Monday, November 18, 2019

பகவத் கீதை ஏன் வேண்டாம்

*பகவத் கீதை ஏன் வேண்டாம்*

அது தான் என்னை கீழ்ஜாதி என்றது
அது தான் என்னை சூத்திரன் என்றது
அது தான் என்னை வேசிமகன் என்றது
அது தான் என் தாயை வேசி என்றது
அது தான் என்னைப் பஞ்சமன் என்றது
அது தான் என்னை தீண்டத்தாகதவன் என்றது
அது தான் என்னை தொட்டால் தீட்டு என்றது
அது தான் என்னை பார்த்தால் பாவம் என்றது
அது தான் என் நிழல் பட்டால் தோஷம் என்றது
அது தான் என்னை காலில் செருப்பு போடாதே என்றது
அது தான் என்னை தோளில் துண்டு போடாதே என்றது
அது தான் என்னை வீதியில் நடக்காதே என்றது
அது தான் என்னை கோயிலுக்கு போகாதே என்றது
அது தான் என்னை கடவுளை வணங்காதே என்றது
அது தான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
அது தான் என்னை நல்ல சோறு திண்ணாதே என்றது
அது தான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
அது தான் என்னை நல்ல வீடு கட்டிக் கொள்ளாதே என்றது
அது தான் என் பாட்டானை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
அது தான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
அது தான் என் பாட்டானை முண்டாசு அணியாதே என்றது
அது தான் என் பாட்டானை முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
அது தான் என் பாட்டானை முடி வளர்க்காதே என்றது
அது தான் என் பாட்டானை முடி வளர்த்தற்கும் வரி போட்டது
அது தான் என்னை கிணற்றில் நீர் எடுக்காதே என்றது
அது தான் என்னை படிக்காதே
அது தான் என்னை படித்ததை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்றது
அது தான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
அது தான் என்னை திறமை இல்லாதவன் என்றது
அது தான் என்னை மலம் அள்ளு என்றது
அது தான் என்னை காதலிக்காதே என்றது
அது தான் என்னை மீறி காதலித்தால் வெட்டுவேன் என்றது
அது தான் இரத்தக்கலப்பு வேண்டாமென்றது
அது தான் என்னை விலங்கை விட கேவலமானவன் என்றது
அது தான் எனக்கு இரட்டைகுவளை என்றது
அது தான் உனக்கு எதுக்கு நிலம் என்றது
அது தான் என்னை அடிமை என்றது
அது தான் பெண்களை மேலாடை அணியாதே என்றது
அது தான் பெண்களை மேலாடை அணிந்தால் வரி என்றது
அது தான் பெண்களின் மார்புக்கு வரி என்றது
அது தான் பெண்களை இழிவு என்றது
அது தான் பெண்களை காமம் மட்டுமே என்றது
அது தான் பெண்களை ஆணின் உடைமை என்றது
அது தான் பெண்களை பாவ யோனியில் பிறந்தவர் என்றது
அது தான் என்னை மனிதனை மனிதனாக பார்க்காதே என்றது...

No comments: