Tuesday, July 24, 2018

#திராவிடம்அறிவோம் (12)

#திராவிடம்அறிவோம் (12)

திராவிட இயக்க முதல் நாவலாசிரியர் என்று சிறப்பிக்கப்படும் புலவர் எஸ். எஸ். அருணகிரிநாதரின் பிறந்த நாள் இன்று . (15.07.1895).

"திராவிடன்", "சுதந்திர நாடு" ஆகிய இதழ்களில் பணியாற்றிய புலவர் அருணகிரிநாதர், நீதிக்கட்சியின் சிறந்த பேச்சாளராவார். "ஆனந்த ஜோதி" என்ற மாத இதழை நடத்திய இவரது எழுத்துகள், நாவல்களாகவும், வாழ்க்கை வரலாற்று நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அறிஞர் அண்ணா சிறை சென்ற போது, அவருக்கு அபிதான சிந்தாமணி நூலைக் கொடுத்தவர் இவரே.

இந்தி எதிர்ப்புப் போரில் தமது மனைவியாரை ஒரு வயதுக் குழந்தையுடன் மறியலுக்கு அனுப்பியவர் புலவர் அருணகிரிநாதர்.

No comments: