Tuesday, July 24, 2018

#திராவிடம்அறிவோம் (18)

#திராவிடம்அறிவோம் (18)

நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால், திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவியலாக இருக்கக்கூடாது என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பல துறைகளிலும் பெற வெண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. அடுத்து மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. ஆகவே, திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், அவை நியாயமான காரணங்கள். மனமார்ந்து ஏற்றுக்கொண்ட காரணங்கள்.

– அறிஞர் அண்ணா

No comments: