Monday, November 18, 2019

ஆரிய வேதத்திற்கு எதிரானது தமிழ் குறள்..

ஆரியம் நான்கு வருணம் என்கிறது..
குறள் பிறப்பொக்கும் என்கிறது..
ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது..
குறள் உழவனை போற்றுகிறது..
ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன..
குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது..
பிராமணன் பிச்சை வாங்க வேண்டும் என்கிறது ஆரியம்..
இரந்து வாழின் உலகியற்றியவன் கெட்டழியட்டும் என்கிறது குறள்..
மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது ஆரியம்..
மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்..
ஆரிய புராணங்களில் பல மனைவிகள் உண்டு..
குறள் பிரண்மணை நோக்காமை என்கிறது..
வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது..
குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது..
வேதம் விதி வலியது என்கிறது..
குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது..
வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது.
குறள் எல்லோரும் கற்க சொல்கிறது..
ஆரிய வேதம்=சுயநலம்.
தமிழ் குறள்=பொதுநலம்
வேதத்திற்கு எதிரானது குறள்..
வாழ்க தமிழ்..
வாழ்க திருவள்ளுவர்..
வாழ்க திருக்குறள்..

No comments: