Tuesday, July 10, 2018

திராவிட இயக்கங்கள் அயோத்தி தாச பண்டிதரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடிப்பு செய்ததா?


திராவிட இயக்கங்கள் அயோத்தி தாச பண்டிதரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடிப்பு செய்ததா?
திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் நீதிக்கட்சி வரலாறு அயோத்தி தாசர் வரலாறு ரெட்டைமலை சீனிவாசன் வரலாறு எல்லாம் வைக்கப்பட்டது. அப்போது பார்ப்பனர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தினமணியில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சு விதைப்பதாக எழுதினார்கள். ஜெயலலிதா ஆட்சியில் சமச்சீர் கல்வியை ஒழிக்க குழ அமைத்தார்கள். அதில் பார்ப்பனர்களை நியமித்து திருவள்ளுவர் படத்தைக்கூட மறைத்தார்கள். நீதிமன்றத் தீர்ப்பின்படி சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப் பட்டாலும் பார்ப்பன சூழ்ச்சியால் நம் தலைவர்களின் வரலாறுகள் இருட்டடிக்கப்பட்டன.
இப்படி பார்ப்பனர்கள் நம் தலைவர்களின் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லியே தரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் போது அதனைக் கண்டிக்க வக்கில்லாமல் திராவிட இயக்கம்தான் அயோத்தி தாசரையும் ரெட்டைமலை சீனிவாசனையும் இருட்டடித்தது என்று பேசுவது என்ன வகையில் சேர்த்தி என்பது தெரியவில்லை

No comments: