Wednesday, July 25, 2018

திருப்பூர் கொலை

திருப்பூர் கொலை
அந்த காலத்துல இத்தனை நோயா இருந்துச்சு எங்க ஆத்தா பதினாறு பிரசவமும் வீட்லயேதா பாத்துச்சு என்று பெருமை பேசி திரிபவர்கள் ஆபத்தானவர்கள்.அவர்களை போன்ற ஒரு கொலைகார கணவன் தான் இன்று திருப்பூரில் வீட்டிலேயே 'You Tube' வழியாக பிரசவம் பார்த்து ஒரு இளம் பெண்ணை கொடூரமாக கொன்று இருக்கிறான். பெரிய பெரிய மகப்பேறு மருத்துவர்களே பிரசவத்தின் பயம், எதிர்பாரா பிரச்சனைகள் என்று தவிக்கும் போது ஒரு வீடியோவை துணையாக கொண்டு பிரசவம் பார்ப்பேன் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? பிரசவித்ததில் இருந்து ஒரு தடவை கூட 'செக் அப்' செல்ல வில்லையாம்.பற்றிக்கொண்டு வருகிறது
இதற்கு காரணம் வறுமையா என்றால் இல்லை.
அரசாங்கம் முதல் மாதத்தில் இருந்து கவனித்து மருந்து கொடுத்து ஊசி போட்டு கரு வளர வளர காசும் கொடுக்கிறது.ஏன் சீமந்தம் கூட நடத்துகிறது குழந்தை பிறந்த பின் மீதி தொகையும் கொடுத்து குழந்தை பராமரிப்பு சாமான்களும் கொடுக்கிறது.அனைத்து தடுப்புஊசிகளும் தாய்க்கும் சேய்க்கும் அனைத்தும் இலவசமாக தருகிறது.
இதற்கு காரணம் அறியாமையா என்றால் இல்லை.அந்த பெண் தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியை.அந்த கொலைகாரனும் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறான்.
இதற்கு காரணம் மருத்துவமனை இல்லாத ஊரா என்றால் அதுவும் இல்லை தெருவுக்கு தெரு ஊருக்கு ஊர் ஆரம்ப சுகாதார நிலையங்களும் மகப்பேறு மருத்துவமனை களும் உள்ள திருப்பூர்.
என்ன காரணம்?? அரைகுறை வீடியோக்களும், மெர்சல் த்ரீ இடியட்ஸ் போன்ற முட்டாள் சினிமாக்களும்
'முன்னோர்கள் என்ன முட்டாள்களா' டைப் வாட்ஸப் பார்வேர்டுகளும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களும் தான்.
இனிமேல் யாராவது வீட்டு பிரசவ பெருமை பேசினால் உடனே அறைந்து விடுங்கள்.இதுபோன்ற ஒரு உயிர் போவது தடுக்க படும்.அந்த கொடூரனை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். பொய் மருத்துவ வீடியோக்கள் தகவல்கள் தருவோரை சிறையில் தள்ள வேண்டும்.அப்போது தான் இந்த சமூகம் உருப்படும்

No comments: