Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (57)

காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளித்ததில் பெரும் தொழிலதிபர்களும், பண்ணையார்களும் கணிசமான பங்கு  வகித்தனர். நிலச்சீர்திருத்தம் குறித்துப் பேசி வந்தாலும், அதற்காக காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை.

கடுமையான போராட்டங்களின் விளைவாக 1961-இல் தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு தனி நபருக்கான நில உச்ச வரம்பாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பயனில்லை.

1970-ல் திமுக அரசு மிகுந்த துணிச்சலோடு உச்சவரம்பிற்கான அளவை 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைத்தது. இதன் மூலம் கணிசமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

No comments: