Friday, July 27, 2018

கருணாநிதியை 2009இல் மௌனமாக்கியது உங்கள் நொண்ணைத் தலைவனின் செயற்பாடுகள்தான்!

பாஜக, சில வலதுசாரி அமைப்புகள் மற்றும் சில அதிமுகவினர் கருணாநிதியை விமர்சிப்பதையும், திட்டுவதையும் கட்சி சார்பாக பார்த்து ஒதுக்கிவிடலாம்.
சில தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், ஈழ வியாபாரிகளும் கருணாநிதியை திட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களை, நன்றி என்றால் என்ன என்று தெரியாத துரோகிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்களின் நொண்ணை தேசியத் தலைவன் 20 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் கருணாநிதிதான். எண்பதுகளின் இறுதியில் போய் சேர்ந்திருக்க வேண்டியவன்தான் பிரபாகரன்.
அன்றைய இந்தியப் படைகள் இந்த நொண்ணைத் தலைவனை சுற்றி வளைத்து, போட்டுத் தள்ள தில்லியிடம் இருந்து க்ரீன் சிக்னல் எதிர்பார்த்துக் காத்திருந்த போது, அன்றைய பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து இந்தியப் படைகளை பின்வாங்கச் செய்தவர் கருணாநிதி!
இவர்களின் நொண்ணைத் தலைவனுக்காக தன் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட போதும் தன் ஆதரவு நிலைப்பட்டை கருணாநிதி மாற்றிக் கொள்ளவில்லை.
ராஜீவ் படுகொலை கருணாநிதியை நிலைகுலையச் செய்தது. அந்த நொண்ணைத் தலைவன் இந்த அளவிற்கு போவான் என்பதை பத்பநாபா கொலையிலேயே புரிந்து கொள்ளாமல் போனதுதான் இவர்கள் விஷயத்தில் கருணாநிதி செய்த தவறு. ராஜீவ் படுகொலைக்கு பிறகு நேரடியான ஆதரவுப் போக்குகளை கருணாநிதி குறைத்துக் கொண்டாலும், எதிராக பேசி/செயல்பட்டதில்லை.
கருணாநிதியை 2009இல் மௌனமாக்கியது உங்கள் நொண்ணைத் தலைவனின் செயற்பாடுகள்தான்!
கொஞ்சமாவது நன்றின்னா என்ன, விசுவாசம்ன்னா என்னன்னு தெரிஞ்சிக்கங்கடா.

No comments: