Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (73)

இந்திய விடுதலைக்குப் பின்னர், குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும், விடுதலை நாளன்று பிரதமரும் தில்லியில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். ஆனால், மாநிலத் தலைநகரங்களில் இந்த இரண்டு நாட்களிலும் ஆளுநரே தேசியக்கொடியினை ஏற்றி வந்தார்.

1969 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 5 அன்று கலைஞர், “விடுதலை நாள் விழாவில் மாநிலத் தலைநகரங்களில் தேசியக்கொடியேற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும்" என்று நடுவண் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். பிரதமர் இந்திரா காந்தியும் இதனை ஏற்றார். 1974 ஆகஸ்ட் 15 அன்று, புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கலைஞர் கொடியேற்றினார்.

இந்தியாவில் உள்ள முதலமைச்சர்கள் இந்த உரிமையை இன்று பெற்றிருப்பது கலைஞராலேயே !

தொடர்புடைய இணைப்புகள்:

https://www.thehindu.com/news/national/tamil-nadu/karunanidhi-secured-a-precious-right-for-all-the-chief-ministers/article24548803.ece

https://www.indiatoday.in/amp/india/story/karunanidhi-independence-day-national-flag-1308750-2018-08-08

No comments: