Thursday, July 12, 2018

குதிரை வண்டியில் வந்தால் எரிகிறது என்றால் பார்ப்பன தன்மை உன்னை ஆழ்கிறது என்று அர்த்தம்

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட விட மாட்டேன் என்ற அதே ஊரில்
பன்றிக்கு பூணுல் போடுவோம் என்ற அதே ஊரில்
மாநாட்டு பதாகைகள் மாட்டு சாணத்தால் மதவாதிகள் அளித்தபோதும்
அதே இடத்தில்
திராவிடர் கழகத்தின் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர்
ஆயிரமாயிரம் திராவிட இளைஞர்கள் சூழ,
குடந்தை நகரில் சாரட் வண்டியில்
பவனி வருகையில்,
தமிழர் உள்ளமெல்லாம் மகிழ்கிறது.
பார்ப்பனீய நஞ்சூறிப் போன நெஞ்செல்லாம்
நெருப்பு வைத்த பஞ்சைப் போல் எரியுது.
அன்றைக்கு
(ஈரோடு திராவிடர் கழக மாநாடு -1948 அக்டோபர்)
பெரியார் அண்ணாவை சாரட் வண்டியில் அழைத்துவந்த போதும்
அப்படித்தான் பார்ப்பனியத்தின் அடிவயிறு
பற்றி எரிந்தது
-
இன்று
குடந்தை திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழா மாநில மாநாடு (8.7.2018) ஆசிரியர் குதிரை வண்டியில் வந்தால் எரிகிறது என்றால் பார்ப்பன தன்மை உன்னை ஆழ்கிறது என்று அர்த்தம்.

No comments: