Thursday, November 21, 2019

ஆதிதமிழர்களின் வரலாற்றை இரண்டே நிமிடத்தில் சொல்ல டாக்டர் திருமாவளவன் அவர்களால் மட்டுமே முடியும்

ஆதிதமிழர்களின் வரலாற்றை இரண்டே நிமிடத்தில் சொல்ல டாக்டர் திருமாவளவன் அவர்களால் மட்டுமே முடியும்.

(என் குறிப்பு: இந்து என்கிற பெயரில் முதல் முதலில் அழைத்தவர்கள் சிந்து நதிக்கரையில் வணிகம் செய்ய வந்த அரேபியர்கள். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் யாரெல்லாம் கிறித்தவர், முஸ்லிம் இல்லையோ அவர்கள் ஹிந்துக்கள் என அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் முந்தையது சைவம். ஆரியர் வருகைக்கு பின் வேத காலத்தில் வைணவம் பரவியது. பிற்காலத்தில் சைவம், வைணவம் பின்பற்றிய மக்கள் சடங்குகளை எதிர்த்து தோன்றிய புரட்சிகர மதங்களான பௌத்தம், சமணத்தை ஏற்றனர்.

இதில் சமணத்தை ஏற்றவர்கள் சைவர்களால் கழுவேற்றப்பட்டனர். இன்றும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சைவ கோவில்களின் சமணர்கள் கழுவேற்றப்பட்ட சிலைகளை காணலாம்.

பௌத்தத்தை ஏற்றவர்கள் புத்தர் மறைந்த பின் வைணவர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். பலர் எரித்து கொல்லப்பட்டனர். புத்த விஹார்கள் பெருமாள் கோவில் ஆக மாறின. விரட்டி அடிக்கப்பட்ட மக்கள் தான் பிற்காலத்தில் தீண்டாமைக்கு ஆளாகினர்.

புத்தரின் காவி உடை, தாமரை போன்ற மத அடையாளங்களை தான் பார்ப்பனியம் முதல் பாஜக வரை பயன்படுத்தி வருகிறது! இங்கே இன்னொரு சந்தேகம் எழும்.. பிறகு ஏன் சிங்கள பௌத்தன் சைவ தமிழனை தாக்க வேண்டும்?

இலங்கையில் உள்ள தமிழர்கள் சைவத்தின் வழி வந்தவர்கள். சிங்கள பௌத்தர்கள் வட இந்தியாவில் இருந்து குடியேறிய வைண வழி தோன்றல்கள்.  மத அடையாளத்தில் அவர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் இன அடையாளத்தில் ஆரியர்கள்.

அதனால் தான் இலங்கையில் கொல்லப்பட்ட சைவ தமிழர்களுக்கு இந்துக்களின் கட்சி என கூறும் பாஜக எந்த கண்டனமும் வெளியிட்டதில்லை. மாறாக சிங்கள பௌத்தர்களுடன் கைகோர்த்து நிற்கிறது. அங்கே நடப்பது மத அரசியல் அல்ல, இன அரசியல்.)

No comments: