Friday, July 13, 2018

பெண்கள் கீழே உள்ள ஐந்து படிப்பினையை எடுத்து கொள்ளுங்கள்

வெள்ளிக்கிழமை முடிந்து weekend வரவேற்கும் முன் evening அலுவலக அரட்டையில்..... பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடு பற்றிய எதேச்சையான விவாதத்தில் பெண்கள் தண்டால் எடுக்க வேண்டும் கைகளை பலப்படுத்தவேண்டும் என்று சொன்னேன்...உடனே அனவைரும் சிரித்து விட்டார்கள்..நான் கவலை பட வில்லை..ஏற்கனவே பதிவிட்டதை ஆங்கிலத்தில் சொன்னேன்..
கீழே உள்ள ஐந்து படிப்பினையை எடுத்து கொள்ளுங்கள்...
1. சேலை ஒரு அடிமைத்தனமான ஆடை...பெண்களை சுதந்திரமாக செய்யவிடாது...மாற்று நிறைய இருக்கிறது..உங்கள் தேவை என்ன என்பதை சரியாக தேர்ந்துங்கள்....உங்கள் முடிவை நீங்கள் தான் எடுக்கவேண்டும்.,...
2. தண்டால் எடுங்கள்....கைகளை பலப்படுத்துங்கள்....ஒல்லியாக இருந்தாக வேண்டும் என்று கட்டாயம் இல்லை அப்படி இருக்க வைக்க ஆணாதிக்கம் விரும்புகிறது.....ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமல்ல Flexibility மிக முக்கியம்..
3. கல்வியை எப்பாற்பட்டவது முடித்துவிடுங்கள் ....நூலகத்தை பயன்படுத்துங்கள்...அடிப்படை சமுக பொருளாதார விழிப்புணர்வை பெறுங்கள்....பெரியாரையும் அம்பேகாரையும் சரியாக உள்வாங்கிக்கொண்டேர் என்றால் நீங்கள் மனஅளவில் பலசாலி ஆகிவிட்டர்கள் என்று பொருள்...பெண்களுக்கு என்ன வகையில் இடஒதுக்கீடு கொடுக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்...சொத்துரிமை பற்றிய தெளிவை பெறுங்கள்..
4. பேச்சுரிமை மட்டுமல்ல சுயமரியாதை என்ற எண்ணமே உயிரைவிட முக்கியமாக நினையுங்கள்...அதற்கு பங்கம் வந்தால் எதிர்த்து நின்று போராடுங்கள்..
5. மேல சொன்ன அனைத்தை விட தனிப்பட்ட பொருளாதார பலத்தை ஈட்டும் திறமையை பெறுங்கள்....கணவனுக்கு புரிய வையுங்கள் தற்காலத்திய விலை வாசி மற்றும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் பாதிப்புகளை..

No comments: