Wednesday, January 17, 2018

சீமானை பற்றி தொண்டன் சொன்னது

 ஆதாரத்தோடஎன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

நான் ஒரு "நாம் தமிழர் " கட்சியில் தீவிர தொண்டனாக வலம் வந்தவன், என்னை விட கட்சி பணியில் தீவிரம் காட்ட முடியாதளவுக்கு சூறாவளியாக கட்சியை வலுபடுத்த நானும் ஒரு பங்கு உதவினேன்,

இதெல்லாம் யாருக்காக நம் தமிழ் இனத்துக்காக, எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எங்களிடம் விதைத்த விதை அப்படி " நானும் அப்படிதான் இயங்கினேன்,

என் குடும்பத்தை கூட கவனிக்காமல் முழு நேர தொண்டனாக திகழ்ந்தேன்

 'அன்று ஒருநாள் அதாவது பாம்பனில் எழுச்சிக் கூட்டம் நடைபெற்ற அன்று காலை 3:40 மணியளவில் அண்ணன் அழைத்திருந்தார், மேடையில் பேசக் கூடிய நபர்களில் நானும் ஒருவன்.

என்னிடம் அண்ணன் சீமான் அவர்கள் :

திமுக பற்றி இந்த மேடையில் விமர்சிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், அதுமட்டுமில்லாமல் நம் பேச்சு அனைத்தும் "பாஜக " அரசை தாக்கியே பேச வேண்டும் என கட்டளையிட்டார்

"நான் அப்போது ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததற்கு முழுகாரணம் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சி திமுக வும் தானே என்று வினவினேன், இப்படியே பேசி கொண்ட நேரத்தில் வாய் போர் முற்றியது, இறுதியில் அந்த மேடையில் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டார்,

அன்று எழுச்சி கூட்டம் முடிந்து, அடுத்த நாள் பிரபல திமுக பிரமுகர் சீமானை சந்திக்க வந்தார், அப்பொழுது தான் புரிந்தது "என் மரமண்டைக்கு சீமான் கட்சி நடத்துவது தமிழர்களுக்காக அல்ல "அவருடைய வருமானத்திற்கென்று,

நாம் தான் சீமானை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம், சீமானுக்கு கிறித்துவ மிஷனரிகளிருந்து கட்சி நன்கொடை என்று மாதந்தோறும் சேருகின்றது,

சீமானுக்கு தமிழகத்தில் தேவையானது "இரண்டு தான் மக்களை ஏமாற்றி அரியணையில் ஏறி இந்தியாவை துண்டாடுவது, இந்து மதத்தை இந்தியாவிலிருந்து துரத்துவது,

நான் அன்றே சீமானின் கட்சியிலிருந்து விலகி விட்டேன். நான் இந்து மதத்தையும், இந்தியாவையும் துண்டாட நினைக்கும் ஒரு அயோக்கியனுக்கு துணை போவதில்லை என்று

என் இன தமிழ் மக்களே, நாம் தமிழர் என்ற அயோக்கிய கட்சியை விட்டு விலகுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

(நான் பொய் சொல்ல வில்லை, உண்மை அறிய என்னுடைய விலாசத்தையும், கைப்பேசி எண்ணையும் இதனுடன் இணைக்கிறேன்)

ம.தமிழ்ச்செல்வன்
கருப்பாயூரணி
மதுரை _ 58
9963743411,7373453741

No comments: