Tuesday, January 16, 2018

ஆண்டாளுக்கு போராட வந்த மாயம் என்ன?

நீட்டை எதிர்த்து போராடாதவன் ,
மீனவர்களுக்காக போராடாதவன்
மொழிப்போரில் ஒரு நாளும் பங்குபெறாதவன். எல்லாம்
ஆண்டாளுக்கு போராட வந்தார்கள் என்றால், மனிதனை விட கல்லும், பக்தி புராண காகிதமும் அத்துணை பெரியதாகிப் போயிருக்கிற மாயம் என்ன?
அந்த கல்லும் காகிதமும் தான் தமிழர்களை அடிமைப்படுத்த வந்த , அடிமைப்படுத்திக்கொண்டிருக்கிற அழுக்கு என்பதை எடுத்து சொல்ல திராவிடர்கள் தயங்கப்போவதில்லை.
ஆண்டாள் முதல் அரங்கன் வரை அத்துணை புராணமும் பக்தியும் கொக்கோகத்தின் கிளைக்கதைகளாக இருப்பதை மீண்டும் எடுத்து சொல்லவேண்டிய நேரம் வந்திருக்கிறது.
ராமன் பிறந்த கதையில் ஆரம்பிக்கவா ?
கண்ணனின் காமக் களியாட்டத்தில் ஆரம்பிக்கவா?

No comments: