Monday, November 18, 2019

முத்துராமலிங்கர் - புனிதர் போன்ற எந்த அடையாளமும் தேவை அற்றது

முத்துராமலிங்கர் என்ற மனிதர் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமே.....அதற்கு மேல் புனிதர் போன்ற எந்த அடையாளமும் தேவை அற்றது ....சில சமூக வரலாற்று உண்மைகளை தெளிவு படுத்திகிறேன்...

1..இன்னும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பிராமணர்கள் அதிகம் இருந்த அன்றய காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பல வருடங்களாக அந்த சட்டத்தை நீக்கும் செயல்பாடு இவரிடம் தீவிரமாக இல்லாது இருந்தது கடுமையான விமர்சினம் இன்றும் உண்டு....அதில் இவரின் சிறிய பங்கை மட்டுமே பெரிதாகி பலரின் பெரும்பங்கை பங்களிப்பை மூடி மறைத்து விடும் பார்பனியசூழ்ச்சியை அப்டியே விடமுடியாது....1937 ஆம் ஆண்டு தேர்தலில் குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார்.

முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் ஏன் செய்தார் என்று உண்மையை புரிந்தால் அனைத்தும் தெளிவாகும்...ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராஜாஜி பார்ப்பனர் முதல்வரானார். அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்பேன் என்று சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச் சட்டங்களை முன்பைவிட மிகக் கடுமையாக மக்களிடம் செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.

2. பெரியாரின் குடிஅரசு 02.10.1938 அன்றய பத்திகையில் -->நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்து மூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் சாதியைச் சார்ந்த மாணவர்களும் தமது எதிர்காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

No comments: