Thursday, July 12, 2018

#திராவிடம் அறிவோம் (1)

திராவிடம் அறிவோம் (1)

G.O. Ms. No. 1071 / Public, dated. 04.11.1927.

நீதிக்கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எஸ். முத்தையா, திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சாகத் திகழ்ந்து கொண்டு வருகிற சமூக நீதிக் கொள்கைக்கு முதன்முதலாக வடிவம் கொடுத்தவர்.

மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கிற பார்ப்பனர்கள் அரசுப் பணிகளை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தனர். இதனைக் கட்டுப்படுத்தி எல்லா வகுப்பினருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் பங்கிட்டு அளிக்கும் ஆணை 👆🏾 ஒன்றை உருவாக்கி வெளியிட்டார். அவ்வாணைக்குக் கம்யூனல் ஜி.ஒ. என்று பெயர்.

1921 ஆம் ஆண்டு பனகல் அரசர் முதல்வராக இருந்த போதே இதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதில் பார்ப்பன- ஆங்கில அதிகார வர்க்கத்தின் கைவரிசை இருந்ததால் அவ்வாணை முடக்கி வைக்கப்பட்டது.

No comments: