Thursday, January 18, 2018

பார்பனரல்லாதவர்களை பற்றிய காலகாலமான தமது முன்னோர்களின் மதிப்பீட்டையே பிரதிபலித்துள்ளாள்

புலையர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் எம்மை இழித்தும், சுரண்டியும், எல்லா விதமான பாதகங்களையும் எவ்வித குற்ற உணர்சியும் இல்லாமலும் நடைமுறைப்படுத்தி வந்த ஆரிய அடியாட்களை பார்த்து 16 வயது ஆரிய இளம்பெண் கேட்டாள் பாருங்க ஒரு கேள்வி...
#கருப்பு_திராவிடனுங்க..
அந்த 16 வயது பெண் ஏதோ பொத்தாம் பொதுவில் தனது கருத்தை இங்கே பதிவு செய்துவிடவில்லை. பார்பனரல்லாதவர்களை பற்றிய காலகாலமான தமது முன்னோர்களின் மதிப்பீட்டையே அவளும் பிரதிபலித்துள்ளாள்.
திராவிட கூட்டமென்றால் திராவிடர் கழகத்தை குறிப்பதாக மட்டும் உங்களை நீங்கள் சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ஆரியரல்லாதோரை அழைக்கப்பயன்படும் வார்த்தையான திராவிடம் என்ற சொல், கட்சிகளை கழகங்களை கடந்த ஒன்று என்பதை நீங்கள் ஒப்புகொள்ளாமல் வேண்டுமானால் போகலாம். திராவிடம் என்ற சொல்லை ஒப்புக்கொண்டால், ஏதேது சாதியை கடந்து ஒருங்கிணைய வேண்டி வருமோ, அதனால் சாதிரீதியான மேலாதிக்கத்தை செய்ய முடியாதோ என்ற அச்சத்தில் திராவிடம் என்ற சொல்லை நீங்கள் எனக்கானது இல்லை என கூறிக்கொள்ளலாம்.
ஆனால் அந்த பெண் வார்த்தைக்கு வார்த்தை பயன்படுத்தும் இந்து தர்மத்தின்படி என்னதான் விபூதி குங்குமத்தில் விழுந்து விழுந்து புரண்டாலும் ஜாக்கி ஜட்டி நித்தியானந்தாவால் மதுரை ஆதீனமாகுவதற்கு வேண்டுமானால் முக்கி பார்க்க முடியுமே தவிர, சங்கர மடத்தின் அதிகாரத்தை அடைந்துவிட மயிரத்தனையளவும் கற்பனை செய்துவிட முடியாது.
ஸ்ரீரங்கத்து அய்யங்கார் ஆக சாதி மாற்றம் செய்துக்கொள்ள முடியாது.
ஆகமம் மீறி ஆலய கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்துவிட முடியாது.
இப்படியான பெரும் வேற்றுமையைதான் ஆரியர் ஆரியரல்லாதோருக்கான வேற்றுமை என்கிறோம்..
ஆக ஆரிய, ஆரியரல்லாத திராவிட வேற்றுமை குறித்தான வார்த்தைகள் உங்களை உறுத்தாமல் இருக்கலாம்.
ஆனால் ஆரிய எதிர்ப்பாளர்கள் என்பதற்காகவே நிலங்கள் பறிக்கப்பட்டு காடுகளுக்கு விரட்டப்பட்ட பூர்வகுடிகளின் மீதான அடக்குமுறைகளுக்கு எல்லாம் உடந்தையாக நின்றதன் மூலமாக நிலவுடமை தகுதியை பெற்று, இன்றுவரை ஆரிய மேலாதிக்கத்தை தமது கடமையாகவே கருதி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிற பெயர்தாங்கி தமிழுணர்வு இடைநிலை சாதிகளுக்கு, பலமுறை ஆரியம் பாடம் புகட்டியுள்ளதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இந்து மதத்தில் இடைநிலை சாதிகளின் சூத்திரத்தன்மையை ஒவ்வொரு முறையும் சொன்னவர் என்பதற்காகவே பெரியார் போன்ற தலைவர்களை இழித்துக்கொண்டிருக்கிற இடைநிலை சாதியினருக்கு இத்தகைய பாடங்கள் விளங்குமா என தெரியவில்லை.
தமிழகத்தின் எல்லா கோயிலுக்கும் சென்றும், எந்த கோயிலின் கருவறைக்குள்ளும் அனுமதிக்கப்படாத முதலியார் சமூகத்து கிருபானந்தவாரியாருக்கு செய்யப்பட்ட மறைமுக இழிவும்,
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருசிற்றம்பல மேடையேறி பாடியதற்காக 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டுக்கழித்து வன்னியரான சிவனடியார் ஆறுமுகசாமிக்கு செய்யப்பட்ட நேரடி இழிவும்,
சேரி நந்தனை எரித்துக்கொன்று தீட்சிதர்கள் செய்த இழிவும் ஒன்றுதான் என்று சொன்னால் நீங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்?
சமூக அடிப்படையில், பொருளாதர அடிப்படையில் நான் வீழ்த்தப்பட காரணமாயிருந்த ஆரியத்துக்கு நான் வெளிப்படையான எதிரியாக இருக்கிறேன்..
ஆனால் என்னை உங்களைக்கொண்டு ஒடுக்குவதன் மூலம் நமக்குள் பிரிவினையை நிலைபடுத்தும் ஆரியத்திற்கு, நீங்கள் எல்லோரும் அடியாளாகவே செயல்படுகிறீர்கள்.
அடியாட்கள் எந்நாளும் சம்மந்தி ஆகிவிடுவதில்லை. அவர்கள் எப்போதும் வெளியேதான் நிறுத்தப்படுவார்கள். அவ்வப்போது அவமானப்படுத்தவும் படுவார்கள். இப்போது உங்களை, உங்கள் வைரமுத்துவை, வைரமுத்து வீட்டாரை ஆரியத்தின் சில விழுதுகள் இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறது.
நீங்கள் எப்போதுமே உங்களுக்கு கீழே யாராவது இருந்தால் போதுமென்று நினைப்பீர்களே தவிர, உமது தலைக்கு மேலே ஒருவன் உட்கார்ந்துகொண்டு உச்சந்தலையில் ஒருவன் குட்டிக்கொண்டே இருக்கிறானே, அதுபற்றிய சிந்தனை உமக்கு வருவதேயில்லை.
அதுசரி.. நமக்கும் தீண்டாமை உண்டென்பதை ஒப்புகொண்டால் நாம் எப்படி மற்றவருக்கு தீண்டாமையை நிகழ்த்தமுடியும்?
ஆரிய திராவிட போர் இன்னமும் முடியவில்லை. இழிவுபடுத்தப்படுவது புரியாமல் அல்லது ஒப்புக்கொள்ள மனமில்லாமல் நீங்கள்தான் இன்னமும் காற்றில் கம்பு சுத்திக்கொண்டிருக்கிறீர்கள்..
அடடா அந்த பொண்ணு அடிச்சா பாருய்யா.. #கருப்பு_திராவிட_கூட்டம் 😂😂😂
அது வைரமுத்துவுக்காக உதிர்க்கப்பட்ட வார்த்தையே தவிர சேரிக்காரனுக்கு எதிராக உதிர்க்கப்பட்ட வார்த்தையல்ல.
இதற்கான உங்களது பதில் என்னவென்று அறிய ஆவலாகவே இருக்கிறோம்..
ஆணவக்கொலைகளை பகிரங்கமாக ஆதரித்தவர்களும், கொலையாளிகளுக்கு தண்டனை கிடைத்தபோது கவுசல்யா அப்பா பேசுவதாக கடிதம் எழுதியவர்களும் உயிரோடுதானே இருக்கிறீர்கள்?
நீங்கள் வளர்த்த காவி உங்களை கேள்வி கேட்கிறது.. பதில் சொல்லிவிட்டு போகிறீர்களா, அல்லது உங்களது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சான்றிதழ்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, எங்கள் சான்றிதழை கேள்விக்கு உள்ளாக்குகிற ஆரிய அடியாள் வேலையிலேயே குறியாக இருக்க போகிறீர்களா?

No comments: