Thursday, July 12, 2018

உலகத்திலேயே படைச்சவன்கிட்ட பேசுறதுக்கு பாஷை கண்டுபிடிச்ச நாடு நம்ம நாடுதான்.

உலகத்திலேயே படைச்சவன்கிட்ட 
பேசுறதுக்கு பாஷை கண்டுபிடிச்ச 
நாடு நம்ம நாடுதான்.
எவ்வளவு பெருமையா இருக்கு/
அதுவும் அந்த பாஷை குறிப்பிட்ட 
ஒரு சமூகத்திற்கு மட்டும்தான் 
தெரியுமாம்.அந்த பாஷையில 
அர்ச்சனை ,பூசை, புனஸ்காரம் 
பண்ணுனா மட்டும்தான் கடவுளுக்கு 
புரியுமாம். அவரும் மனப்பூர்வமா 
அதை ஏத்துக்கிடுவாராம். வேற 
பாஷையெல்லாம் அவருக்கு 
தெரியாதாம்.
அடப்பாவிகளா/நீங்க மட்டும் இங்கிலீஷ்,ஹிந்தி,குஜராத்தி,மராட்டி,
அது இதுன்னு கத்துகிட்டு கடவுள 
கத்துக்குட்டியா ஆக்கிட்டீங்களே/
கடவுளுக்கு கல்யாணம் முடிச்சி வைக்கிறீங்க,தேர்ல வைத்து ஊரை 
சுற்றி காட்டுறீங்க, சில கடவுளுக்கு 
சந்தோஷத்தை உண்டு பண்ண 
கூத்தியாள் வீட்டுக்கெல்லாம் கொண்டு விடுறீங்க, பாலாபிஷேகம்,
தேனாபிஷேகம்,அப்படீன்னு பல 
அபிஷேகங்களை நடத்தி உச்சி குளிர வைச்சிட்டு ஊர்ல உள்ள 
ஜனங்க பேசுற பாஷையில ஒன்னு 
கூடபடிச்சி கொடுக்காம விட்டுட்டீங்கீளே/இது கடவளுக்கு 
செய்கிற துரோகமா ஒருத்தருக்கு 
கூட தெரியலையா?😒😒😒😒

No comments: