Thursday, July 26, 2018

ஈழ துரோக காங்கிரஸ்சை ஆதரிப்பதா -- பழைய குபீர் திடீர் (RSS) தமிழுணர்வு போராளிகள்

//ஈழ துரோக காங்கிரஸ்சை ஆதரிப்பதா -- பழைய குபீர் திடீர் (RSS) தமிழுணர்வு போராளிகள்//
காங்கிரஸ்சாவது புலிகளை மாத்திரம் எதிரியாய் பார்த்தது, அதுவும் ராஜீவ் படுகொலையால், ஆனால் பாஜக RSS கும்பலோ, ஒட்டுமொத்த தமிழினத்தையே எதிரியாய் பார்க்கும்..
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிஜேபி கட்சி வெளியிட்ட காங்கிரஸின் மீதான குற்றபத்திரிக்கையில், "உள்நாட்டு, பிரதேச" அழுத்தங்களுக்கு பணிந்து, தமிழர்களுக்கு எதிரான இறுதி போரில், இலங்கை ராஜபக்சே அரசுக்கு முழு ஒத்துழைப்பை, உதவியை மந்திய காங்கிரஸ் அரசாங்கம் செய்யவில்லை என்று குறைசொல்லி, நாங்களாய் (பிஜேபி ஆட்சி) இருந்திருந்தால், இத்தைகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்... அப்படியென்றால் என்ன அர்த்தம்?? "கூட்டணி கட்சியான திமுக கொடுத்த அழுத்தங்களால், மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு, புலிகளை ஒழிக்க சரியான முறையில் உதவவில்லை.. ஆனால், நாங்கள் (பிஜேபி) இவ்வாறு உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல், ராஜபக்ஷே அரசுக்கு உதவியிருப்போம்" என்பதுதானே.. .
சரி, இலங்கையில் தமிழ் இந்துக்கள் பாதிக்கப்பட்டபோது, எந்த RSS ஹிந்துத்துவா இயக்கங்களும் போராடவில்லையே... இலங்கையில் லட்சகணக்கான தமிழ் மக்கள் கொல்லபட்டார்களே, பல நூறு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டனவே... அப்போது இங்கே எந்த ஒரு ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யவில்லையே... ஒரு சிறு எதிர்ப்போ, போராட்டம்மோ, அறிக்கையோ எதுவும்மே செய்யவில்லையே??, அப்போ தமிழர்கள், ஹிந்துக்கள் இல்லையா???
சாதாரண சப்பை காரணக்களுக்காக பலமுறை, வாரக்கணக்கில் இந்திய நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கிவைத்த அப்போதைய எதிர்கட்சியான பிஜேபி, தமிழ் நாட்டு மீனவர்களுக்காகவும், ஈழ தமிழர் (இந்துக்கள்) படுகொலைகளின் போதும், எத்தனை முறை நாடாளுமன்றத்தை முடிக்கிவைத்தது??? அவற்றின் மீது விவாதம் நடத்த அரசை கோரியது????... விடை : பூஜ்யம்
காங்கிரஸ் அரசே ஒருவழியாய் ஒத்துக்கொண்டு, போற்குற்றத்துக்காக இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வந்தது... ஆனால் அந்த தீர்மானத்தைகூட நாடாளுமன்றத்தில் கொண்டுவரக்கூடாது என்று எதிர்த்தும், அதை தாக்கல்செய்யகூட ஒத்துழைக்காத கட்சிதான் பிஜேபி.... "இலங்கையில் நடந்தது போர்குற்றம் அல்ல", ராஜபக்ஷேவை "போற்குற்றவாளி" என்று குறிப்பிடக்கூடாது என்று சொன்னகட்சிதான் பாஜக...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு மட்டும் முட்டுக்கட்டை போட்டது ஏன்?????
தமிழர்களை கொன்ற சிங்கள ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று சொன்னவர் BJPயை சேர்ந்தவரும், மோடியின் நண்பருமான சு.சாமி... மோடியின் அமைச்சரவையில் மிகமுக்கிய பொறுப்புக்களை வகிக்கும் ரவிசங்கர் பிரசாத், இலங்கையில் நடந்தது போர்குற்றம் கிடையாது, ராஜபக்சே போற்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று அறுதியாய் சொன்னவர்.... சுஷ்மா சுராஜோ, ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.. இந்தியாவுக்கு அவரை அழைத்து மரியாதை செய்தவர்.. ஈழ தமிழர்கள் தனி நாடு என்பதை கேட்கவில்லை என்று சொல்லி, உயிர்த்தியாகம் செய்த போராளிகளை அவமதித்தவர்..

No comments: