆக மேற்கொள்ளப்பெற்று வருகிறதேயொழிய அதில் எவ்வித நிர்ப்பந்தப்படுத்தும் கருத்தும் இல்லையென்று தெரிவித்துக் கொள்ளகிறேன். இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி நிறுவனத்தின் கொள்கையில் சட்டம் மீறக்கூடாதென்பது முக்கிய நோக்கமாகும்.

நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழரியக்கம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, ஜஸ்டிஸ் இயக்கம் ஆகியவையும் சட்டத்திற்கு உட்பட்டே கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடைவைகளே. இதுவரை அக்கொள்கை மாற்றப்படவே இல்லை. என்னுடைய பேச்சு முழுவதையும் படித்துப்பார்த்தால் இது தெளிவாகும். ஆகவே, நீதிமன்றத்தார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது அமைச்சர்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை வழங்கமுடியுமோ அதையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க முடியுமோ அதையும் கொடுத்து, வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்.”


....தொடரும்

-'பெரியார் சிந்தனைகள்' குறித்து பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆற்றிய உரையிலிருந்து..

கோயில்கள் பெருத்த ஊர் மட்டுமல்ல கும்பகோணம்...பார்ப்பனர்களுக்காக தேவதாசிகள் நிறைந்த ஊரும் அதுவே

கோயில்கள் பெருத்த ஊர் மட்டுமல்ல கும்பகோணம்...பார்ப்பனர்களுக்காக  தேவதாசிகள் நிறைந்த ஊரும் அதுவே, என்பது குறித்த ஒரு வரலாற்று பதிவு.

கும்பகோணத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவானது குறித்து ஆய்வுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி கில்பர்ட் ஸ்லேட்டர், கும்ப்கோணம் நகராட்சி அதிகாரியை சந்தித்து விவரம் கேட்கிறார்.

அதிகாரிகள் இங்கே 12 கோயில்கள் இருக்கின்றன, தேவதாசிகள் பெருமளவில் இங்கே இருக்கிறார்கள், அதனால் பிறப்பு விகிதம் குறைவு என்கின்றனர். உடனே அவர் அரசு மருத்துவமணைக்கும் சென்று ஆய்வு செய்கிறார்.

அங்கே ஏராளமான பெண்கள் "கனோரியா" மற்றும் "சி்பிலிஸ்" போன்ற நோய் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார், அவர்களில் அயந்து  பேரில் 4 பெண்கள் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் கோயில்களில் தேவதாசிகளாக பணிபுரிபவர்கள் என்பதனை மருத்துவ அதிகாரிகள் மூலம் அறிகிறார்.

ஆதாரம்:- இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்புகள் (Dravidian Elements in Indian Culture-Book Page No. 111) எனும் நூலின் பக்கம் 111.

சமஸ்கிருதத்தின் கேவலம் புரிகிறதா?

சில நாட்களுக்கு முன்னர்
என்னுடைய  இளமைக்கால தோழி ஒருவரை அவர் கணவரோடு
சந்தையில் சந்திக்க நேர்ந்தது..

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன்..

இருதரப்பு நல விசாரிப்புகளுக்கு பின், தத்தம் குழந்தைகள் பற்றி பேச்சு திரும்பியது..

அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

மூத்தவள் +2 வும்
இளையவள் 8 ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்

என்ன பெயர் வைத்திருக்கிறிர்கள்
எனக் கேட்டேன்..

பெரியவ பேர் "மகிஷா.."
சின்னவ "கேஷு.. "

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது..

பேர்ல என்ன அதிர்ச்சின்னு கேக்குறிங்களா..?

ஆமா..
மூத்தவ பொறந்த உடனே இவர்தான்
ஐயர் கிட்ட ஜாதகம் பார்த்து பேர் எழுதி வாங்கியாந்தார்ன்னு தன் கணவரை கை காட்டினார்..

சின்னவளுக்கும் அதே ஐயர்தான்
ஜாதகம் பாத்து பேர் எழுதி கொடுத்தார்ன்னும் சொன்னாங்க..

மூத்த பொண்ணு முழுப்பேரு மகிஷாசுரமர்த்தினி!
அடுத்த பொண்ணு முழுப்பேரு
கேஷ்வர்த்தினி!
அவரே சுருக்கமா மூத்தவள "மகிஷா"ன்னும்
சின்னவளை
"கேஷு" ன்னும் கூப்பிடலாம்ன்னாராம்..
..
இப்ப நான் ஏன் அதிர்ச்சியானென்ற
மேட்டருக்கு வருவோம்..
அந்த மகிஷாவுக்கும் கேஷுவுக்கும்
அர்த்தம் என்ன தெரியுமா..?
..
மகிஷான்னா "எருமை"
கேஷுன்னா  "மயிரு"
சமஸ்கிருதத்துல..
..
பெத்தவங்களுக்கு தெரியாது,
பேர் வச்ச பாப்பானுக்கு தெரியுமில்லையா..?

தன்னை நம்பி வந்தவர்களுக்கு
பணத்தை வாங்கிட்டு அவன் காட்டிய
நன்றிய பார்த்தீங்களா..?
இதான் பார்ப்பனியம்..
..
இன்னும் குழந்தை பிறந்தால்
இவனுங்கிட்ட ஜாதகம் எழுதி
பெயர் வைக்கக் கோரும் எத்தனையோ பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
அவர்களின் குழந்தைகளுக்கு
இவனுங்க வைக்கும் பெயரின்
லட்சணம் இதுதான்..
..
இன்றைக்கு பார்ப்பன அயோக்யத்தனத்தினால் கட்டுண்டு கிடக்கும் ஊடகங்கள்,
தமது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர்கள் வழியாகவும் சமஸ்கிருத பெயர்களை அறிமுகம் செய்ய,
இன்றைய பெற்றோர் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதை நாகரீகமாக, பெருமையாக, ஸ்டைலாக நினைக்கின்றனர்..
அப்படி அவர்கள் வைக்கும் பெயர்களின்
உண்மைப் பொருள் தெரிந்தால், கேவலப்படுவார்கள்..

எடுத்துக்காட்டாக,
பிருத்வி என்ற சமஸ்கிருதப் பெயருக்கு
மண்ணாங்கட்டி என்று பொருள்.
மண்ணாங்கட்டி என்று தமிழில் வைத்தால் கேவலமாக நினைப்பவன்,
அதையே சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு பெருமையாகத் திரிகிறான்!

பெண்ணுக்கு யாஷிகா என்று  சமஸ்கிருதப் பெயர் வைத்து பெருமை கொள்கிறார்கள்.
அதற்கு என்ன பொருள்?
யாஷிகா என்றால் யாசகம் எடுப்பவள்,
அதாவது பிச்சைக்காரி என்று அர்த்தம்.
தமிழில் பிச்சைக்காரி என்று
பெயர் வைத்துக்கொள்வாளா?
ஆனால், அதையே சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு பெருமையாகத் திரிகிறார்கள்.

அதேபோல் கேசவன் என்று
சமஸ்கிருதப் பெயர் வைத்துக்கொள்கிறான்.
அதன் பொருள் மயிரான்.
கேசம் - மயிர்

கோபிகா என்றால் பால்காரி..

தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்டவன்.

அபர்ணா என்றால் நிர்வாணமானவள்,
ஆடை இல்லாதவள்.

வாசுகி என்றால்
"என்னை அனுபவி "என்று பொருள்.
(திருவள்ளுவர் மேல எவ்ளோ கடுப்பு இருந்திருந்தா அவர் பொண்டாட்டிக்கு
இப்டி ஒரு பெயரை வச்சிருப்பானுங்க)

கோபால் என்றால் பசும்பால் என பொருள்.
(கோ- பசு தமிழ்ல ஆட்டையை போட்ட சொல்)

சுந்தரலிங்கம்,
மகாலிங்கம்,
ஜம்புலிங்கம், இது போன்ற மிகக்கேவலமான கெட்ட வார்த்தைகளை குறிக்கும் (அர்த்தம் கேக்காதீங்க) பெயர்களைக்கூட பெருமையுடன் வைத்துக்கொண்டு இருக்கிறார்களே!
நாம் என்ன செய்யமுடியும்?

கருப்பன், இருளன் என்று பெயர் வைத்தால் கேவலமாக என்னும் நாம்
அதையே சமஸ்கிருதத்தில் கிருஷ்ணா..
கிருஷ் என வைத்துக்கொள்வோம். 

கிருஷ்ணவேணி என்று சமஸ்கிருதப் பெயரை வைப்பதற்கு என்ன பொருள் தெரியுமா? கருவாச்சி

 சமஸ்கிருதத்தின் கேவலம் புரிகிறதா?
..
தமிழ்மேல் எத்தகைய காழ்ப்புணர்வு இருந்தால், இந்த பார்ப்பனியம் இத்தகைய கயமையை இந்த விவரமறியா மக்கள் மேல் கட்டவிழ்த்து விடும்..
..
ஆமா.. உங்க குழந்தைகளுக்கு
என்ன பெயர் வச்சிருக்கிங்க..?
..
பாப்பாங்கிட்ட கேட்டிருந்தா பண்ணாடப்பயலுக நிச்சயம் ஏதாவது கெட்ட வார்த்தையத்தான் பேரா வச்சிவிட்டிருப்பானுங்க..
நீங்க வேணும்ன்னா செக் பண்ணி பாருங்க..

இனியாவது..
போலி கவுரவத்தால் அறிவிழக்காமல் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள்.

பிள்ளையார் சூத்திரக் கடவுள் என்ற நிலையிலிருந்து மாறி, இந்துப் பெருந்தெய்வக் கடவுள் ஆகின்றார்

சிவன், விஷ்ணுவை வணங்குபவர்கள் 'சுடலை மாடன்'  '18-ஆம் படிக்கருப்பு' போன்ற தெய்வங்களை வணங்க மாட்டார்கள்.

அம்பாளை வணங்குவோர், மாரியம்மனை வணங்குவதில் தயக்கம் காட்டுவர்.

சாமியாடுதல், பால் குடம் எடுத்தல், அக்கினிச் சட்டி ஏந்துதல், தீ மிதித்தல் போன்றவை எல்லாம் சிவ, விஷ்ணு கோயில்களில் பார்க்க முடியாத சடங்குகள்.

ஆனால் எல்லாம் இந்துக் கடவுள்களே. எல்லோரும் இந்துக்களே!

இந்தக் கடவுள்களின் வரிசையில் சற்று வேறுபட்டவர் பிள்ளையார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிமுகமானவர்.

அந்தக் கடவுள் பற்றிக் கூறும் கதைகள் பல உள்ளன. புராணங்களில் காணப்படும் பிள்ளையார் பற்றிய ஆறு விதமான கதை வடிவங்களை எடுத்துக் கூறுவார் பேராசிரியர் சிவசுப்ரமணியன்.

மற்ற தெய்வங்களிலிருந்து பிள்ளையார் எப்படி வேறுபடுகிறார் என்றால், தொடக்கத்தில் அவர் சிவ, விஷ்ணு பக்தர்களால் ஏற்றுகொள்ளப்படவில்லை. அவர் கோவிலுக்கு வெளியேதான் நிறுத்தப்பட்டிருந்தார்.

தெருமுனையில், குளத்தங்கரையில் என்று எங்கும் பிள்ளையாரைப் பார்க்க முடியும். ஆம், அவர் சூத்திரர்களின் கடவுளாகத்தான் முதலில் கருதப்பட்டார். பிறகுதான் சிவன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஆக்கப்பட்டார்.

முருக வழிபாடு தமிழர்களிடம் சங்க காலத்திற்குப் பிந்திய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. அதனால்தான், 'முருகன் எங்கள் முப்பாட்டன்' என்று சொல்லித் தங்கள் அரசியலுக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ள இயலுமா என்று இங்கு சில முயல்கின்றனர்.

சங்க இலக்கியமான பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களில் முருகன் பேசப்பட்டாலும், அவ்விலக்கியங்கள் சங்க காலத்திற்கு மிகவும் பிந்தியவை.

திருமுருகாற்றுப்படை, பிற்காலச் சைவத் திருமுறை நூல்களின் வரிசையிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே அதற்குச் சான்று.

எவ்வாறாயினும், தமிழர்களுக்கு நெருக்கமான முருகனின் அண்ணன் என்று பிள்ளையார் உருவகம் செய்யப்பட்டார். அதற்கு ஏற்ற வகையில், முருகனின் பெயர் சுப்பிரமணியன் என்று மாற்றப்பட்டது.

சுப்பிரமணியன் என்றால், சு - பிராமணியன், அதாவது 'பிராமணர்களுக்கு நல்லவன்' என்று பொருள்.

பிறகு அவர் பிள்ளையாரின் தம்பி என்பதால் 'பால'சுப்பிரமணியன் என்று ஆக்கப்பட்டார். இந்த அடிப்படையில்தான், இப்போதும் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் ஆகிய பெயர்களைப் பார்ப்பனர்கள் சூடிக் கொள்வார்களே தவிர, ஒருநாளும் முருகன் என்ற பெயர் அவர்களிடம் இருக்காது.

முருகன் ஐயரோ, முருகன் அய்யங்காரோ எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். முருகன் என்பது அழகிய தமிழ்ப் பெயர். முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன்.

சுப்பிரமணியன் என்பது சமற்கிருதத் சொல். முருகன் பெயர் மட்டுமன்று, சமற்கிருதம் கலக்காத தூய தமிழ்ப் பெயர் எதனையும் பார்ப்பனர் சமூகத்தில் பார்க்கவே முடியாது. எங்கேனும் லட்சம் பேரில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம்.

இங்குதான், மொழிக்கும் சமயத்திற்குமான உறவும், முரணும் தொடங்குகின்றன. எனவேதான், இன்றுவரையில், 'சமற்கிருத எதிர்ப்பு' என்பது திராவிட இயக்கக கொள்கையின் மாறாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

'பெருந்தெய்வ' வழிபாடு, சமற்கிருத மேலாண்மை, வருண அடிப்படையிலான சமூகம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு புதிய மதத்தை வலிமையாகக் கட்ட ஆதி சங்கரர் முயன்றார்.

தனித்தனி மாதங்களாக இருந்த சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு மதங்களையும் ஒருங்கிணைக்க அவர் முயன்றார். அதன் காரணமாகவே அவர் 'ஷண்மத ஸ்தாபகர்' என்று அழைக்கப்பட்டார்.

ஷண் என்றால் ஆறு என்று பொருள். (நம் வீட்டு ஆறுமுகங்கள் ஷண்முகங்கள் ஆன கதை இதுதான்). ஆனால் அவரால் அந்த முயற்சியில் இறுதி வெற்றியைப் பெற முடியவில்லை.

அந்த வேலையை இறுதியாகச் செய்து முடித்தவர்கள் ஆங்கிலேயர்களே. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சர் வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கில நீதிபதிதான், இந்து என்னும் சொல்லை வழக்கிற்குக் கொண்டுவந்தவர்.

அதனால்தான், மறைந்த சங்கராச்சாரியார், தன் 'தெய்வத்தின் குரல்' என்னும் நூலில், "ஆங்கிலேயர்கள் நம்மை இந்துக்கள் என்ற பெயரில் ஒன்றாகச் சேர்த்தார்களோ நாம் பிழைத்தோமோ" என்று எழுதுகின்றார்.

இவ்வாறு இணைப்பு ஏற்பட்ட பின்தான், பிள்ளையார் சூத்திரக் கடவுள் என்ற நிலையிலிருந்து மாறி, இந்துப் பெருந்தெய்வக் கடவுள் ஆகின்றார்.

- சுப.வீ..அவர்களின் 'கருப்பும் காவியும்'
தொடரிலிருந்து .