Saturday, March 09, 2019

மகா சிவராத்திரி அன்று உடம்பில் மிகப்பெரிய சக்தி தூண்டுதல் ஏற்படுமாம்

மகா சிவராத்திரி அன்று உடம்பில் மிகப்பெரிய சக்தி தூண்டுதல் ஏற்படுமாம், அதனால் அன்று விழித்திருந்து கொண்டாட வேண்டும், ஈஷாவுக்கு வாருங்கள், சிவனை வழிபடுங்கள், ஆனந்தம் பெறுங்கள் என்கிறார் கார்ப்ரேட் சாமியார் ஜக்கி.

உலக அளவில் அறிவியல் துறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது, அறிவியல் சிவராத்திரி நாளில் சக்தி தோன்றுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறதா? இவை எல்லாமே பொய், புளுகு மூட்டைகள் என்பதை தவிர வேறென்ன,
நம் அன்றாட வாழ்வில் சாதகம், சோசியம் என்ற பெயரில் மற்றும் பல வழிகளில் மக்களளை மூடநம்பிக்கையில் தள்ளி பார்ப்பனிய வர்க்கங்கள் தமது பணப்பெட்டியை நிறைத்துக் கொள்வதற்கான வழி தானே இந்த மகா சிவராத்திரி கொண்டாட்டம். மக்களை சாதிகளாக பிரித்தது இந்து பார்ப்பனியம். இதற்கு மதச் சார்பற்றவராக இருக்க வேண்டிய குடியரசு தலைவர் மத பரப்புரை செய்ய வருகிறார். சாதி எதுவாக இருந்தாலும் பார்ப்பனியத்தை பரப்புவதில் மேல் தட்டு வர்க்கங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள் என்பது தான்.

பார்ப்பனிய வர்க்கங்கள் இந்தியா முழுதும் சாதிய ஒடுக்குமுறை, தேசிய இன, மொழி ஒடுக்குமுறைக்கு வடிவமாக இருப்பது தான் இந்த இந்து மதம் என்பது தான். சிவராத்திரி என்பதெல்லாம் பார்ப்பனிய வர்க்கங்கள் மக்கள் மீது உயர்சாதி ஆதிக்கம் செய்வதற்கும் இந்து, இந்தியா என்ற பெயரில் கார்ப்ரேட்கள் பல்வேறு தேசிய இன மக்களை கொள்ளையடிப்பதற்குமான ஏற்பாடே தவிர வேறில்லை.

No comments: