Monday, November 18, 2019

400 BC - அப்போது இங்கே வாழ்ந்த மனிதர்கள் எந்த சாமியை கும்பிட்டார்கள்?!!!

400 BC

அதாவது கிருஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னால். ( கிமு கணக்கு ரிவர்ஸில் நகரும், உதாரணம்: 10,000 முதல் 1வரை.  கிபி ஆண்டுகள் முன்னோக்கி நகரும். உதாரணம் 1ரிலிருந்து 2019 வரை)

மஹாவீரர் அப்போது பிறந்திருக்கவில்லை.
புத்தரும் அப்போது பிறந்திருக்கவில்லை.
அப்போது சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் மாதிரியான தெய்வங்கள் இல்லை

அப்படியானால் இந்த மும்மூர்த்திகள்? சிவா, விஷ்ணு, பிரம்மா.....
அப்புறம் அந்த முப்பெரும் தேவியர்? பார்வதி, லஷ்மி, சரஸ்வதி?
இவர்கள் எல்லாம் அலெக்ஸாண்டர் இந்தியாவை கைபற்றிய போது கிரேக்க புராணங்களை தழுவி, இங்கே இறக்குமதி செய்யப்பட்ட கதைமாந்தர்.

கிரேக்கத்தில் ஸீயஸ், அவன் மனைவி ஹீரா. அவள் தான் வீரத்தின் தெய்வம். அப்ரதைத்தி: கடல் அலையிலிருந்து உதித்த அழகின் தெய்வம். அர்டெமிஸ் வெண் தாமரையில் வீற்றிருக்கும் அறிவின் தெய்வம்.....

இவர்களை எல்லாம் அப்படியே காபி பேஸ்ட் செய்து, அந்த காலத்தில் செய்த போட்டோஷாப் வேலைபாடு தான், மலைமகள், அலைமகள், கலைமகள் கதைகள்.....
Judgment of Paris எனும் ஒரு கிரெக்க தொன்மைகதை உண்டு. பாரிஸ் எனும் இளைஞனிடம் ஒரு ஞானபழம் கிடைக்கும். அதன் மேல் “கலிஸ்டி” என்று போட்டிருக்கும், அதாவது....”அழகில் சிறந்தவருக்கு”. உடனே ஹீரா, அப்ரதைதி, அர்தெமிஸ் மூவருக்குள்ளூம் “யார் பெரிய அழகி” என்ற போட்டி எழும் .....எங்கோ கேட்ட கதை மாதிரியே இல்லை? அதே தான், நம்ம “சரஸ்வதி சபதம்” + பழனி உண்டான கதையின் ஒரிஜினல் மிக்ஸ்!!

ஆனால் கிமு 400 தில் அலெக்சாண்டரே இன்னும் பிறந்திருக்கவில்லை.... ஆக இந்த கிரெக்க தொன்மங்கள் இன்னும் இறக்குமதி ஆகாத காலம்!!

அப்போது இங்கே வாழ்ந்த மனிதர்கள் எந்த சாமியை கும்பிட்டார்கள்?!!!

No comments: