Thursday, July 12, 2018

புனிதமாக்கப்பட்ட பகவத்கீதையும் அது கற்பித்த சாதியும்.

புனிதமாக்கப்பட்ட பகவத்கீதையும் அது கற்பித்த சாதியும்.
பகவத் கீதை என்பது இந்து மதத்தின் நூல் அல்ல.
வேறு எந்த மதத்தின் நூலும் அல்ல.
கீதை எழுதப்பட்ட காலத்தில் இந்து மதம்
என்ற ஒன்று இல்லவே இல்லை.
இனக்குழுச் சமூகங்கள் மட்டுமே அன்று இருந்தன. பகவத் கீதை இந்து மதத்தின்
புனிதநூல் என்று சில மூடர்கள் உரிமை
கூறுவதனாலேயே, அது இந்து மதத்தின்
புனித நூல் ஆகி விடாது.
இன்று இந்து மதம் எனும்போது வேதத்தை எதிர்த்த, கடவுள் இல்லை என்ற எல்லோரையுமே இன்று இந்துமதம் என்று அடையாளப்படுத்திவிண்டார்கள். ஒவ்வொரு மதமும் தனி தனி மதமாகவேண்டிய காலமும் தேவையும் நெருங்குகிறது. இன்று லிங்காயத்துக்கள் கர்னாடகாவில் கோரிக்கை வைக்கிறார்கள். அதேபோல் ஒவ்வொருவரும் கோரிக்கை வைத்தால் பார்ப்பனீய வைதீகத்தை ஒழித்துக்கட்ட முடியும்.
கீதையின் சாரம் என்பது வருணாசிரமம்.
நால்வகை வருணத்தை நியாயப் படுத்துவதே கீதை.
"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் " என்று
கீதையில் பகவான் கூறுகிறார் என்று எழுதிவைத்துள்ளார்கள். இதன் பொருள்,
"நால் வகை வருணத்தையும் உண்டாக்கியவன் நானே"
என்பது இதன் பொருள்.
வருண ஒழுக்கம் நிலை பெற வேண்டும்,
அந்தந்த வர்ணத்தினர் அந்தந்த ஒழுக்கங்களைக்
கடைப்பிடிக்க வேண்டும் என்பதே கீதையின் சாரம். சுருங்கசொன்னால் பார்ப்பனர் மேல் சாதியாகி மற்றவனை அடிமைப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். அதற்காக நால் வர்ணத்திற்கும், கடவுள் இதை படைத்து இட்ட பணிகள் இவை என்று சட்டமே இயற்றிவைத்துள்ளார்கள். இதை கூறுவதுதான் மனுநீதி. மனுதர்மம் படிக்காதவர்கள் கடைகளில் மனுதர்மம் தமிழிலேயே உள்ளது ஒருமுறை படித்துவிடுங்கள்.
மானுட சமூகம் பல்வேறு கட்டங்களைக்
கடந்து வந்திருக்கிறது. தற்கால உலக சமூகத்தில்
மக்களைப் பிளவு படுத்துகிற சக்தியாக மதம்
இருக்கிறது.
எனவே கீதையை ஒரு மதநூல் என்று
குறிப்பிடுவதன் மூலம், அதன் தீங்கான
அழிவுகரமான சாதிய உள்ளடக்கத்தை
மூடி மறைக்கும் முயற்சிகள்தாம் நடைபெற்று
வருகின்றன. கீதை ஒரு மதநூல் என்று கூறுவதன் மூலம்
அதன் சாதியப் ஏற்றத்தாழ்வுகளை ஆதரிக்கும்
முயற்சிகள் தவறானவை.
எவன் ஒருவன் சாதியை எதிர்க்க
முன்வருகிறானோ, அவனால் மட்டுமே
கீதையை எதிர்க்க முடியும். எதிர்த்து
முறியடிக்க முடியும். கீதையை எதிர்ப்பது என்பது
சாதியை எதிர்ப்பது.
"இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. கீதை இந்து மதத்தின் நூல். எனவேதான்
கீதையை எதிர்க்கிறேன்" என்பவன் சாதிக்கும் அவன் மதத்திற்கும்
வக்காலத்து வாங்கும் தந்திரக்காரனே.


No comments: