Monday, November 18, 2019

திருடத்துடிக்கிறது சனாதனக் கூட்டம்.

காவி நிறத்தையே சமண மதத்திடமிருந்து திருடியதுதான் இந்த சனாதனக் கூட்டம்.

புலால் மறுப்பை பௌத்தத்திடமிருந்து திருடியது.

முருகனை சைவத்திடமிருந்து திருடியது.

கண்ணனை வைணவத்திடமிருந்து திருடியது.

பிராமணீய உயிர் கொலை யாகத்தை எதிர்த்து புரட்சி செய்தப் புத்தரை விஷ்ணு அவதாரம் என்று திருடியது.

இந்துத்துவாவை மறுத்து சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரைத் திருடியது.

இந்து என்பதை ஏற்காது தனியொரு வழிபாட்டை  உருவாக்கிய
சாமி வைகுண்டரைத் திருடியது.

இசுலாமியர்களோடு இயைந்து வாழ்ந்த மராத்திய சூத்திரர் சிவாஜியைத் திருடியது.

ஆர்எஸ்எஸ்சை தடை செய்த பட்டேலை காங்கிரஸ் கட்சியிடமிருந்து திருடியது.

'இந்துவாக ஒருநாளும் இறக்க மாட்டேன்' என்று முழங்கிய அண்ணல் அம்பேத்கரைத் திருட நெடுநாளாய் முயற்சித்தது.

தற்போது அதன் நீட்சியாக, வள்ளுவரைத் திருடத்துடிக்கிறது.

கழக கொள்கைப்பரப்பு செயலாளர்
                திரு.ஆ.ராசா எம்.பி

No comments: