Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (37)

அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இல்லாது ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரால் கொண்டு வரப்பட்டதே பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். தமிழகம் எங்கும் 237 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. தலித்துகள் 40%, பிற்படுத்தப்பட்டவர்கள் 25%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25%, மற்ற வகுப்பினர் 10% என்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. சாலை வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பூங்கா, கல்விக் கூடங்கள், பொது மயானம் எனக் குடியிருப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.

மதுரை மாவட்டம், மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட தினம் இன்று. (17.08.2018)


Update: இன்றைய நிலை
https://twitter.com/srikkanthdTOI/status/1027097475113398272



No comments: