Monday, November 18, 2019

அசல் மனுதர்ம சாஸ்திரம் 1919ன் பதிப்பு :

அசல் மனுதர்ம சாஸ்திரம் 1919ன் பதிப்பு :
   🤔பிராமணன் எந்தத் தவறு செய்தாலும் தண்டனை கூடாது😁
     பிரம்ம ஹத்தியை விட அதிகமான பாவம் உலகத்தில் கிடையாது. ஆதலால் பிராமணனை கொல்ல வேண்டும் என்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாது. மனு.அதி8:சுலோ 381.

     பிரமணன் எல்லா பாவஞ்செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி,அவன் பொருட்களுடன் ஊரை விட்டு துரத்த வேண்டியது.மனு அத் 8; சுலோ 380:

     பிரமணனை தலை மொட்டை செய்வது கொலைத் தண்டனையாகும்.மற்றவருணத்தாருக்கு😫 கொலை தண்டம் உண்டுமனு 8: சுலோ 379(என்ன அநீதி பாருங்கள்.மனுநீதி சட்டப்படி பாவம் செய்த பிராமணனுக்கு கொலை தண்டனை என்பது மொட்டையடிப்பதாம்.அவன் என்ன கொடுமை செய்தாலும் காயம் எதுவும் படுத்தாமல் அவனுடைய எல்லாப் பொருட்களையும் கொடுத்து வெளியே அனுப்பி விட வேண்டுமாம்⁉

     பிராமணனை கொல்ல வேண்டுமென்று நினைத்து தடி முதலான ஆயுதத்தை ஓங்கினால் நூறு வருஷம் வரையிலும்,அதினால் அடித்தால் 1000 வருஷம் வரையிலும் நரகத்தில் வாசம் செய்வான்.மனு11 சுலோ 206:

      பிராமணன் சரீரத்தில் ஏற்பட்ட இரத்தம் பூமியில் விழுந்து எவ்வளவு பரமாணுக்கள் நனைகிறதோ அவ்வளவு ஆயிரம் வருஷம் நரகத்தில் வாசம் செய்வான்(வேறு வருணத்தார்)மனு 11 சுலோ 207 ;

      பிராமணனை புசிப்பித்ததாலும் பூரணமான பலன் உண்டாகிறது.மனு 3 / 129.அதாவது பிராமணனை தின்று கொழுக்க உணவு கொடுத்து மற்றவர்கள் பூசைகளில் தர வேண்டும்;

       பிராமணர்கள் புசிக்கும் போது சண்டாளன் உயிர்ப் பன்றி,கோழி,நாய்,மாதவிடாயான ஸ்திரிபார்க்காமல் இருக்க செய்ய வேண்டும்,மனு 3/239;

      பெண்கள் விஷயத்தில் பிராமணனுக்கு சலுகை❓பிராமணனுக்கு தன் சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் விவாகம் செய்துக்கொள்ளலாம். மனு.2/13;

      பிராமணனுக்கு விவாகம் செய்துக்கொண்ட வைசிய மனைவியிடத்தில் பிறந்தவன்"அம்பஷ்டன்" என்றும்,அவ்விதம் சூத்திர மனைவியிடத்தில் பிறந்தவன்"நிஷாதன்" என்றும் சொல்லப்படுகிறான்.மனு 10/8;

      உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கர சாதியில்(கலப்பு) பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷை (தமிழ் உட்பட)உள்ளவர்களாயும், சிலர் சமஸ்கிருத போன்ற உயர்ந்த பாஷை உள்ளதுர்களாயும் இருக்கிறார்கள்.ஆகிலும் அவர்கள் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள்.மனு 10/45;

      உயர்ந்த சாதி கன்னிகையை புணர்ந்த தாழ்ந்த சாதியானுக்கு மரணம் வரையில் சிட்சையை விதிக்க வேண்டியது.மனு.8/366;(பிராமணனுக்கு எந்த சாதியினரையும் விவாகம் செய்ய தடையில்லை.ஆனால் பிறக்கும் குழந்தைகளின் நிலைகளில் தான் மாறுபாடுகள்).

      👺இப்படி பிராமண மனு தர்மத்தில் சட்டம் இருக்க ஆரிய-பிராமண இந்துத்துவாவாதிகள் கிறிஸ்தவர்களும்,இஸ்லாமியரும் தான் சாதியை கொண்டு வந்தார்கள் என்று வரலாற்று பொய்யை பொய்யர்கள் கூறுகிறார்கள்.இப்படி கூறுகிறவர்கள் யார்? திராவிட  காட்டிக் கொடுக்கும்🚩வந்தேறி கூட்டத்தாரின் கைக்கூலிகள்.
    
      அறிவுள்ளோர் சிந்திப்பது நல்லது. தொடர்ந்து பிராமண மனுதர்ம சட்டம் அறிவோம்.

No comments: