Tuesday, January 16, 2018

காவி கற்பனை கதைகளின் நீட்சி

தமிழன் பிரசன்னாவை நேற்று காவி கும்பல் அடித்ததாக ஒரு செய்தி இன்று அனைத்து வாட்சப் குரூப்களிலும் முகநூலிலும் காவிகளால் பரப்பப்பட்டு சுற்றி வருகிறது.
தாமரைக்கனி ஆசிரியர் வீரமணியை அடித்தார்..
தேவர் அறிஞர் அண்ணாவை மிரட்டினார் போன்ற
கற்பனை கதைகளின் நீட்சி தான்
தமிழன் பிரசன்னா அடிவாங்கினார் என்பதும். அப்படி ஒரு சம்பவமே நேற்று 100% நடக்கவில்லை.
ஆனால் இங்கு என்ன பிரச்சனை என்று யோசித்தீர்களா??
அவர் அடிவாங்கினார் என்ற செய்தியை அனைத்து சங்கிகளும் அனுப்பியிருப்பார்கள்.
ஆனால் அது பொய் என்ற செய்தியை
திமுகவினர் கூட அனுப்பி இருக்க மாட்டார்கள்
இது தான் திமுக தொடர்ந்து தோற்பது மற்றும் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழப்பது போன்றவற்றிற்குக் காரணம்.
ஒரு கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியில்
அனைவரும் வாட்சப் வைத்திருக்கும் கட்சியில்.. தினமும் 20 செய்திகள் (10 ஆங்கிலம், 10 தமிழ். படங்கள், வீடியோ உட்பட) தலைமையில் இருந்து அனுப்பப்பட்டு
( மாநிலம், மாவட்டம், ஒன்றியம், கிளை நிர்வாகிகளுக்கு) அதை ஒவ்வொருவரும் தான் இருக்கும் அனைத்து குழுக்களுக்கும்
(பள்ளி, கல்லூரி, வேலை, நட்பு, சொந்தம்)
அனுப்பவேண்டும் என்று எளிய உறுதியான சட்டம் வரும் வரை திமுக வெல்ல வாய்ப்பே இல்லை.
அமித்ஷா தமிழ்நாடு என்னும் கிரிக்கெட் கிரவுண்டில் புட்பால் ஆடுகிறார் என்று நாம் நக்கல் அடிக்கிறோம். ஆனா கொடுமை என்னன்னா திமுக
இன்னமும் கிரவுண்டிற்கே வரவில்லை. இதைச் சொல்வதால் நான் கெட்டவன் ஆவேன். போய்ட்டு போறேன்..சாரி 

No comments: