Friday, July 13, 2018

"32 வயசுக்கு மேல ஆகி" கல்யாணம் பண்ணாத கவுண்ட பசங்க

கொங்கு சமுதாய சொந்தங்களுக்கு வணக்கம்...

8.7.18 நடந்த மணமாலை விழா ரொம்ப வேதனையாக முடிந்தது ....

கொங்கு சமுதாயம் எடுத்த முயற்ச்சி எந்த வகையிலும் வெற்றி பெறவில்லை என்பது பலபேர் போண் மூலமகா விமர்சனம் செய்தனர். காரணம் யாரும் இனி வரும் காலங்களில் தவறுகள் சரி செய்யபடும்..

ஆண்களின் ஜாதகம் 4568க்கு பெண்களின் ஜாதகம் 117 தான்.பதிவு

34 வயசுக்குமேல் உள்ள ஆண்களின்
வாழ்க்கைகாக அணைத்து சொந்தங்களும் ஒன்றுனைந்து இந்த விழாவை நடத்தினோம் ஆனால்
34 வயசுக்குமேல் உள்ள ஆண்களுக்கு 100 பேருக்கு 30 பெண்களே உள்ளனர்
என்பது மிக தெளிவாக தெரிகிறது..
மீதி 70 ஆண்களின் வாழ்க்கை கேள்வி குறிதான்... 
இவர்களின் வாழ்க்கைக்கான விடியலை தேடி சொந்தங்களின் உதவியுடன் தனது பணியை கொங்கு சமுதாயம் செய்துகொண்டே இருக்கும்.....
விழாவில் கலந்து கொண்ட
அனைத்து கொங்கு சொந்தங்களுக்கும் நன்றி..

என்ன காரணத்தினால் இந்த நிலை 1980 களில் என்ன நடந்ததால் இந்த நிலை? வரதச்சனை பிரச்சனை.... அதனால் ஏற்பட்ட கரு சிதைவே காரணம்.. 

முதலில் பெண்கள் 20 பர்செண்ட் குறைவு. அடுத்து பணக்காரர்களுக்கும் மட்டுமே பெண் குடுப்பர்.பெண் வீட்டார் நினைப்பது தங்கள் பெண் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எண்றுதான் எதிர்பார்ப்பாங்க.பணவசதி குறைந்தவர்கள் படிப்பு கம்மியானவ.ர்கள் விவசாயம் செய்யும் இளைஞர்கள் இவர்களுக்கு பெண் இல்லை.அவர்களுக்கு ஒரு வாழ்க்கை வேண்டுமே

தயவுசெஞ்சு "32 வயசுக்கு மேல ஆகி" கல்யாணம் பண்ணாத கவுண்ட பசங்க(பெரிசுக) இனிமேலும் ஒரு கவுண்ட பொம்பள(பொண்ணு) பொண்டாட்டியா கெடைப்பா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைச்சிட்டு இருந்தீங்கீனா உங்களவிட "கேனையனுக" நம்ம கொங்குநாட்டுலையே யாரும் இருக்கமுடியாது..எவ கெடைச்சாலும் கூட்டீட்டு போயி கல்யாணம் பண்ணிக்கிங்க...இல்ல சாதிதான் முக்கியம்னு நெனைச்சீங்கின்னா யாராவது கல்யாண பத்திரிக்கை குடுத்தா போயி நல்லா சாப்ட்டுட்டு மட்டும் வந்துருங்க.. "கொங்குசுயம்வரம்" நிகழ்ச்சிய கேள்விப்பட்டு திருப்பூர் அண்ணாநகர்ல பல்லாயிரக்கணக்கான கொங்கு ஆம்பளைங்க வந்து அண்ணாநகருக்கு தெற்கே அஞ்சு கிலோமீட்டாருக்கும், வடக்கே அஞ்சு கிலோமீட்டருக்கும் டிராபிக்ஜாம் ஆகி ஒட்டுமொத்த திருப்பூரே ஸ்தம்பித்துவிட்டது...ஆனா கொங்கு பொண்ணுக ஒண்ணுகூட வரல..பல லட்சங்கள் செலவு பண்ணி போடும் "கொங்கு மாநாட்டுக்கு" கூட இத்தனை கூட்டம் கூடாது!! இதில் நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விசயம் ஆயிரக்கணக்கான கவுண்ட பசங்க கல்யாணம் ஆகாமல் சுத்திக்கொண்டிருக்கிறார்கள்...எவ கெடைச்சாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க வாழ்க்கைய பாருங்க...பங்காளிக ஊட்டுல பேசுவானுக... மாமன்,மச்சான் ஊட்டுல பேசுவானுக...சுத்தி இருக்குற சொந்தங்காரனுக பேசுவானுகனு கல்யாணம் பண்ணாம சும்மா இருந்தீங்க.. சாகற வரைக்கும் கல்யாணம் பண்ணாம "சொம்பையா" இருந்துட்டு சாகவேண்டியதுதான்...நாம வேற சாதி பொண்ண கல்யாணம் பண்ணுணா..நம்மள கேவலமா பேசுற எந்த கவுண்டனும் அவன் வீட்டு பொண்ண நமக்கு கல்யாணம் பண்ணி வெக்கமாட்டானுக...அதுனால மாப்ளைகளா..உங்களுக்கு புடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற வழிய பாருங்க..!!!


No comments: