Thursday, July 26, 2018

நவீன மருத்துவம் குறித்து நம்மாழ்வார் ஐயாவின் அற்புத அரிய உரை

நவீன மருத்துவம் குறித்து நம்மாழ்வார் ஐயாவின் அற்புத அரிய உரை:
1) அமெரிக்காவுல தயாரிக்கற மாத்திரைக்கு இங்க நோயைக் கண்டுபிடிக்கறாங்க. (ஃபார்மக்காலஜி லைன்ல வாங்க)
2) டெங்கு காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரிக்கு போனவங்க செத்தாங்க. வீட்ல நிலவேம்பு குடிச்சவங்க பிழைச்சாங்க. (ஜெனரல் மெடிசின் லைன்ல வாங்க)
3) அலோபதி மருத்துவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த ஹீலர்களுக்கு இருக்கு. (கம்யுனிட்டி மெடிசின் லைன்ல வாங்க)
4) பஞ்சகவ்யா மூக்குச்சளி முதல் எய்ட்ஸ் உட்பட அனைத்து நோயையும் குணமாக்கும். (வைராலஜி யாராவது இருக்கீங்களா?)
5) பஞ்சகவ்யம் குடித்தால் கண்ணாடி போட வேண்டியதில்லை. (தம்பி, ஆப்தல்மாலஜி அதான் ஐயா சொல்லிட்டார்ல!)
6) வெள்ளைக்காரன் நாற்காலியைக் கொண்டுவந்துதான் நோயைப் பரப்பினான். அதனால் எப்போதும் சம்மணம் போட்டு உக்காருங்க. (பிஸியோ எங்கப்பா?)
7) இங்கிலீஷ் டாக்டருங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் உடம்பைக் கிழிச்சி தைக்கிறது மட்டும்தான். ஏன்னா அதுக்கு அவங்க்கிட்ட லைசன்ஸ் இருக்கு. கிழிச்சு தைச்சதுக்கப்புறம் அந்த உடம்பு என்னத்துக்கு ஆகும்? (சர்ஜரி கைஸ், கேட்டீங்களா?!)
8). உடம்பைக் கிழிச்சு தைச்சதுக்கப்புறம் அது எதுக்கு ஆகும்? இதை நாகரிகம்ங்கிற பேர்ல நாமளும் ஏத்துக்கறோம். (ரிஹேப் பசங்களா, கேட்டீங்களா?!)
9) வயித்தைக் கிழிச்சு குழந்தையை எடுக்கறதுக்கு எதுக்கு ஒம்போது மாசம் வைத்தியம் பாத்தீங்க, ஸ்கேன் பண்ணுனீங்க? (கைனக்ஸ் ஆன்சர் ஐயா'ஸ் கொஸ்டின்)
10) வீட்ல வச்சு பிரசவம் பாத்து எதாச்சும் ஆச்சுன்னா போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்துருவேன்னு சொன்ன அந்த பெண்ணோட அம்மாவை நினைச்சு ஐயா எக்காளமாய் சிரிக்கறது எவ்வளவு அழகு தெரியுமா! (மெடிக்கோ லீகல்! ஹாஹாஹா!!)
11) குழந்தையை ஒவ்வொரு உறுப்பையும் உண்டாக்கற தாயோட உடம்பு இதயத்தையும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒழுங்காத்தான் உண்டாக்குது. அப்படிப்பட்ட தாயோட உடம்பு தன்னோட இதயத்துல இருக்கற ஓட்டைய அடைச்சுக்காதா? (ஏம்ப்பா கார்டியாலஜி துரை, ஐயா கேட்டது புர்தா?!)
12) வீட்டுக்குள்ள இருக்கற குப்பையைக் கூட்டி வெளில தள்ளிட்டு விட்டுர்றோம். அதேமாதிரி உடம்பு குப்பை, கழிவுன்னு தனக்கு தேவையில்லாததை மலக்குடல் வழியா வெளிய தள்ளிடுது. அதப்போயி இவிங்க மலப் பரிசோதனைன்னு பண்ணிகிட்டு இருக்காங்க. ஹாஹாஹா! ஃபன்னி கைஸ்!! (லேபுக்கார தம்பி, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துராதப்பா!).
இதெல்லாம் சின்ன சாம்பிள். விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தி வைக்கப்படும் நம்மாழ்வாரின் அறிவியல் இதுதான். இந்த மாதிரியான கோட்பாடுகளை வைத்து இன்று விவசாயம் செய்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
சாவு அடுத்தவன் வீட்டில் விழும்வரை அது நமக்கு செய்திதான். நமது மனைவியோ, கணவனோ, குழந்தையோ, தாயோ, தகப்பனோ இறந்தால்தான் அதனுடைய வேதனை புரியும்.
சாவு எல்லோருக்கும் ஒருநாள் வரும்தான். ஆனால் அதை நமது முட்டாள்தனத்தால் நாமே வரவழைத்துக்கொள்வதோ, நமக்கு நெருங்கியவர்களுக்கு வரவழைப்பதோ கொலை செய்தலுக்கு ஒப்பாகும்.
நம்மாழ்வார்கள், ஹீலர்கள், வாழ்வியல் புடலங்காய் புண்ணாக்கு விற்பன்னர்களை நம்பி யாரும் அகாலமரணம் அடையக்கூடாது.

No comments: