Monday, November 18, 2019

தெரிந்துக்கொள்வீர் சூத்திர இந்துகளே

பார்ப்பனர்கள் நலனுக்காகவும் அவர்களின் அடிவருடிகளாக இருக்கவும் தான் இந்து இயக்கங்கள் வேலை செய்கிறதா? பொள்ளாச்சியில் ஆளும்கட்சி பிரமுகர்களால்  பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காவும் எந்த இந்து இயக்கங்களும் போராடவில்லை சிதம்பரம் கோயிலில் தீட்சிதரால தாக்கப்பட்ட இந்து பெண்ணிற்காகவும் எந்த இந்து இயக்கமும் குரல் கொடுக்கவில்லை. இந்து முன்னணி சந்து முன்னணி என பெயர் வைத்துக்கொள்வதை விடுத்து பார்ப்பனிய முன்னணி என வைத்துக்கொள்ளட்டும் இப்படி நவதுவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதற்கு?

இதுவே மற்ற மதத்தினர் கூட வேண்டாம் மற்ற சாதி இந்துகளில் யாராவது ஒருவர் ஒரு பார்ப்பானை பார்ப்பனத்தியை இதேபோல கன்னத்தில் அறைந்திருந்தால் இந்நேரம் இப்படி கள்ள மவுனம் சாதித்திருப்பார்களா?

தெரிந்துக்கொள்வீர் சூத்திர இந்துகளே..!!! இந்துத்துவா சித்தாந்தமும் அதன் இந்து இயக்கங்களும் பார்ப்பனிய நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன என்ற உண்மையை உணருங்கள் இனிமேலாவது...இந்துத்துவாவின் பின் செல்வதை தவிர்த்திடுங்கள் அவர்களின் அடியாட்களாக இருந்தது போதும். சுயநினைவுக்கொள் மானமுள்ளவர்களே!!!

No comments: