Tuesday, July 24, 2018

#திராவிடம்அறிவோம் (21)

#திராவிடம்அறிவோம் (21)

1969, செப்டம்பர் 22 ஆம் நாளன்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், நான்காவது நிதிக் குழுத்தலைவருமான டாக்டர் இராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு பி. சந்திரா ரெட்டி ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை மத்திய - மாநில உறவுகளை ஆராய்ந்து அறிக்கை தரும்படி திமுக அரசு கேட்டுக்கொண்டது.

1971ஆம் ஆண்டு இராஜமன்னார் குழுவினர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தங்களது அறிக்கையை அளித்தனர்.

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநில அரசு, மத்திய - மாநில உறவு குறித்துப் பெற்ற அறிக்கையாகும் அது !

No comments: