Monday, November 18, 2019

கீதாசாரம்

கீதாசாரம்:
.
.
இந்த பெயரில் பல விதமான பதாகைகள் நீங்கள் பார்த்திருப்பீர்கள், பலர் பலவிதமான உரைகள் விளக்கங்கள் சொல்லி கேட்டிருப்பீர்கள்
.
.
நான் நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் லிளக்க முயல்கிறேன்
.
.
போர்க்களத்தில் அர்ஜுனன், தன் ஆயதங்களை கீழே போட்டுவிட்டு, இறங்கி விடுகிறான், கிருஷ்ணன் என்ன ஆயிற்று அர்ஜுனா, உன் உறவினர்களை கொல்ல வேண்டுமே என்று குழப்பம் அடைந்து தயங்குகிறாயா என்று கேட்கிறான்.
.
.
அர்ஜுனன் இல்லை கிருஷ்ணா போர்களத்துக்கு வந்துவிட்டால் சண்டை செய்து தான் ஆகணும் என்று எனக்கும் தெரியும், ஆனால் இந்த போரில் வந்திருக்கும் எல்லா சத்திரிய வீரர்களையும் நான் கொன்றுவிட்டால்
.
.
அவர்களின் மனைவிகள், மகள்கள் மற்றும் மற்ற சத்ரிய பெண்கள் எல்லாரும் இந்த போருக்கு பின், திருமணம் செய்து கொள்ள சத்திரிய ஆண்கள் குறைவாக இருப்பதால் வேறு சாதி மற்றும் வருண ஆண்களை திருமணம் செய்து கொண்டு வர்ணகலப்பு ஏற்பட்டு, இந்த புனிதமான மனுதர்மம் அழிந்து விடுமே என்று தான் அஞ்சுகிறேன் என்று சொல்கிறான்
.
.
அதற்கு கிருஷ்ணன் “சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” இந்த நாலு வர்ணம் என்பதை உருவாக்கியவனே நான் தான் என்று மேற்கோள் காட்டி, இந்த நாலு வர்ணம் சார்ந்தவர்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்ன என்ன செய்ய கூடாது என்றெல்லாம் விளக்கமாக சொல்லிவிட்டு
.
.
கடைசியாக அர்ஜுனனை பார்த்து சொல்லும் பகவத்கீதையின் கடைசி வரிகள் இது தான்
.
.
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
.
.

அதாவது நீ எதை பற்றியும் கவலைபடாதே அர்ஜுனா, எப்போதெல்லாம் இந்த மனுதர்மத்தை யாராவது கெடுக்க அழிக்க முயற்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் நான் யுகங்கள் தோறும் பிறப்பெடுத்து, மனு தர்மத்தை காப்பேன்
என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உத்திரவாதம் கொடுத்த பிறகே அர்ஜுனன் பாரதபோரில் ஈடுபடுகிறான்
.
.

இதுவே ஒரு தேங்காய் சிரட்டையின் பின்பக்கம் (Nutshell) எழுதும் அளவுக்கு சுருக்கமான  கீதையின் மொத்த சாரம்,                  
.
.
FYI: மேலே உள்ள மொத்த பதிவு 192 வார்த்தைகள் கொண்டது 100ல் முடிக்க முடியவில்லை என்று வருந்துகிறேன்.

No comments: