Thursday, July 12, 2018

அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு வந்த கதை தெரியுமா

அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு வந்த கதை தெரியுமா...
தெரியாதவர்கள் உள்ளே வாருங்கள்.கடவுளோட ஊருக்கு ஒரு Tour Visit போயிட்டு வரலாம்.
தட்ஷன் என்பவரை உங்க எல்லோருக்கும் நல்லாவே தெரியும்.அந்த தட்ஷனுக்கும் பிரகதி என்பவளுக்கும் பிறந்தவள் தான் சுவாஹாதேவி என்பவள்,இவள் தான் நாம் அருந்ததி பார்க்க மூலகாரணம்.
இவளது இளமையும் அழகும் செழிப்பான அமைப்பும் எம மகாராஜனையே
கிரங்க செய்தது.
எமன் பார்த்துவிட்டு இவளை விட்டால் நம்மை இவளின் அழகெனும் அஸ்த்திரத்தால் நம்மை தினந்தோறும் சாகடிப்பாள் இவளை விட கூடாது என்றென்னிய எமன் அவளை ஒரு எழும்மிச்சை பழமாக்கி விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.
தேவைபடும் பொழுது அவளை வெளியே எடுத்து அனுபவித்து விட்டு பிறகு மீண்டும் விழுங்கிவிடுவான்.
இப்படி தான் ஒரு முறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து கொஞ்சி குழாவி ஆனந்தமயம் அடைந்து விட்டு களைப்பில் அப்படியே உறங்கிவிட்டான்.
சுவாஹாதேவியோ தனது செழித்த அழகோடு நந்தவனத்தில் ஒற்றையில் உலவிகொண்டிருந்தாள்.அந்த வழியாக வந்த அக்னி தேவனை சுவாஹா பார்த்துவிட அக்னி மீது மோகம் கொண்டால் சுவாஹா.
டேய் டேய் என்னடா ரூட்டு மாறுதே மசாலா கதையாடா இதுன்னு யாராவது கேட்டீங்கன்னா,கிட்டதட்ட அப்படி தான்.
அக்னியை அழைத்து ஏ அக்னி தேவா என்னிடம் சுகத்தை குடி.எனக்குள் எரியும் மோக தீயை நீ தான் அனைக்க வேண்டும் என கூறி,எமன் விழிப்பதற்க்குள் இருவரும் கலந்து ஆனந்த லீலை புரிந்து முடித்ததனர்.
இவ்வளவு நடந்த பிறகும் சுவாஹாவிற்க்கு அக்னி மேலுள்ள மோகம் தீரவில்லை.என்ன செய்யலாம் என யோசித்தவள் எமனின் வித்தையையே இவளும் கையாண்டாள்.
அக்னியை சுவாஹா ஒரு எழும்மிச்சை பழமாக்கி விழுங்கி தன் யிற்றுக்குள் வைத்துக்கொண்டாள்.
எமன் இப்போது விழித்து பார்க்கிறார்.ஒன்றுமே நடக்காதது போல் இருந்த சுவாஹாவை மீண்டும் எமன் எழும்மிச்சையாக்கி விழுங்கிவிட்டார்.
இப்போது எமன் வயிற்றில் சுவாஹா.சுவாஹா வயிற்றில் அக்னி.
பிறகென்ன அக்னி தேவன் இல்லாததால் உலகமே தவித்து கொண்டிருந்தது.
விஷ்ணுவிற்க்கு விபரம் தெரிய வருகிறது.
நந்தவனத்தில் நடந்த அனைத்தையும் அறிந்த விஷ்ணு எமனை அழைத்து சுவாஹா தேவியை வெளியில் எடு என்றைர்.அப்படியே செய்தார் எமன்.
வெளியே வந்த சுவாஹாவிடம் நீ அக்னியை வெளியே விடு என்றார் விஷ்ணு.
சுவாஹாதேவி ஆசைபட்டது போல் அவளுக்கே அக்னியை மணமுடித்து வைத்ததனர்.
ஆனால் சுவாஹாதேவியை ரசித்த அக்னிக்கு இன்னும் மோகம் தனியவில்லை.அழகு பதுமையாய் சதைசிற்ப்பமாய் சுவாஹாதேவி காத்திருக்க,அக்னியோ சப்தரிஷி மண்டபத்தில் எப்போதும் ஜொளித்து கொண்டிருக்கும் ரிஷிளின் மனைவிகளோடு சல்லாபிக்க ஆசை கொண்டான்.
அடப்பாவி இது என்ன கடவுள் கதையா இல்ல கருமாந்திர கதையான்னு என்கிட்ட கேட்டீங்கன்னா விவேக் Style ல அதுதான் எனக்கும் தெரியலயேப்பான்னு தான் சொல்லுவேன்.
இந்த ஆசையை தன் மனைவியான சுவாஹாதேவியிடம் சொன்னான் அக்னி.
அடியேய் சுவாஹா உன்னை அனுபவித்து அனுபவித்து எனக்கு சளிப்பாகிவிட்டது.அதனால் நான் ரிஷிகளின் மனைவிகளோடு தேகானந்தம் கொள்ள விரும்புகிறேன் என்று.
நல்ல மனைவியாக இருந்தாள் இதை ஏற்றுக்கொள்ள முடியுமா.முடியாது.ஆனால் நம்ம சுவாஹா சற்று வித்தியாசமா யோசித்து அப்படியே ஆகட்டும்.ஆனால் ஒன்று அந்த ரிஷிகளின் மனைவிகளை போல் நானே உருவம் எடுத்து வருகிறேன் நீ என்னை அனுபவித்துக்கொள் என்றாள்.
சப்தரிஷிகள் என்பது ஏழு பேராம் இவர்களின் ஒவ்வொரு மனைவிகளை போலவும் உருவெடுத்து சுவாஹா வர அவர்களை அனுபவித்து மகிழ்ந்தான் அக்னி.
இன்னும் ஒருத்தி பாக்கி இருக்கிறாள் அவள்தான் வசிஷ்ட்டரின் மனைவி அருந்ததி.
கடைசியாக சுவாஹா அருந்ததி போல உருவெடுக்க எவ்வளவோ முயன்றும் அவளாள் உருமாற முடியவில்லை.தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தியும் அவளாள் உருமாறமுடியவில்லை. ஏன் என்றால் அருந்ததி கற்ப்புக்கரசியாம்.
இதை உணர்ந்து கொண்ட சுவாஹாதேவி நான் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னிப்பாயாக.இனி அக்னி முன்னிலையில் நிகழும் ஒவ்வொரு கல்யாணத்திலும் உன்னை பார்த்து வணங்கினால் அந்த தம்பதிகள் தனம்,சுகம்,புத்திரபாக்கியம் பெற்று வாழ்வார்கள் என்று கூறினாலாம்.
அதன்படிதான் நாம் இன்றும் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறோம்.
ஒரு சாதாரண சிறிய சடங்கிற்க்கு இவ்வளவு பெரிய காம கதை தேவைதானா.எந்த கடவுளுமே ஒழுக்கமாக இல்லை என்பது ஒவ்வொரு புராணத்தையும் படிக்கும் போது தெளிவாக தெரிகிறது.

No comments: