Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (39)

தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவின் அவசியம் குறித்துத் தமது ‘குடி அரசு’ இதழில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார், தந்தை பெரியார்.

சென்னை கவர்னரின் மனைவியை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று குப்புசாமி அய்யர் காட்டியதாகவும், அவருக்கு அந்தப் பெண்மணி நன்றி கூறியதாகவும் கிடைத்த செய்தியை வைத்து ‘குடி அரசு’ இதழில் எழுதப்பட்ட தலையங்கத்தில், “நமது மதத்துக்கு விரோதமாய்ப் பிரச்சாரம் செய்பவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கும் நீங்கள், நமது மதத்தில் உள்ளவர்களைக் கோயிலுக்குள் விட மறுப்பது ஏன்?” என்று கேட்கிறார்.
(குடி அரசு, 17.01.1926)

No comments: