Thursday, November 21, 2019

விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔

சுவாதி படுகொலையில் முஸ்லிம்கள் மீது அவதூறு பேசி சட்டம் ஒழுங்கு கெடுவது போல கருத்துச் சொன்ன ஒய்.ஜி.மகேந்திரன் கைது செய்யப்படவில்லை.

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சை ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன துக்ளக் குருமூர்த்தி கைது செய்யப்படவில்லை.

காவல்துறையினரிடமே ஹைகோர்ட்டாவது மயிராவது என்று சொல்லி சட்டத்துக்கு புறம்பாக பேசிய ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை.

பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும்,  நாயையும் மனிதர்களையும் இணைத்தும் சாதி வெறியோடு கருத்துச் சொன்ன  வெங்கடகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்படவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அடித்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப்படவில்லை.

விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.

இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்ட பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இதே பாஜக, ஆர்.எஸ்.எஸ்-சுடன் தொடர்பு உள்ள பார்ப்பணரல்லாத கல்யாண ராமன் போன்றவர்களை எல்லாம் மிகவும் இலகுவாக கைது செய்யும் அரசு இயந்திரம் ஒரு பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவரை கைது செய்ய முடியவில்லை. அவர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்று தெளிவாக தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் இவ்வளவு தெளிவாக தெரிந்தும் விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔

No comments: