Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (59)

திருக்குறளும் தந்தை பெரியாரும்!

1928 ஆம் ஆண்டு முதல் பெரியார், திருக்குறளை எழுத்துகள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் மக்களிடையே தீவிரமாகப் பரப்பினார்.

1948 ல் சென்னையில் மிகப்பெரிய முதல் திருக்குறள் மாநாடு நடத்தினார். 'திருக்குறள் நாள் ' கொண்டாடச் செய்தார்.

1952 ல் 10000 திருக்குறள் புத்தகங்களை அச்சடித்து நான்கு அணா விலையில் தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.

இதன் விளைவாக, தமிழகப் பள்ளிகளிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும், நூல்களிலும் திருக்குறள் சிறந்த செல்வாக்கு பெற்றது.

"நீங்கள் என்ன சமயத்தவர் என்று கேட்டால், வள்ளுவர் சமயம் என்று சொல்லுங்கள். உங்கள் நெறி என்னவென்றால் குறள் நெறி என்று கூறுங்கள். அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் எதிர்நிற்க மாட்டான். யாரும் குறளை மறுக்க முடியாததே இதற்குக் காரணம்".

- பெரியார்.

No comments: