Thursday, July 12, 2018

#திராவிடம்அறிவோம் (6)

#திராவிடம்அறிவோம் (6)

ஈழத் தமிழ் அகதிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 200 எனவும், பிற உறுப்பினர்களுக்கு ரூ. 144 எனவும், முதல் குழந்தைக்கு ரூ. 90 எனவும், அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ரூ. 45 எனவும் மத்திய அரசால் பணக்கொடை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

2006 – 11 தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர், மாநில அரசின் சார்பில் அதே அளவு தொகையைச் சேர்த்து அந்த பணக்கொடையை இருமடங்காக உயர்த்தி ஆணையிட்டார். மாநிலப் பொறுப்பிலிருந்து, அகதிகளுக்குப் பணக்கொடை வழங்கிய மாநில அரசு இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும் தான்.

No comments: